இனி சாலையோரக் கடையிலும் ஸ்வைப்பிங் !

‘பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று மோடி அறிவித்த நாளிலி ருந்து அதிகம் பாதிக்கப் பட்டிருப் பவர்கள் சிறுவணி கர்களும், குறு வியாபாரி களும் தான். 
சாலையோர கடையிலும் ஸ்வைப்பிங்
கடந்த இரண்டு வாரங்களில் அவர்கள் அனு பவித்த கஷ்டம் கொஞ்ச நஞ்ச மில்லை. 

மரணம் நிகழ்ந்த வீட்டில் மெல்ல மெல்ல ஒவ்வொ ருவராக இயல்பு நிலைக்குத் திரும் புவது போல அரசின் நடவடிக்கை களுக்கு தங்களையும், வியாபார த்தையும் மாற்றிக் கொண்டு வருகின் றனர் இவர்கள். 

இதன் உச்ச கட்டம் தான் சாலையோர காய்கறிக் கடைகளில் தொங்க விடப் பட்டிருக் கும் இந்த அறிவிப்பு, ‘we accept all major credit and debit cards’.
‘‘500, 1000 ரூவா செல்லா துன்னு மோடி அறிவித்த மறு நாளே இந்த மெஷினைப் பயன் படுத்த ஆரம்பிச் சிட்டேன். ஒரு நாளைக்கு 100 பேருக்கும் மேல கார்டு மூலமாத் தான் பர்ச்சேஸ் பண்றாங்க.
200 ரூபாய்க்கு மேல பர்ச்சேஸ் பண்ணா கார்டுல தான் பணம் வாங்கு றேன். முதல்ல எல்லாம் பேரம் பேசுவாங்க. ஃப்ரீயா ஒரு பழம் தாங்கனு கேட்டு வாங் கிட்டுப் போவாங்க. எப்பவும் பரபரப்பா இருக்கும். 

இப்ப கார்டுல தேய்க்கற தால அவங்களோட நடவடி க்கைல கொஞ்சம் மாற்றம் தெரியுது. 

சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு’’ என்று சந்தோஷம் பொங்க பேசுகிறார் கோயம்பேடு மார்க் கெட்டில் பழ வியாபாரம் செய்து வரும் விநாயகம்.

‘‘கல்லாப் பெட்டில பணத்தைப் பார்த்து சந்தோஷ ப்படுற ஆளுங்க நான். பத்தாயிர த்தை பத்து முறை எண்ணிப் பார்த்து பூரிச்சுப் போவேன். இப்பலாம் பணமே கைக்கு வர்றது இல்லை. 

2000 ரூபா நோட்டு மட்டும் ரெண்டு இருக்கு. அதை அப்போ அப்போ எடுத்து பாத்துட்டு வச்சிடுறேன். 

மத்தபடி எல்லா கொடுக்கல் வாங்கலும் பேங்க் மெஷின் தான். மக்கள் 500, 1000 கொண்டு வந்தாலும் வாங்கிக் கிறேன்.
அதுக்கான கடைசி நாள் முடியுற வரைக் கும் வாங்க லாம்னு இருக்கேன். அப்படி வாங்க லைன்னா வியாபாரமே ஆகமாட் டேங்கிது. 

மொத்த வியாபாரம் செய்யுறவங் களுக்கு பணப் பிரச்னை இல்லை. சில்லறை வணிகம் தான் ரொம்ப தடுமாறுது’’ என்கிறார் தேங்காய் வியாபாரம் செய்யும் கணேசன்.

‘எனக்கு எழுதப் படிக்கத் தெரியா துங்க. ஒரு நாளை க்கு 10 ஆயிரம் வரை க்கும் வியா பாரம் ஆகும். 

அதுல 2 ஆயிரத்தை பேங்க்ல வைப்பேன். 500, 1000 ரூபாய் செல்லா துனு அறிவிப்பு வந்த முதல் வாரத்துல வெறும் 200 ரூபாய் க்குத் தான் விற்பனை ஆச்சு. ரொம்ப கஷ்டப் பட்டேன். 

பொறுத்துப் பொறுத்துப் பார்த் துட்டு கணக்கு வச்சிருந்த பேங்க்ல ஐடியா கேட்டேன். இந்த மெஷினைக் கொடுத் தாங்க. 

இப்ப வியாபாரம் நல்லா இருக்கு’’ என்று உற்சாக மாகச் சொல்கிறார் காய்கறி வியாபாரி யான சிவன்.

இந்த மாற்ற த்தை நுகர்வோ ர்கள் எப்படி எதிர் கொள்கிறார் கள்? மளிகை வாங்க வந்த ராஜேந்திர னிடம் கேட்டோம் ‘இதுக்கு முன்னாடி மார்க்கெட் வரேன்னா எவ்வளவு செலவு செய்றோ ம்னு கணக்கு தெரியும். 

1000 ரூபாய் கொண்டு வந்தா, பல கடைகள்ல பேரம் பேசி பொருளை குறைஞ்ச விலை யில வாங் கிட்டுப் போவேன். 20 ரூபாய்க்கு வெங்காயம், 15 ரூபாய்க்கு தக்காளினு கணக்குப் போட்டு வாங்குவேன்.
இனி  சாலையோரக் கடையிலும் ஸ்வைப்பிங்
கையில காசு இருந்தப்ப பார்த்துப் பார்த்து செலவு செய்வேன். இப்போ கார்டுல தேய்க்கற தால கணக்கு தெரியலை. இப்படியே போனா வரம்பு இல்லாம செலவு செய்ய வேண்டி வரும்.

சிக்கனமா இருக்க ணும்ங்கிற மனப் பான்மையே இல்லாமப் போயிடும் போல’’ என்கிறார் அவர். 

தமிழ்நாடு வணிகர் கள் சங்கப் பேரமைப்பு செயலா ளர் விக்ரமரா ஜாவிடம் இது பற்றிக் கேட்ட போது, ‘‘எங்களுக்கு வேறு வழி இல்லை. 

வங்கிப் பரிவர்த்த னையைக் கடைப் பிடித்தே ஆக வேண்டும். அரசு எடுக்கும் முடிவு க்குத் தயாராக உள்ளோம். 

சிறிய தொகை பணப் பரிமாற்றம் என்றாலும், அதை முறை யாகச் செய்யத் தயாராக இருக்கி றோம். 
ஆண்கள் இரவில் உடை இல்லாமல் தூங்க வேண்டுமா?
அதே போல சில்லறை வணிகர்க ளுக்கும், சிறு வியாபாரி களுக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். முறை யான, சாதகமான வரி விலக்கு தர வேண்டும். 

வங்கி சார்ந்த நடவடிக் கைகள் மற்றும் கார்ட் மெஷினை எப்படிப் பயன் படுத்த வேண்டும் என்று பயிற்சி தர வேண்டும். 

அடுத்த வாரம் எங்களது மாதாந்திரக் கூட்டத் தில் கார்ட் ஸ்வைப்பிங் மெஷினைப் பற்றித் தான் பேசி முடி வெடுக்க உள்ளோம்’’ என்கிறார் அவர் நிறைவாக!... திலீபன் புகழ்
Tags:
Privacy and cookie settings