எலும்பையும் விட்டு வைக்காத புற்றுநோய் !

0
மனித உடலில் உச்சந்தலை யிலிருந்து உள்ளங்கால் வரை சகல பகுதிகளை யும் பாதிக்கும் வல்லமை கொண்டது புற்று நோய். இந்த பாதிப்பின் தீவிரம் வலிமையான எலும்பையும் விட்டு வைப்பதில்லை. 
எலும்பு புற்றுநோய்

அப்படி எலும்புகளைத் தாக்கும் புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்வோம்... எலும்புகளில் கட்டிகள் உருவாகும் போது எலும்பு புற்றுநோய் பாதிப்பு ஆரம்ப மாகிறது.

கை அல்லது காலிலுள்ள நீளமான எலும்பிலேயே இது பொதுவாக உருவாகிறது. வளர வளர இது சாதாரண எலும்பு செல்களை அழித்து விடுகிறது. உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது.

எலும்பு புற்று நோயானது குழந்தைகள் மற்றும் இள வயதின ரிடையே அதிகம் காணப்படுகிறது.
காமசூத்ரா வழங்கிய இந்தியா - பிளேபாய் செர்லின் சோப்ரா ஸ்டேட்மெண்ட் !
வகைகள் ஆஸ்டியோசார்கோமா (Osteosarcoma) 


பெரும்பாலான மக்களை பாதிக்கும் எலும்பு புற்று நோய் வகை இது. 10 முதல் 30 வயதுக் காரர்களை அதிகம் பாதிக்கிறது. கைகள், கால்கள் அல்லது இடுப்பெலும்பு பகுதிகளையே அதிகம் தாக்கக் கூடியது இது.

ஈவிங் சார்கோமா (Ewing sarcoma)


இதுவும் குழந்தை களையும், இளைஞர் களையும் அதிகம் பாதிக்கிற வகை. கைகள், நெஞ்சு, கால்கள், இடுப்பெலும்பு மற்றும் முதுகு பகுதியில் இதன் பாதிப்பு அதிக மிருக்கும்.

கோன்ட்ரோ சார்கோமா (Chondro sarcoma)

40 வயதுக்கு மேலானவர் களை பாதிக்கும் புற்றுநோய் வகை இது. கைகள், கால்கள், இடுப்பெலும்பு பகுதியில் பாதிப்பு அதிக மிருக்கும்.

லுக்கிமியா (Leukemia)
லுக்கிமியா

இது எலும்பு மஜ்ஜை மற்றும் சில எலும்புகளின் திசுக்களை தாக்கும் புற்றுநோய் வகை. ஆனாலும் இதை எலும்பு புற்று நோயாக கணக்கில் எடுத்து கொள்வ தில்லை.

அரிய வகைகள்

மேலே குறிப்பிட்ட வகைகளை தவிர, வேறு சில அரிய வகை புற்று நோய்களும் உண்டு. அவை பெரும்பாலும் பெரியவர் களையே தாக்குபவை.

உதாரணத்து க்கு ஜயன்ட் செல் டியூமர் (Giant cell tumor) வகை புற்றுநோய் பாதிப்பானது பெரியவ ர்களின் முழங்கால் பகுதியை தாக்க கூடியது.

கோர்டாமா (chordoma) என்கிற இன்னொரு அரிய வகை புற்றுநோய் மண்டை யோட்டு பகுதியின் அடிபாக த்தையோ, டெயில்போன் எனப்படுகிற தண்டுவட எலும்பு வால் பகுதியையோ பாதிக்கக் கூடியவை.
ஃபைப்ரோ சார்கோமா (Fibrosarcoma) என்றும் ஒரு வகை இருக்கிறது. இது முதியவர் களை பாதிக்கும் புற்று நோய். முழங்கால், இடுப்பு மற்றும் தாடை பகுதிகளை பாதிக்க கூடியது.

ஏற்கனவே ஏதோ ஒரு புற்றுநோய் தாக்கி, அதற்காக ரேடியேஷன் சிகிச்சை மேற்கொண்டவர் களுக்கு இந்த பாதிப்பு வரலாம்.

யாரு கெல்லாம் ரிஸ்க் இருக்கிறது?


* எலும்புகளுக்குள் உலோகங்கள் பொருத்தி கொண்டவர் களுக்கு.... அதாவது எங்கேயாவது விழுந்து அடிபட்டு எலும்பை உடைத்து கொண்டதன் விளைவாக அந்த எலும்பில் மெட்டல் இம்பிளான்ட் செய்து கொண்டவர் களுக்கு.

* ஏற்கனவே புற்றுநோய் பாதித்து, அதற்கான மருந்து, மாத்திரைகள் உட்கொள்பவர் களுக்கும், அதிகளவிலான ரேடியேஷன் தாக்குதலுக்கு உள்ளாகிறவ ர்களுக்கும்.
யாரு கெல்லாம் ரிஸ்க் இருக்கிறது?

* எலும்புகள் வளரும் நிலையில் உள்ள குழந்தை களுக்கும், இளைஞர் களுக்கும். ஆனால் கோன்ட்ரோ சார்கோமா வகை புற்றுநோய் மட்டும் 40 வயதுக்கு மேலானவர் களுக்கு அதிகம் பாதிக்கும்.

வேறு என்ன வெல்லாம் காரணங்கள்?


மரபணு தொடர்பான நோய்கள் உள்ளவர் களுக்கும் எலும்பு புற்றுநோய் தாக்கலாம். ரெட்டினோ பிளாஸ்டோமா என்பது கண்களை பாதிக்கிற புற்றுநோய்.

