செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் !

குடிக்கும் தண்ணீரில் சிறிதளவு செம்பு போட்டு வைத்து அந்த தண்ணீரை குடித்தால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். அல்லது, செம்பு பாத்திரத்தில் குடிக்கும் தண்ணீரை பிடித்து வைத்து அருந்தலாம். 
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் !
செம்பு பாத்திரம் இல்லை என்றாலும், நம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண பிளாஸ்டிக் குடங்களாக இருந்தாலும் சரி, ஒரு சிறிய செம்பு துண்டை குடத்தில் போட்டு வைத்தால் போதும். 

எந்த சத்தும் இல்லாத கேன் வாட்டர் கூட, நல்ல சத்து நிறைந்த தண்ணீராக மாறி விடும்.  செம்பு பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு பயன்கள் பற்றி இந்த செய்தியில் காணலாம்...........

செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பது. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். 

பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். 

குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும் போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.
தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் செம்பு
'செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று' என்பது பழமொழி. 

இதன் பொருள் செம்பு பாத்திரம் கழுவிய நீரை செடிக்கு ஊற்றும் போது, அந்நீரை உறிஞ்சி வளரும் செடியின் வாயிலாக கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவையாக இருக்கும். 

அக்காய்கறிகளை நாம் சாப்பிடும் போது, நம் உடலுக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என்பது தான் பொருள். 

செம்பு பாத்திரத்தின் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்ற இப்பழமொழி... விஞ்ஞானக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று.

2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் 

செம்பு என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. 

பல நேரங்களில், செம்பு குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். செம்பு பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

2) கீல்வாத வலியை குணப்படுத்தும் 

செம்பு பாத்திரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது..

3) இரத்த சோகையை எதிர்க்கும் 

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செம்பு உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு செம்பும் சிறிய அளவில் தேவைப்படும்.

4) புண்களை வேகமாக குணப்படுத்தும் 
புண்களை வேகமாக குணப்படுத்தும் செம்பு
புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய செம்பு உதவும். 

இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

5) பாக்டீரியாக்களை கொல்லும் 

தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது செம்பு. 

முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக் களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். 
அதனால் செம்பு பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.

6) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் 
மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் செம்பு
மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். 
இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க செம்பு உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

7) செரிமானத்தை மேம்படுத்தும் 

வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை செம்பும் கொண்டுள்ளது. 

இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் செம்பு கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.

8) வயதாகும் செயல்முறை குறையும் 

செம்பு பாத்திரத்தில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். 

இது உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும். 

9) கர்ப்ப காலத்தின் போது: 

கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். 
கர்ப்ப காலத்தின் போது:

அதனால் கர்ப்ப காலத்தில் செம்பு பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

10) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் 

செம்பு பாத்திரத்தில் சிறப்பான ஆன்டி -ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. 

மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் அருந்துவதால் இது போன்ற எண்ணிலடங்கா பலன்கள் நமக்கு கிடைக்கும்.. 
Tags: