உணவுப் பஞ்சத்தில் சூடான் - நெஞ்சை உலுக்கும் உடலுடன் !

0
ஆப்பிரிக்க நாடான சூடான் தலைநகரான கார்டூமில் அல்-குரேஷி விலங்கியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் ஐந்து சிங்கங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 
உணவுப் பஞ்சத்தில் சூடான்


இந்த குரேஷ் பூங்கா, கார்டூம் நகராட்சியால் நிர்வகிக் கப்பட்டு வருகிறது. 

கார்டூம் நகராட்சி தரும் நிதி மற்றும் தனியார் நிதியின் மூலமே பூங்காவி லுள்ள விலங்கு களுக்குத் தேவையான உணவு மற்றும் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள சிங்கங்களு க்கு அளிக்க போதுமான உணவு மற்றும் மருந்து இல்லாததால் ஊழியர்கள் பெரும் சிரமமடைந் துள்ளனர். 
நெஞ்சை உலுக்கும் உடலுடன்


இதன் காரணமாகவே அவை உடல் மெலிந்து காணப்படு கின்றன. இது குறித்து தெரிவித்த பூங்கா அதிகாரிகள், ‘அந்த ஐந்து சிங்கங்களில் சில மூன்றில் இரண்டு பங்கு எடையை இழந்துள்ளது’ என்றனர். 
அதில், ஒரு சிங்கத்துக்கு கயிற்றில் கட்டி வைத்து தண்ணீர் ஊட்டப் படுகிறது. சூடானில் ஏற்பட்டுள்ள உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வு மற்றும் அந்நியச் செலவாணியின் தட்டுப்பாடு காரணமாக பொருளாதார சிக்கல் எழுந்துள்ளது.
உணவுப் பொருள்களின் விலைவாசி
சிங்கங்களின் அவல நிலையைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் செய்தியார்கள் அதனைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு உதவ வேண்டும் #SudanAnimalRescue என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)