முதல்வரை எதிர்த்தால் உயிரோடு எரித்து விடுவேன் - அமைச்சரின் மிரட்டல் !

0
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கூட்டம் நடத்தினர்.
முதல்வரை எதிர்த்தால் எரித்து விடுவேன்


அப்போது துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா தலைமையில் இந்தக் கூட்டமானது நடைபெற்றது.

அதில், உத்தரப் பிரதேசத்தின் அமைச்சரான ரகுராஜ்சிங் கலந்து கொண்டு உரையாற்றி னார்.

அப்பொழுது, "நாடு முழுவதும் இருக்கும் ஒரு சதவீத மக்கள் மட்டும் தான் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கின்றனர். 

பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்ப்பவர் களை உயிரோடு புதைத்து விடுவேன்." என்று எச்சரித்து இருக்கின்றார்.
பொது வெளியில் இப்படி வெளிப்படையாக கொன்று விடுவேன் என அமைச்சர் மிரட்டி எடுப்பது சர்ச்சையை கிளப்பி யிருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)