மிகப்பெரிய துயரத்தில் தேமுதிக அலுவலகம் !

சட்டசபை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணிக்கு மரணஅடி கிடைத்துள்ளதால் தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் யாரும் இன்றி மயான அமைதி நிலவுகிறது. 
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை நடைபெற்றது. இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர். தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. 

தமிழக சட்டசபைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை. 

இதனால் தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. முதல் சுற்று நிலவரப்படி தேமுதிக 2.3% வாக்குகள் பெற்றிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

மேலும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி பின் தங்கியே உள்ளது. 3 தொகுதிகளில் மட்டுமே தேமுதிக முன்னணியில் உள்ளது. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

பல தொகுதிகளில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்குகளை விட தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிகவின் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடியே காணப்படுகிறது.
Tags: