14 வயது சிறுவனை இழுத்து கொண்டு ஓடிப் போன 26 வயசு டீச்சர் !

0
14 வயது சிறுவனை கரெக்ட் செய்து... கடைசியில் அவனை இழுத்து கொண்டு தலைமறைவாகி உள்ளார் 26 வயது ஸ்கூல் டீச்சர்! 
சிறுவனை இழுத்து கொண்டு ஓடிப் போன டீச்சர்


இப்போது பிள்ளையை காணோம், மீட்டு தாருங்கள் என்று சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்திருக்கி றார்கள்.

குஜராத் காந்திநகரில் உதயோக் பவன் அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் 14 வயது மகன், 8ம் வகுப்பு படித்து வருகிறான்..

கடந்த வெள்ளிக் கிழமை முதல் இவன் காணாமல் போயிருக்கிறான்.. 

இதனால் பல இடங்களில் மகனை தேடிய பெற்றோர், கடைசியில் போலீசில் வந்து புகார் தந்தனர். இந்த புகாரின் பேரில் போலீசாரும் மாணவனை தேடும் பணியில் இறங்கினர்.. 

ஸ்கூலுக்கு போனவன் திரும்பவும் வீட்டுக்கு வரவில்லை என்பதால், விசாரணையை நடத்த போலீசார் முதலில் ஸ்கூலுக்கு போனார்கள்.. 

அப்போது தான், வெள்ளிக் கிழமை முதலே மாணவன் ஸ்கூலுக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.
பின்னர் நீண்ட நேர விசாரணைக்கு பிறகு, அந்த மாணவனின் டீச்சரையும் அன்று முதல் காணவில்லை என்பது தெரிய வந்தது. அப்போது தான் போலீசாருக்கு சந்தேகம் வலுத்து, விசாரணையை தீவிரப் படுத்தினர்.


8-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனுடன் பல நாட்களாகவே டீச்சருக்கு தவறான தொடர்பு இருந்து வந்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதை யடுத்து மாணவனும், டீச்சரும் ஒன்றாக மாயமாகிவிட்ட நிலையில் அவர்களை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தி யுள்ளனர். 

14 வயது மாணவன், முழு சம்மத்துடனேயே டீச்சருடன் சென்றிருந் தாலும், அது ஏற்றுக் கொள்ள முடியாததே..

மாணவனை ஆசைக்காட்டி டீச்சர் அழைத்து சென்றிருந்தா லும் அது கடத்தல் என்றே கருதப்படும் என்பதால், டீச்சர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

26 வயது டீச்சர், 8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுடன் தலைமறை வாகி உள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)