முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுமை 1948 முதல் 2016 வரை !

மக்களால் நான்.. மக்களுக்காக நான்… என முழங்கிய ஒரு வலிமையான அரசியல் ஆளுமை. ஒப்பாரும், மிக்காரும் இல்லா தலைவி ஜெயலலிதாவை 68வது அகவையில் அழைத்துக் கொண்டது காலம்.
அவரது வாழ்க்கையும், அரசியல் வரலாறும் போராட்டங் களுடனே தொடங்கியது. ஜெயராமன்- சந்தியா தம்பதிகளின் இரண்டாவது குழந்தை யாக, 1948 பிப்ரவரி 24ம் தேதி மகம் நட்சத்திர த்தில் ஜெயலலிதா பிறந்தார். 

ஜெயலலிதா பிறந்தது மைசூர் நகரில் என்றாலும், அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதா வின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி.

இவர் மைசூர் மகாராஜா வின் குடும்ப மருத்துவர். ஜெயலலிதா 2 வயது குழந்தையாக இருந்த போது அவரது தந்தை காலமானார். 

முதலில் பெங்களூர் பிஷப் கார்டன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பைத் தொடர்ந்தார்.

படிப்பில் படு சுட்டி!. 
படிக்கும் போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் மயிலை யில் நடந்தது. பிரபல வித்வான் களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக் கொண்டார் ஜெயலலிதா. 

1964ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா, தாய்மொழி தமிழைப் போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டார். 

மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும் போது, அவருடைய வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்பட்டு, திரை உலகப் பிரவேசம் நடந்தது. 

ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் தங்கை, வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திர மானார். ஜெயலலிதாவு க்கு சினிமாவில் நாட்டமில்லை. 
இருப்பினும், குடும்பநிலை காரணமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தொடக்கத்தில் சில கன்னடப் படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகி யாக நடித்து, 1965ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை தான் அவரது முதல் தமிழ்ப்படம். 

அந்தப் படத்தயாரிப்பின் போதே பி.ஆர்.பந்துலுவின் ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 

வெண்ணிற ஆடை’ படம் வெளிவருவதற்கு முன், ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த ’எபிசிள்’ என்ற ஆங்கிலப் படத்தில் ஜெயலலிதா நடித்தார். 

திரையுலகின் ஆரம்பம் முதலே புகழின் உச்சம் தொட்டார். ஜெயலலிதா வின் தாயார் சந்தியா, 1971ம் ஆண்டு காலமானார். 

தாயாரின் நினைவாக போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு தனது தாய் சந்தியாவின் இயற்பெயரான வேதா நிலையம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். 

சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார் ஜெயலலிதா. சினிமா உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தார். 
அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப் படுத்தி, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார். 

ஜெயலலிதாவை, 1984ல் மாநிலங் களவை உறுப்பினராகி, நாடாளு மன்றத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலை வராகவும் பதவி வகித்தார். 

எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த போது, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. 

அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதில் ஜெயலலிதா முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அ.தி.மு.க. பிளவுபட்டது. 

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஜானகி அம்மாள் முதலமைச்சர் ஆன போதும், தொண்டர்கள் ஜெயலலிதாவு க்கே ஆதரவாக இருந்தனர். எனவே, ஜானகி அம்மாள் அமைச்சரவை 24 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்க முடிந்தது. 

அதன்பின், ஜானகி அம்மாள் அரசியலை விட்டு விலகினார். ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 

1991 தேர்தலில் அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக முதலமைச்ச ராக பதவி யேற்றார். 

2001ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்ட மன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் அரியணை ஏறினார் ஜெயலலிதா. 
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பதவி யேற்றார். 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. 

இதன் மூலம் தமிழக அரசியலில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்த வரலாறு திரும்பியது. 
இந்நிலையில் செப்டம்பர் 22ம் தேதி சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவு க்கு 75 நாள் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. 

இந்த நிலையில், 2106 ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் காலமானார் முதல்வர் ஜெயலலிதா.
Tags:
Privacy and cookie settings