இந்த பாதிப்பு உள்ளவர் களுக்கும், Li-Fraumeni syndrome and Rothmund-Thomson syndrome உள்ளவர் களுக்கும் கூட எலும்பு புற்றுநோய் தாக்கலாம்.

அம்பிலிகல் ஹெர்னியா பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தை களுக்கும் இதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் இது மிக மிக அரிதானது என்பதால் பயப்பட தேவை யில்லை.

அறிகுறிகள்

வலி.... இதுதான் முதல் அறிகுறி. இதன் தீவிரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். அதாவது சிலருக்கு மெதுவாக ஆரம்பிக்கலாம்.

பாதிக்கப்பட்ட பகுதி மென்மையானது போன்று இருக்கலாம். வேறு சிலருக்கு தீராத வலி இருக்கலாம். எலும்பு பகுதிகளில் வலி இருந்தாலே அது புற்று நோயின் அறிகுறியாக இருக்குமோ என்று பயப்பட தேவையில்லை.

மூட்டுவலி, பலவீனம் போன்ற வேறு பிரச்சனைகளின் விளை வாகவும் அப்படி வலிக்கலாம். எனவே தொடர்ச்சியாக வலித்தாலோ, வித்தியாசமாக    வலித்தாலோ மருத்துவரை அணுகலாம்.

மற்ற அறிகுறிகள்

எலும்புகள் உடைவது, எலும்பு புற்றுநோயின் காரணமாக எலும்புகள் பலவீனமாகும். அதனால் அவை மிக சுலபமாக உடையலாம், எலும்புகள் இருக்கும் பகுதியில் கட்டிகள் தென்படுவது,
மற்ற அறிகுறிகள்

இரவில் வியர்வை, எலும்பை சுற்றியுள்ள பகுதியில் வீக்கம் மற்றும் சிவந்துபோவது, அதிகமான களைப்பு, காரணமே இல்லாமல் உடல் எடை மெலிவது...

பரிசோதனைகள்

மேற்சொன்ன பாதிப்பு களையும், அறிகுறி களையும் வைத்து உங்கள் டாக்டர் உங்களுக்கு எலும்பு புற்றுநோய் தாக்கி யிருக்கலாம் என சந்தேகப்பட்டால் எக்ஸ் ரே செய்ய சொல்வார்.

கூடவே வேறு சில பரிசோதனை களையும் செய்ய அறிவுறுத்துவார். எலும்பு களுக்கான ஸ்கேன், சி..டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ மற்றும் பெட் ஸ்கேன் போன்றவை பரிந்துரைக்கப் படலாம்.

இவை தவிர, எலும்பிலுள்ள கட்டியி லிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து பயாப்சி சோதனைக்கும் உட்படுத்தலாம். எலும்பில் புற்று நோய் இருப்பதை மிக துல்லியமாக காட்டும் சோதனை இது.
புற்று நோயின் நிலைகள்

ஸ்டேஜ் - 1
  
இந்த நிலையில் புற்று நோயானது எலும்பை தாண்டி வேறு எங்கும் பரவி யிருக்காது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியும் வேகமாக இருக்காது.

ஸ்டேஜ் - 2

புற்றுநோய் பரவி யிருக்காது. ஆனாலும் செல்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

ஸ்டேஜ் - 3

ஒரே எலும்பில் குறைந்தது இரண்டு இடங்களி லாவது புற்றுநோய் பாதித் திருக்கும்.

ஸ்டேஜ் - 4

எலும்பை தாண்டி வேறு பகுதிகளிலும் பரவி யிருக்கும்.

சிகிச்சை
புற்று நோயின் நிலைகள்

புற்று நோயின் தன்மை, அதன் தீவிரம், பாதிக்கப் பட்டவரின் உடல் நலம், புற்று நோயின் நிலை போன்ற வற்றை எல்லாம் பார்த்து தான் அதற்கான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார். 

ஆபரேஷன் செய்து கட்டியை அகற்றுவதே முதலில் செய்யப்படும். பாதிக்கப் பட்ட எலும்பையும், அதிலிருக்கும் கட்டியையும் நீக்கி விட்டு, வேறு மாற்று எலும்பு பொருத்துவது அல்லது மெட்டல் இம்பிளான்ட் செய்வது போன்ற வற்றையும் மருத்துவர் யோசிப்பார்.

மாற்று எலும்பானது சம்பந்தப் பட்ட நபரின் உடலின் வேறு பாகத்தி லிருந்தோ, எலும்பு வங்கி யிலிருந்தோ பெறப்படும். கூடவே கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை களும் மேற்கொள்ளப் படலாம்.

க்ரையோ சர்ஜரி (Cryosurgery)

புற்றுநோய் செல்களை உறைய வைக்கிற நவீன சிகிச்சை இது. புற்றுநோய் செல்கள் மெதுவாக வளரும் நிலையில் இது செய்யப்படும்.

சிகிச்சைக்குப் பிறகும் கவனம் தேவை 

எலும்பு புற்று நோயானது உடலின் வேறு பகுதிகளிலும் பரவி யிருக்கலாம். அது சரியாக கவனிக்கப்படா விட்டால் சீக்கிரமே புற்றுநோய் திரும்பும். 

எனவே, ஆபரேஷன் உள்ளிட்ட அனைத்து சிகிச்சை களும் முடிந்த நிலையிலும் அவ்வ ப்போது மருத்துவரை சந்தித்து செக்கப் செய்வது பாதுகாப் பானது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)