வாயைத் திறந்தால் நல்ல வாசம் வரும் !





வாயைத் திறந்தால் நல்ல வாசம் வரும் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ராகவனுக்கு மைசூரில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை. கணிசமான சம்பளம். வயது முப்பதைத் தாண்டி விட்டது. இருந்தும் அவன் திருமணத்துக்குத் தயங்குகிறான். 
வாயைத் திறந்தால்

பெற்றோருக்குக் கவலை. இந்தக் குடும்பம் எனக்கு தூரத்து உறவு. ஒரு முறை அவனிடம் பேசும் போது, “வாயிலிருந்து கெட்ட வாடை வருகிறது” என்றான். 
இதனால் அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை. திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்க்கை பிரச்னையாகி விடுமோ என்று பயம். இதைப் பெற்றோரிடம் சொல்ல கூச்சம்.

இதனால் திருமணத்தைத் தள்ளிப் போட்டபடி இருக்கிறான். சரி, இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டியது தானே? எடுத்திருக்கிறான், 

பல ‘டுபாக்கூர்’ டாக்டர்களிடம்! அவனை வரவழைத்து, பரிசோதித்து, முறையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தபிறகு பிரச்னை தீர்ந்தது. திருமணம் முடிந்து, இப்போது நியூயார்க்கில் செட்டிலாகி விட்டான். 

இதை இங்கு சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. படித்தவர்கள் கூட, எந்த நோய்க்கு எந்த டாக்டரிடம் செல்வது என்பது தெரியாமல், சுய விளம்பரத்தால் மக்களை மயக்கும் போலி டாக்டர்களிடம் சிக்கி, ஆரோக்கியம் கெட்டு, மன பலம் பிளஸ் பண பலம் இழந்து தவிக்கின்றனர். 

அடுத்து, சாதாரண நோய்களைக்கூட வெளியில் சொல்ல வெட்கப்பட்டு பெரிதாக்கி விடுகின்றனர். சரி, விஷயத்துக்கு வருவோம்...

வாய் நாற்றத்துக்கு மருத்துவப் பெயர் ‘ஹாலிடோசிஸ்’ (Halitosis). பெரும்பாலும் பல் டாக்டர்கள் தீர்க்கும் பிரச்னை இது. இவர்களால் தீர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டுமே மற்ற டாக்டரிடம் போக வேண்டும். 

‘செரிமானத்தின் வாசல்’ எனப்படும் ‘வாய்’க்கு நாம் தகுந்த மரியாதை செலுத்தா விட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

முன்பு அங்கே, இங்கே என்று எங்கோ ஒரு சிலரிடம் கேள்விப்பட்ட இப்பிரச்னை, தற்போது பலரையும் வாட்டும் பிரச்னையாக உருமாறி வருகிறது. 
முன்பு இது 50 வயதுக்கு மேல் காணப்பட்டது; இப்போது 20 வயதிலேயே காணப்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டு. முதலாவது, உணவு முறை. இரண்டாவது, வாழ்க்கை முறை. 
வாயைத் திறந்தால்
நம் பாரம்பரிய உணவுகளை மறந்து, ஃபாஸ்ட் ஃபுட், பாக்கெட் ஃபுட் என்று மேற்கத்திய உணவுகளுக்கு அடிமையானதும், இந்தியாவில் 13 வயதிலிருந்தே புகைப்பழக்கம் ஆரம்பித்து விடுவதும் இந்தப் பிரச்னை வளர்வதற்கு நீர் பாய்ச்சுகின்றன. 

வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன. பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் கோளாறுகள் இதற்குப் பிரதான காரணங்கள். 

மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், உணவுக்குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள். 

முதலில் சொன்னது 90 சதவீதம் என்றால், அடுத்து சொன்னது 10 சதவீதம். சாப்பிட்டதும் வாயைச் சுத்தம் செய்யத் தவறினால், உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டி கொள்ளும். 

வாயில் இயல்பாகவே வசித்துக் கொண்டிருக்கிற லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் இந்த உணவு பொருட்களோடு வினை புரியும். இதனால், உணவுத் துகள் அழுகும். 

