உயர் ரத்த அழுத்தம் உள்ளதா? தடுப்பது எளிது !

உங்களுக்கு 30 வயது ஆகி விட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது உயர் ரத்தஅழுத்தம் (Hypertension) உள்ளதா?
உயர் ரத்த அழுத்தம் உள்ளதா? தடுப்பது எளிது !
நீங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பரபரப்பாகப் பணி செய்பவரா? புகை பிடிப்பவரா? மதுப்பழக்கம் உண்டா? தொப்பை உள்ளதா? 
ரத்தத்தில் கொழுப்பு அதிகமா? நீரிழிவு இருக்கிறதா? மனதில் அமைதி இல்லையா? எதற்கெடுத்தாலும் எரிச்சல் படுகிறீர்களா?

அடிக்கடி கோபம் வருகிறதா? இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு ‘ஆம்’ என்று பதில் சொன்னாலும் உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

இன்றைக்கே மருத்துவரிடம் சென்று உங்கள் ரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல ரத்தமானது ரத்தக் குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும் போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்தி லிருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. 
சுற்றுலா சென்ற பிரான்ஸ் ஜனாதிபதியின் புகைப்படங்கள் !
இந்த வேகத் துக்குப் பெயர் தான் ரத்த அழுத்தம் (Blood pressure). பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்க்குரி என்று இருந்தால், அது நார்மல்.

இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure). அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும் போது ஏற்படுகின்ற அழுத்தம். 

இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறார்கள். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure).. .

அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. 

அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதை விடக் குறைவாக இருக்கும். இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள்.
சந்திரனுக்கு பயணிப்பதற்கான முயற்சியை பற்றிய முதல் கதை !
30 வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். 

இதில் 120 என்பது சுருங்கழுத்தம்... 80 என்பது விரிவழுத்தம். இது எல்லோரு க்குமே சொல்லி வைத்தாற் போல 120/80 என்று இருக்காது. 

ஒரே வயது தான் என்றாலும் ஆளுக்கு ஆள், உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப் படுவது போல, சுருங்க ழுத்தமும் விரிவழுத் தமும் சற்று வித்தியாசப் படலாம்.

ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது.
ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் செய்த சாகசம்
இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்று சொல்கிறது.

ரத்த அழுத்தம் அதிகரிப்பது ஏன்?
ரத்த அழுத்தம் அதிகரிப்பது ஏன்?
ரத்த அழுத்தத்தை ஒழுங்குப் படுத்தி நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இவற்றின் பயனாக, உடலில் இயல்பாகவே ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. 
2 அவித்த முட்டையின் விலை ரூ.1,700 இதிலென்ன தப்பு !
இந்தச் சங்கிலி அமைப்பில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்து விடும்.

சிலருக்கு இது தற்காலி கமாகவும், பலருக்கு நிரந்தர மாகவும் அதிகரிக்கும். இவர்கள் தான் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்.

தற்காலிக உயர் ரத்த அழுத்தம்
தற்காலிக உயர் ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் என்பது உடலில் மாறிக் கொண்டே இருக்கும். நிற்கும் போது, உட்கார்ந் திருக்கும் போது அல்லது படுத்திருக்கும் போது எடுக்கப்படும் ரத்த அழுத்த அளவுகளில் சற்று வித்தியாசம் இருக்கும். 
இதுபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, உறக்கம், உடற் பயிற்சி போன்ற வற்றுக்குத் தகுந்தவாறு ரத்த அழுத்தம் சிறிது அதிக மாகவோ, குறைந்தோ காணப்படும்.

உதாரணமாக, ரத்த அழுத்தமானது உறங்கும் போது சற்றுக் குறைந்தும், உணர்ச் சிவசப்படும் போது மிக உயர்ந்தும், காலை நேரத்தில் இயல்பாகவும், மாலை நேரத்தில் சிறிது உயர்ந்தும் காணப்படும்.

இது தற்காலிக மாற்றமே. உடல் ஓய்வு கொள்ளும் போது ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். 

கர்ப்ப காலத்தில் சில பெண்களு க்குத் தற்காலிக மாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குழந்தை பிறந்தவுடன் இது இயல்பு நிலையை அடைந்து விடும். 
சேலஞ்சிற்கு மறுத்த நபரின் வங்கி கணக்கை வெளியிட்டு மிரட்டிய மோமோ !
ஆகவே, ஒருவருக்கு முதல் முறையாக ரத்த அழுத்தத்தை அளக்கும் போது, ஒரே ஒரு முறை மட்டும் அளந்து விட்டு, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது.

நிரந்தர உயர் ரத்த அழுத்தம்
நிரந்தர உயர் ரத்த அழுத்தம்
பொதுவாக, வயது கூடும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பருமன், நீரிழிவு, சிறுநீரக நோய், பிறவியில் ரத்தக்குழாய் பாதிப்பு, அதிக ரத்தக் கொழுப்பு, புகை, மதுப்பழக்கம் .
தினமும் சிறிதளவு ஒரு கோப்பை மது ஆரோக்கியமா?
உள்ளவர்கள், மன அழுத்தம், உறக்க மின்மை போன்ற பாதிப்பு உள்ளவர்கள், ஓய்வி ல்லாமல் பணிபுரி கிறவர்கள் ஆகியோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பது வாடிக்கை.

மருத்து வர்கள், ஒருவருக்கு உண்மையான ரத்த அழுத்தத்தை அறிய, தொடர்ந்து சில நாட்களு க்கு 5 அல்லது 6 முறை ரத்த அழுத்தத்தை அளக்கி றார்கள். 
அவற்றில் 3 அல்லது 4 அளவுகள் 140/90க்கு மேல் இருந்தால், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக் கிறார்கள்.

தனித்த உயர் ரத்த அழுத்தம்
தனித்த உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தத்தில் ஒரு சிறப்பு வகை இருக்கிறது. அதற்கு தனித்த உயர் ரத்த அழுத்தம் (Isolated Systolic Hypertension) என்று பெயர். 

அதாவது, இதில் சிஸ்டாலிக் அழுத்தம் மட்டும் 180க்கு மேல் இருக்கும்... டயஸ்டாலிக் அழுத்தம் சரியாக இருக்கும்.இப்படி இருப்பதை ‘தனித்த உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம்.
இனி உலகில் கொசு என்ற உயிரினமே இருக்காது
இதயத்துக்கு அதிகம் சுமை தந்து, இதயம் செயல் இழப்பதை ஊக்குவிக்கின்ற மோசமான ரத்த அழுத்தம் இது. பொதுவாக வயதானவர் களுக்குத் தான் இது ஏற்படும். 

ஆனால், சர்க்கரை நோயாளி களிடம் இது இளம் வயதிலேயே காணப் படுகிறது. இவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, மறதி நோய் மற்றும் இறப்பு விகிதமும் அதிகரிக்கும்.

அறிகுறிகள் என்னென்ன?
அறிகுறிகள் என்னென்ன?
தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும் போது மூச்சு வாங்குதல், நெஞ்சுவலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை 
எப்படி புயலுக்கு பெயர் சூட்டுகிறார்கள்?
உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள். பெரும்பாலோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது.

திடீரென்று மயக்கம், பக்கவாதம், மாரடைப்பு என்று ஏதாவது ஒன்று வந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். 

உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதால் இதற்கு ‘சைலன்ட் கில்லர்’ (Silent Killer) அதாவது, ‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ என்று ஒரு பட்டப் பெயரே இருக்கிறது.

பாதிப்புகள் என்னென்ன?
பாதிப்புகள் என்னென்ன?
உயர் ரத்த அழுத்தத்தை கால முறைப்படி டாக்டரிடம் சென்று அளந்து கொண்டு, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள தவறினால் உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வந்து விடும். 

இது இதயத்தை பாதிக்கும் போது இதயம் வீங்கி விடும். அது துடிப்பதற்கு சிரமப்படும். மாரடைப்பு வரும்.

மூளை பாதிக்கப்படும் போது பக்கவாதம் வரும். மறதி நோய் வரும். மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுமானால், மயக்கம் மற்றும் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 

இது கண்ணைப் பாதித்தால், திடீரென பார்வை பறி போய் விடும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் களுக்கு சிறிது சிறிதாக சிறுநீரகங்கள் கெட்டுப் போகும்.

ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முழுவதுமாக செயல் இழந்து விடும். 30 வயது ஆனவர்களும் குடும்பப் பின்னணியில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் வருடம் தவறாமல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது அவசியம். 
காலம் கடந்து கண்டு பிடிக்கிற போது, உடலில் வேறு சில பாதிப்பு களும் சேர்ந்து கொள்கிறது. 

உயர் ரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத் திலேயே தெரிந்து கொண்டால் மாத்திரை இல்லாமலும் சமாளிக்கலாம்.

உப்பைக் குறைக்கவும்!
உப்பைக் குறைக்கவும்!
உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது. 

உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக்கண்டம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர், சேவு, சீவல் போன்ற நொறுக்குத் தீனிகள், 
தர்ப்பூசணி மசாலா ஜூஸ் செய்வது
பதப்படுத்தப் பட்ட பாக்கெட் உணவுகள், விரைவு உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளை தவிர்க்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings