எப்படி புயலுக்கு பெயர் சூட்டுகிறார்கள்?

புயலுக்கு அது மையம் கொண்ட வானியல் ரீதியான புள்ளி விவர த்தைக் கொண்டே பெயரிடப் பட்டு வந்தது. அல்லது தொழில் நுட்ப த்தை அடிப்படை யாகக் கொண்டே அது எந்த மாதிரியான புயல் என குறிப்பிடப் பட்டு வந்தது.
எப்படி புயலுக்கு பெயர் சூட்டுகிறார்கள்?
இதைக் குறிப்பிடுவ தற்கும், செய்தியாக மாற்று வதற்கும், ஆவணப் படுத்துவதற்கும் மிகவும் கடினமாக இருந்ததால் பின்னர், 

புயல் தோன்றும் காலத்தை ஒட்டி, நடக்கும் முக்கிய நிகழ்வு களின் பெயர்களில் புயல்கள் அழைக்கப் பட்டன.

1900-க்குப் பின்னர் தான், புயலுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் உலக அளவில் தோன்றியது. 

ஆரம்ப த்தில், பெண்களின் பெயர் தான் புயலுக்கு வைக்கப் பட்டு வந்தது. 1979-க்குப் பின்னர் தான், ஆண்கள் பெயரிலும் பெயர் வைக்கப் பட்டது.
இதன் பின்னர், ஒவ்வொரு கடல் பகுதி ரீதியாக புயலின் பெயர் ஏற்கெ னவே முடிவு செய்யப் பட்டு பட்டியல் தயாரிக்கப் பட்டது.
பசிபிக் கடல் பகுதி, வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதி என வெவ்வெறு கடல் பகுதிக்கு தனித் தனியே பெயர் பட்டியல் தயார் செய்து வைக்கப் பட்டிருக்கிறது. 

2021-ம் ஆண்டு வரைக்கு மான பட்டி யலை இப்போதே தயார் செய்து வைத்திருக் கிறார்கள். 

இதே போல, இந்தியப் பெருங்கடல் பகுதி க்கும் புயல் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஏற்கெனவே தயாரித்து வைக்கப் பட்டிருக் கிறது. வட இந்திய கடற் பகுதியில் உள்ள நாடுகள் புயல்களின் பெயர் களைத் தீர்மானிப் பார்கள்.

அதன்படி தற்போது வங்கக் கடலில் உருவாகி உள்ள புயலுக்கு 'நாடா' என்று பெயரிடப் பட்டுள்ளது. ஓமன் நாட்டு வானிலை இலாகா அதிகா ரிகள் பரிந்துரைப் படி, 

இந்த புயலுக்கு நாடா என பெயர் சூட்டப் பட்டுள்ளது. லத்தீனைப் பூர்வீக மாகக் கொண்ட இந்த வார்த் தைக்கு, ஒன்று மில்லை (nothing) என்று பொரு ளாகும்.
Tags:
Privacy and cookie settings