அப்போது சல்பர் எனும் ரசாயனம் உருவாகும். இது கெட்ட வாயுவை வெளியேற்றும். இது தான் வாய் துர்நாற்றத்துக்கு அறிவியல் காரணம். 
பற்களில் காரை படிவது, ஈறுகளில் வீக்கம், புண் அல்லது ரத்த ஒழுக்கு, சொத்தைப் பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட பற்கள் ரத்த ஓட்டம் இழப்பது, வாய் உலர்வது, 

நாக்கில் வெள்ளை மாவு படிவது, வாய்ப் புண், வாய்ப் புற்றுநோய், சிபிலிஸ், வின்சென்ட் நோய், எய்ட்ஸ் போன்றவையும் வாய் நாற்றத்துக்கு அழைப்பிதழ் அனுப்பும்.

மூக்கில் சதை வளர்வது, சைனஸ் அழற்சி, தொண்டைப் புண்/ சீழ், நுரையீரலில் சீழ்/காசநோய்/ புற்றுநோய், உணவுக் குழாய் அழற்சி, இரைப்பை அல்சர்/புற்றுநோய், 
வாயைத் திறந்தால்

அஜீரணம், லிவர் ஃபெயிலியர், சிறுநீரகக் கோளாறு என அடுத்து ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. என்றாலும், காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், இது சுலபத்தில் சரியாகி விடும் நோய் தான். 

பல் டாக்டர்கள் செய்யும் ஆரம்ப சிகிச்சைக்கு ‘ஸ்கேலிங்’ என்று பெயர். அதாவது பற்களைச் சுத்தம் செய்வது. இதற்கென உள்ள பிரத்யேகக் கருவி கொண்டு பற்களைச் சுத்தம் செய்யும் போது அழுக்கு மற்றும் காரை கரைந்து விடும். 

பல் சொத்தை லேசாக இருந்தால் ‘ரெசின்’ கொண்டு அடைத்து விடலாம். பல்லில் குழி விழுந்து வேர் வரை சொத்தை பரவியிருந்தால், ‘வேர் சிகிச்சை’ (Root canal treatment) செய்யப்படும். 

இதற்கு இரண்டு அல்லது மூன்று ‘சிட்டிங்’ வர வேண்டும். அதிதீவிர ஈறு நோய் ஏற்பட்டு, பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் அதிக இடைவெளி இருந்தால், அறுவை சிகிச்சை அவசியப்படும். 
பல்லில் வேறு பிரச்னைகள் இருந்தால், அவற்றுக்கான சிகிச்சைகளும் தேவைப்படும். அடுத்து, பொது மருத்துவர் மற்றும் காது - மூக்கு - தொண்டை நிபணரின் உதவியுடன் சைனஸ் எக்ஸ்-ரே 

அல்லது ஸ்கேன், மார்பு எக்ஸ்ரே, இரைப்பை எண்டோஸ்கோப்பி ஆகிய டெஸ்ட்களில் மற்ற காரணங்களையும் கண்டறிந்து களைந்து விட்டால், வாய் நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

ஃபிளாஸ்ஸிங் தெரியுமா?
வாயைத் திறந்தால்
பிரஷ் செய்யும் போது பல்லின் முன்புறம், மேல்புறம், உட்புறம் மட்டுமே சுத்தப்படுத்த முடியும். பற்களுக்கு இடையில் அதன் இழைகள் நுழையாது. 

ஆனால், இங்குள்ள உணவுத் துகள்களைத்தான் முதலில் வெளியேற்ற வேண்டும். பற்களை ‘ஃபிளாஸ்ஸிங்’ (Flossing) செய்வதன் மூலம் இது சாத்தியப்படும். 

பொருத்தமான ‘டென்டல் ஃபிளாஸ்ஸிங் இழையை’ வாங்கி, பற்களுக்கு இடையில் அதைச் செலுத்தி,
கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் யார் யார் எவ்வளவு குடிக்கலாம்?
மேற்பற்களை மேலிருந்து கீழும், கீழ் பற்களை கீழிருந்து மேலும் மெதுவாக இழுக்கும் போது, அங்குள்ள உணவுத் துகள், கறை, அழுக்கு எல்லாமே வெளியேறிவிடும். 

