சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. காதலிக்காக கணவன் கொலை !

0
பில்லி சூனியம், செய்வினை மாந்தீரீகத் தால் ஏற்பட்ட தகாத தொடர்பு பழக்கத்தால் நடுநிசியில் சுடுகாட்டில் நிர்வாண பூஜையை முடித்து விட்டு, அதற்கடுத்த இரண்டு மணி நேரத்தில் காதலி, 
நடுநிசியில் சுடுகாட்டில்



கூட்டாளிகள் துணையுடன் கணவனை கொலை செய்த சாமியாரை ஆறே மணி நேரத்தில் கைது செய்து அசத்தி யுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பாப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவிற்காக வரும் செவ்வாய்க் கிழமையன்று மாநில ஆளுநர் வருகை தரும் நிலையில், 

அவருக்காக காரைக்குடி யில் பாதுகாப்பை பலப்படுத்தி கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த காரைக்குடி துணைச்சரகப் போலீசாருக்கு அவ்வளவு எளிதாக பொழுது புலரவில்லை. 
ஞாயிற்றுக் கிழமை அதிகாலை யிலேயே அலறிய தொலை பேசியால் காரைக்குடி தந்தை பெரியார் 4 வது வீதியிலுள்ள ஒரு வீட்டின் முன் ஆஜரான காரைக்குடி டி.எஸ்.பி.அருண், 

வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தினேஷ் உள்ளிட்ட போலீசாரை மொட்டை மாடியில் குப்புற கிடந்த பிணம் தான் வரவேற்று யிருக்கிறது.

கொலை யுண்டு கிடந்தது வெளி நாட்டிலிருந்து திரும்பிய மணிமுத்து என்றும், வீட்டினுள் அவரது மனைவி பூமதி மற்றும் அவரது குழந்தைகள் பிரவீனா (20), கமல கண்ணன் (19), சஞ்சய் அரவிந்த் (17) இருப்பதும் தெரிய வந்தது. 
கொலைக் கானக் காரணம், கொலையாளி யார் என போலீசார் தடயங்களை ஆய்வு செய்துக் கொண்டிருக்கையில், 

கொலையாளி க்கு சாதகமாக மழையும் அழுத்தமாக பெய்து தடயத்தைத் தேடுவதில் சிரமத்தை தந்தது. 

எனினும், விடாப்பிடியாக முன்னேறிய போலீசார் கொலைக்கானக் காரணம் தெரிந்து கொலை யாளிகளை ஆறே மணி நேரத்தில் கைது செய்திருப்பது மக்கள் மத்தியில் நிம்மதி யினை அளித்திருப்பது ஆறுதலான விடயமே.

"கொலை யுண்ட நபர் மொட்டை மாடியில் உடலெங்கும் காயம் பட்டிருக்க அவரது மனைவி பூமதியின் அழுகையோ செயற்கைத் தனமாக இருந்தது. 

அது போக, "அவருக்கும் (மணி முத்துவிற்கும்) அவரது சகோதரி குடும்பத்தி ற்கும் சொத்துத் தகராறு உள்ளது. 

அவங்க தான் இந்த கொலையை செய்திருக்கனும் என அடிக்கடி கூறி வந்ததும் சந்தேகத்தை வலுவடைய செய்தது. 
கொலையாளி யார்?



இதனால் அந்தம்மாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து முறைப்படி விசாரிக்கை யில், ராமேஸ்வரம் சாமியார் வேல்முருகன், கூட்டாளிகள் ராமநாதபுரம் பிரகாஷ் மற்றும் குமார் ஆகியோர் 

சேர்ந்து கொலை செய்ததாக உண்மையை ஒத்துக் கொள்ள கொலை யாளிகளான சாமியாரையும், பிரகாஷையும் கைது செய்து காரைக்குடிக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட் டுள்ளனர். 

இதில் கொலைக்குப் பயன்படுத்திய நிஸான் சன்னி காரும் (TN22-CU 8579) கைப்பற்றப் பட்டுள்ளன. 

