மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !

0
தீபாவளி பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு அக்டோபர் மாதத்தில் பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப் படியை உயர்த்தி அறிவிக்கும். 
அகவிலைப்படி உயர்வு


தீபாவளி பண்டிகை மாதமான இந்த மாதத்தில் ஊழியர் களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு தொடர்பாக மத்திய அமைச்சரவை புதன்கிழமை கூடி எடுத்த முடிவினை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் இன்று அறிவித்தார்.

இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. இதன் காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். அத்துடன் 62 லட்சம் ஓய்வூதிய தார்களும் பயன்பெறுவர்.
கடந்த ஆண்டு 12 சதவீதமாக இருந்த நிலையில் இப்போது 17 சதவீதமாக உயர்ந்திருப்பது நிச்சயம் தீபவாளி பரிசாக பார்க்கப் படுகிறது. இதற்கு ஒட்டுமொத்தமாக 16 ஆயிரம் கோடி செலவாகும்.


அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கை செலவுகளை சரி செய்வதற்கு கொடுக்கப் படுவதாகும். 

நாட்டின் பண வீக்கத்தின் தாக்கத்தை குறைக்க அடிப்படை சம்பளத்தில் இருந்து அரசு அறிவிக்கும் சதவீதம் கூடுதலாக பணம் கிடைக்கும்.

17 சதவீதம் என்று அரசு இந்த ஆண்டு அறிவித்துள்ள தால். அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து 17 சதவீதம் அதிகமாக பணம் இந்த முறை கிடைக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)