கரண்ட் கட்....கேரளா, தமிழகம்.. வாக்குப் பதிவு பாதிப்பு !

கேரளாவின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. 
இதேபோல தமிழகத்திலும் பல பகுதிகளில் மழையால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு பல இடங்களில் மெழுகுவர்த்தி துணையுடன் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. 

கேரளாவின் காசர்கோடு மவட்டத்தில் பல இடங்களில் மழை காரணமாக மின்வெட்டு ஏற்பட்டு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு மிகக் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

மஞ்சேஸ்வர் பகுதியில் 14 சதவீதம், திருக்காரிபூர் 14, கன்ஹன்கோடு 14, உடுமா 14 என காலை 9 மணி வாக்கில் வாக்குகள் பதிவாகியிருந்தன. தமிழகத்திலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வாக்குச்சாவடிகளில் மின்சாரம் இல்லை. 

இதனால் குறைந்த அளவிலான வெளிச்சததிலும், மெழுகுவர்த்தி துணையுடனும் வாக்குப் பதிவு நடந்தது. அதேபோல் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர் பகுதிகளில் மழை நீர் வாக்குசாவடிகளில் புகுந்து வாக்குப் பதிவை பாதித்தது.
Tags:
Privacy and cookie settings