வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம் !

0
வளர்ந்து வரும் மருத்துவ துறையில் பிசியோதெரபி மருத்துவம் கடந்த சில வருடமாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 
வலி நீக்கும் பிசியோதெரபி
தொடர்ந்து நம் மனிதகுலத்தை அச்சுறுத்தும் நோய்கள் மனிதன் வாழும் சூழ்நிலைகளை பாதித்தாலும் ஒவ்வொரு மருத்துவ துறைகளும் அதனதன் தனிப்பட்ட முறைகளில் சிறப்பானது. 
அதுபோல் பிசியோதெரபி மருத்துவ முறை தனிப்பட்ட வழிமுறை களை கொண்டு உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை சரி செய்யவும், கட்டுப் படுத்தவும் கண்டறியப்பட்ட ஒன்றாகும். 

ஆங்கில மருத்துவத்தின் சிறப்பு பிரிவாக செயலாற்றி வளர்ந்து அதன் வெற்றி பாதையில் பயணித்து வருகிறது. 

மூட்டு வலி, தசை வலி, முதுகு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, தோள் பட்டை வலி, தசை பிடிப்பு, கழுத்துவலி, மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சினை களை மாத்திரையின் தேவை யில்லாமல் 

எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் தனிப்பட்ட பல்வேறு ஆராய்ச்சி களின் மூலம் நிரூபிக் கப்பட்ட முறைகளை கொண்ட மருத்துவ முறைகளை கொண்டு குணப்படுத்திட கண்டறியப் பட்டதே பிசியோதெரபி மருத்துவமாகும். 

இது ஆங்கில மருத்துவத்தின் ஒரு சிறப்பு பிரிவேயாகும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியோடு தன்னையும் இணைத்து கொண்டு பிசியோதெரபி மருத்துவம் மென்மேலும் வளர்ந்து வருகிறது. 
வலியை போக்க மாத்திரைகள் பல்வேறு கண்டறியப்பட்டாலும் பல்வேறு பக்க விளைவுகளை உடலில் விதைத்து விட்டே செல்லும், அனைவரு க்கும் தெரிந்த பக்க விளைவு வயிற்று எரிச்சல் மற்றும் புண் போன்றவை. 
பிசியோதெரபி மருத்துவ முறை இது போன்ற எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் பாதிக்கப் பட்டவர்களை குணப்படுத்தி தகுந்த வலி நிவாரணி யாக சமீப காலங்களில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் முறையாக படித்து தகுதி பெற்ற மருத்துவர்களை கொண்டு சிகிச்சை பெறும் போது இதன் மகத்துவத்தை இன்னும் செவ்வனே உணரலாம். 
வலி நிவாரணத்தோடு நின்று விடாமல் மூளை ரத்த அழுத்தம் பாதிப்பால் ஏற்படும் பக்கவாதம், மூளை வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள், விளை யாட்டின் போது ஏற்படும் காயங்கள், எலும்பு முறிவுக்கு பின் மூட்டு இறுகி போதல் பல்வேறு பிரச்சினை களை உடற்பயிற்சி மூலமும், 

சில இதற்கெனவே வடிவமைக்க ப்பட்ட சிறப்பான உபகரணங்களை கொண்டு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவத்தின் மூலம் சரிபடுத்தி கொள்ளவும், 

பாதிக்கப் பட்டவர்களு க்கு ஏற்படும் நூறு சதவீத உடல் ஊனத்தை குறைத்து வெற்றி கரமாக யாருடைய உதவியும் இல்லாமல் வாழ வழி செய்திட உதவும் உன்னத பிசியோதெரபி மருத்துவம்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, தோல்பட்டை வலி, மூட்டு தேய்மானம், குதிகால் வலி இது போன்ற மற்ற மருத்துவத்தில் சரி செய்ய முடியாத வற்றை உடற்பயிற்சி, சுடுநீர் ஒத்தடம், மின்சார சிகிச்சை, குளிர்ந்த நீர் ஒத்தடம், லேசர் சிகிச்சை 

இன்னும் சில மருத்துவ உபகரணங் களையும் பிசியோதெரபி மருத்துவர் களால் கைகளை கொண்டு செய்யும் இது போன்ற சிகிச்சை களை கொண்டு நிரந்தர தீர்வு தரமுடியும். 
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை களுக்கு பின் ஏற்படும் வலிகளையும் பிசியோதெரபி சிகிச்சைகள் மூலம் சரி செய்து கொண்டு மீண்டும் பழைய வாழ்க்கையை அடைய முடியும். 
பிசியோதெரபி மருத்துவம்
இது மட்டும் அல்லாமல் விளையாட்டின் போது ஏற்படும் காயங்கள், ஜவ்வு காயங்கள், கிழிதல் போன்ற பிரச்சினை களுக்கும் நிரந்தர தீர்வு உண்டு.

இதை போல பெண்களுக்கு மாத விலக்கு பிரச்சினைகளின் போது ஏற்படும் முதுகு வலி போன்ற பிரச்சினை களை பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு காண முடியும். 

அதே போல் முதியவர் களுக்கு ஏற்படும் எலும்பு சிதைவு நோயினால் ஏற்படும் மூட்டுவலி, முதுகுவலி,தோல் பட்டை வலி, கழுத்துவலி போன்ற வலிகளை சிறு சிறு உடற் பயிற்சிகள் மூலம் பிசியோதெரபி மருத்துவர்களின் அறிவுரை களின் மூலம் எளிதில் சரி செய்ய முடியும்.

நவீன மருத்துவத்தின் ஒரு பகுதியான பிசியோதெரபி மருத்துவம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது. 

உலக பிசியோதெரபி மருத்துவர்கள் பெருமன்றம் 1951-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந்தேதி உருவாக்கப் பட்டது. 

அதன் நினைவாக 1996-ம் வருடத்தி லிருந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8-ந்தேதி உலகத்தில் உள்ள அனைத்து தரப்பு மருத்துவ ர்களும் இந்த நாளை உலக பிசியோதெரபி மருத்துவர்கள் தினமாக கொண்டாடு கிறார்கள். 
உலகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பக்க விளைவுகள் இல்லாத பிசியோதெரபி மருத்துவம் சென்று சேரும் வண்ணம் இந்த வருடம் நாள்பட்ட வலியை அதாவது நாள்பட்ட முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, குதிகால் வலி போன்ற வலிகளை பிசியோதெரபி மருத்துவம் கையாள்கிறது.

செந்தில்குமார் தியாகராஜன், பிசியோதெரபி மருத்துவர், தனியார் கல்லூரி விரிவுரையாளர், குமாரபாளையம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)