தப்பியோடிய குமாரும் சிக்கும் பட்சத்தில் கொலைக்குப் பயன் படுத்திய ஆயுதங்களும் கிடைக்கும்." என்கின்றது காவல்துறை.

இதே வேளையில், தகவல் தொழில் நுட்பமும் காவல் துறைக்கு சரியான நேரத்தில் கைக் கொடுத்திருக் கின்றது. 

குறிப்பிட்ட எண்ணி லிருந்து குறிப்பிட்ட எண்ணிற்கு நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து ஏறக்குறைய 20 தடவைகள் தொடர்ச்சி யாக அடிக்கடி தொடர்புக் கொள்ளப் பட்டது. 
அது போக, நடுநிசி 02.45க்கு வந்த தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு, மீண்டும் 03.15க்கு அதே எண்ணிற்கு அழைக்கப் பட்டுள்ளது. இந்த எண்ணிற் குரியவர்கள் சாமியார் வேல்முருகனும், 

பூமதியும் என்பது நிருபணமாக 02.45 டூ 03.15 எனும் இந்த இடைப்பட்ட வேளையில் தான் கொலை நடந்திருக்க முடியும் என கண்டறியப் பட்டதும் போலீசாருக்கு சாதகமே.

விசாரணை அதிகாரிகளோ, "கொலை யாளியான ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திட்டக்குடிப் பகுதியினை சேர்ந்த சாமியார் வேல்முருகன் 

15 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத் தான் அருகிலுள்ள கூட்டுக் கொல்லை எனும் கிராமத்திற்கு புதையல் எடுத்து தருவதற்காக வந்துள்ளான். 

அப்பொழுது அங்கு வைத்து தான் மணி முத்துவின் மனைவி பூமதிக்கும், சாமியாரு க்கும் பழக்கம் உண்டானது. 

ஒரு கட்டத்தில் பூமதியின் கணவர் மணிமுத்து வெளி நாட்டிலேயே பணிக்காக நிரந்தரமாக இருந்ததும், 

குழந்தைகளின் கல்விக்காக காரைக்குடியில் வசிக்க வுள்ளேன் எனக் கூறி காரைக்குடி யில் தனியாக வீடு எடுத்து வசித்ததும் இருவருக்கும் சாதகமானது. 
நிர்வாண பூஜை



எப்பொழுதாவது ஊருக்கு திரும்பும் மணி முத்துவிற்கு பூமதியின் தகாத தொடர்பு தெரிந்திருக் கவில்லை. 

இந்நிலையில், ஐந்தாண்டு களுக்குப் பிறகு கடந்த வாரத்தில் திரும்பிய மணி முத்துவிற்கு அரசல் புரசலாக விவகாரம் தெரியவர மனைவியைக் கண்டித்திருக் கின்றார். 

பூமதியோ தன்னுடைய காதலனான சாமியாரிடம் கூறி, கணவனின் கை காலை உடைக்க சொல்லி யிருக்கின்றார்.

ஆனால், இது தான் தருணமென அமாவாசை தினத்தில் நடுநிசி 1 மணிக்கு ராமநாதபுரம் அல்லிக் கண்மாயில் நிர்வாண பூஜையை நடத்தி விட்டு தன்னுடைய கூட்டாளிக ளான பிணம் எரிக்கும் தொழிலாளி யான பிரகாஷையும் 
அவனின் நண்பனான குமாரையும் தன்னுடைய காரிலேயே காரைக்குடி க்கு கூட்டி வந்து, 

அவர்களது துணையுடன் அதிகாலை 3 மணியளவில் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மணி முத்துவை அனைவரும் குத்திக் கொன்றிருக் கின்றனர். 

இவர்களின் கள்ளக் காதலால் உயிர் போனது ஒரு புறமிறக்க, அவர்களது குழந்தைகளின் நிலை தான் பரிதாபத்திற்குரியது என்கின்றனர் அவர்கள். இதனால் இப்பகுதியில் பரப்பரப்புத் தொற்றி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)