மேலை நாட்டு மக்களுக்கு இந்தப் பழக்கம் சர்வ சாதாரணம். நமக்கோ இது புதுசு! பற்களைப் பாதுகாக்க பிரஷ் செய்வது, ஃபிளாஸ்ஸிங் செய்வது இரண்டுமே முக்கியம்.

வாய் மணக்க என்ன வழி?
வாயைத் திறந்தால்

* வாய் சுத்தம் காக்க வேண்டும். இதற்கு 2:2:2 விதியைப் பின்பற்ற வேண்டும். தினமும் காலை எழுந்ததும் ஒருமுறை, இரவு படுக்கப் போகும் முன்பு ஒருமுறை என 2 முறை பிரஷ் செய்ய வேண்டும். 

ஒவ்வொரு முறையும் 2 நிமிடங்களுக்கு பிரஷ் செய்ய வேண்டும். நீண்ட நேரம் பிரஷ் செய்தால் எனாமல் பாதிக்கப்படும் என்பதால், இந்த லிமிட்! வருஷத்துக்கு 2 முறை ‘டென்டல் செக்கப்’ அவசியம்.

* தலைப்பகுதியில் வளைவு உள்ள ‘சாஃப்ட்’ பிரஷ்களைப் பயன்படுத்தினால் ஈறுகள் பாதிக்கப்படுவது குறையும்.
* பொதுவாக, ஃபுளோரைடு பேஸ்ட் நல்லது. பல்லில் கூச்சம் இருந்தால், அதற்கான பேஸ்ட்டை பல் டாக்டரிடம் ஆலோசித்து பயன்படுத்தலாம். பிரஷ் நிறைய பேஸ்ட் எடுக்க வேண்டும் என்பதில்லை; பாதி அளவுக்குப் போதும்.

* மேற்பற்களை மேலிருந்து கீழும், கீழ் பற்களை கீழிருந்து மேலும் வட்டச்சுழற்சியாகவும், வெட்டும் பரப்புகளை முன்னும் பின்னும் பிரஷ் செய்து விட்டு, ஈறுகளை விரல்களால் அழுத்தமாகத் துலக்க வேண்டும். இது ரொம்ப முக்கியம்.

* நாக்கின் பின்புறத்தையும் நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். அங்கு தான் 80 சதவீதம் கிருமிகள் வசிக்கின்றன. பலருக்கும் கெட்ட வாடை அங்கு தான் கிளம்பும்.

* சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும்.

* மேற்கத்திய உணவுகளுக்குப் பற்களின் மீது பற்று அதிகம். இவை பற்களில் மட்டுமல்ல பல் இடுக்குகளிலும் சுலபமாக ஒட்டிக் கொள்ளும். 

இவற்றின் செயற்கை நிற ரசாயனங்கள் பல்லில் கறையை ஏற்படுத்தி எனாமலையும் அரித்து விடும். பல் நலம் காக்க, இவற்றை அளவோடு சாப்பிடுங்கள்.

* அசைவ உணவுகளைச் சாப்பிட்ட பின்பு, பற்களின் இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை அகற்றுவதற்குப் பலரும் பல்குச்சியைப் பயன்படுத்துகிறார்கள். 

இது ஈறுகளில் புண்ணாக்கி, வாய் நாற்றத்தை அதிகமாக்கும். எனவே, இதற்கென்றே உள்ள பிரஷிங் வயர்களைப் பயன்படுத்தினால் நல்லது.
* ‘பல் செட்’ அணிபவர்கள் வாயில் மிகவும் கச்சிதமாகப் பொருந்தும் வகையில் அதை அவ்வப்போது சரி செய்ய வேண்டும். இரவில் அதைக் கழற்றி வைத்து விடுவது நல்லது. 
வாயைத் திறந்தால்
ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும், பல் செட்டைக் கழற்றி, அதற்கென உள்ள பிரஷ் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* இன்டர்வியூக்குச் செல்லும் போதும், முக்கிய மானவர்களுடன் பேசும் போதும் செயற்கை மணமூட்டிகளைப் (Mouth freshners) பயன்படுத்தலாம். 
அதே சமயம் அடிக்கடி பயன்படுத்தினால், அவற்றில் உள்ள சில ரசாயனங்கள் பற்களைக் கெடுத்து விடக்கூடிய அபாயமும் இருக்கிறது. கவனம்!

* மவுத் வாஷ்களில் சிகிச்சைக்கானது, வாசனைக்கானது என இரு வகை உண்டு. தேவையானதை பல் டாக்டரின் ஆலோசனையுடன் சிறிது காலம் மட்டும் பயன்படுத்துவதே நல்லது. 

இதைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, தீமை தருகிற பாக்டீரியாக்களுடன், வாய்க்குள் இருக்கின்ற நன்மை தரும் பாக்டீரியாக்களும் அழிந்து விடுகின்றன. இது வாயின் ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும்.

* லவங்கம், ஏலக்காய், சோம்பு போன்ற இயற்கை மணமூட்டிகளை வாயில் சிறிது நேரம் ஒதுக்கிக் கொண்டால் வாய் மணக்கும்.

* வயதாக ஆக உமிழ்நீர் சுரப்பது குறைந்து வாய் உலர்வது அதிகரிக்கும். இது வாய் நாற்றத்துக்கு உரம் போடும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது பொருந்தும். இதைத் தடுக்க அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும்.

* சில மாத்திரைகளாலும் வாய் உலரலாம். அப்போது டாக்டரின் யோசனையைக் கேட்டுக் கொள்ளவும்.

* கடைசி என்றாலும் இது கட்டாயம்! பல்லில் காரை படிவதற்கு புகைப்பழக்கமும் வெற்றிலை பாக்கும்தான் முதன்மைக் காரணங்கள். 
ஆகவே, புகையிலை/ வெற்றிலை/ பாக்கு/ பான்மசாலா மெல்லும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

சில கேள்விகள்
வாயைத் திறந்தால்

உடல் பருமன் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை உள்ளது எனக் கேள்விப்பட்டேன். உண்மையா?

உடல் எடை 100 கிலோவுக்கு மேல் (பி.எம்.ஐ. 32.5க்கு மேல்) உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ‘ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி’ (Sleeve Gastrectomy) சிகிச்சை உதவுகிறது. 

நம் இரைப்பையின் கொள்ளளவு அதிகபட்சம் ஒன்றரை லிட்டராக இருக்கும். இந்த சிகிச்சையின் போது இரைப்பை யிலிருந்து 75 சதவீதத்தை வெட்டி விடுகிறார்கள். 
பசியைத் தூண்டும் ‘க்ரிலின்’ (Ghrelin) எனும் ஹார்மோன் சுரக்கும் சுரப்பிகளையும் இரைப்பை யிலிருந்து வெட்டி விடுகிறார்கள்.

இதனால் பசி குறைந்து, உணவு சாப்பிடும் அளவும் குறைந்து விடுவதால், ஒரே வருடத்தில் உடல் எடை 70 சதவீதம் குறைந்து விடும். லேப்ராஸ்கோப் முறையில் வயிற்றில் 3 துளைகள் போட்டு செய்கிறார்கள். 

இதில் தழும்பு தெரியாது. வலி குறைவு. ரத்தம் இழப்பு இல்லை. சென்னை, கோவை, வேலூர், புதுச்சேரி, மதுரை என பல நகரங்களில் இது மேற்கொள்ளப் படுகிறது.
வாயைத் திறந்தால்

இதை மேற்கொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை நல்ல முறையில் கட்டுப்படுகிறது. மாத்திரை மற்றும் இன்சுலின் ஊசி அளவுகளைக் குறைத்து கொள்ள முடிகிறது.

உடல் எடையைக் குறைக்க இப்போது ‘பேலியோ டயட்’ முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள். அதை நம்பலாமா?

தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் உணவு முறை இது. இதில் சாதகங்களும் உண்டு; பாதகங்களும் உண்டு என பயனாளிகள் கூறுகின்றனர். 

அலோபதி மருத்துவத்தில் இதை ஏற்று கொண்டு பரிந்துரைக்க இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவைப்படலாம். 
இதன் நல்ல விளைவுகளையும், பக்க விளைவுகளையும் முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம். அதுவரை அவரவர் விருப்பத்தின் பேரில் பின்பற்றலாம்.
Tags: