காதலனை நம்பி வீட்டை விட்டு வந்த பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம் !

0
சென்னை பல்லாவரத்தில் திருமணம் ஆன ஒரே வாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்



சென்னை பல்லாவரம் அருகே உள்ள திரிசூலத்தை சேர்ந்தவர் மனிஷா. இவர் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த ஓட்டுனர் அபின்ராஜ் என்பவரை காதலித்துள்ளார். 
தைராய்டு பிரச்சனைக்கு உடனடி தீர்வு - கட்டாயம் பகிருங்கள் !
அந்த காதலுக்கு மனிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க குடும்ப உறவுகளை யும் மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலன் அபின்ராஜூடன் ஓராண்டாக வசித்து வந்தார். 

திருமண மாகாத நிலையில் இருவரும் ஓராண்டாக தனியாக வசித்து வந்த நிலையில் மனிஷா கருவுற்றார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

அப்படிப்பட்ட நிலையில் ஒரு முறை ஏற்பட்ட சண்டையின் பொழுது அபின்ராஜ் மனிஷாவின் வயிற்றில் உதைததால் வயிற்றில் இருந்த கரு கலைந்துள்ளது.
ஆலிவ் குடைமிளகாய் சாலட் செய்வது !
இந்த சண்டை களுக்கு பிறகும் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். ஓராண்டாகியும் தன்னை திருமணம் செய்து கொள்ளாத அபின்ராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மனிஷா வற்புறுத்தி யுள்ளார். 
மனிஷாவின் தற்கொலை



ஆனால் காதலன் அபின்ராஜ் சொன்ன பதிலால் மோனிஷா அதிர்ந்து போனார். அதாவது தான் அனிதா என்ற மற்றொரு பெண்ணை காதலித்து வருவதாக கூறி யுள்ளான். 

பெற்றோரை பிரிந்து விட்ட நிலையில் ஆதரவின்றி தவித்து வந்த மனிஷா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவனிடம் தொடர்ந்து கெஞ்சி யுள்ளார்.

அவர் காதலிப்பதாக கூறிய அனிதா என்ற பெண்ணிடமும் தாலி பிச்சை கேட்டு கதறி உள்ளார் மனிஷா. 

கான்பரன்ஸ் காலில் அனிதா அபின்ராஜ் மற்றும் மனிஷா ஆகிய மூவரும் பேசிக்கொண்ட ஆடியோ மனிஷாவின் செல்போனி லிருந்து கைப்பற்றப் பட்டுள்ளது. 
இரத்த சோகை என்பது ?
அந்த ஆடியோவில் மனிஷா அனிதாவிடம் ''எனக்கு தாலி பிச்சை கொடு அனிதா ப்ளீஸ்... ப்ளீஸ்... அனிதா உன் கால்லகூட விழுறேன்... 

நீங்க பேசிக்கோங்க உங்கள வேண்டாம்னு சொல்லல ஆனா எனக்கு தாலி மட்டும்கட்ட விடு உன்னை கெஞ்சி கேட்கிறேன் அப்பா அம்மாவ எழந்து வந்து இருக்கேன் அனிதா...'' என கெஞ்சியுள்ளார். 
வீட்டை விட்டு வந்த பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்



இதற்கு மறு முனையில் பதில் அளிக்கும் அபினராஜு நான் சொல்வதைக் கேள் நான் அவளிடம் உன்னிடம் பேசிய ஒரு வருடத்திற்கு முன்பே அனிதாவிடம் நான் பேசிக்கொண் டிருந்தேன் எனக் கூறியுள்ளான்.

இந்நிலையில் ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வர, மனிஷாவை அபின்ராஜ் ஆகஸ்ட் 25ஆம் தேதி திருமணம் செய்து கொண்டான். 
இதய நோய்கள் !
ஆனால் அதன் பிறகும் அனிதா உடனான உறவு தொடர்ந்த தாக தெரிய ஒரு கட்டத்தில் மனம் உடைந்த மனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது. தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளது என மனிஷாவின் தந்தை முருகன் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
கால்சியம் குறை பாட்டினால் வரக்கூடிய வலிகள் !
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மனிஷாவின் தற்கொலைக்கு காரணம் அபினராஜ் தான் என்பது ஊர்ஜிதமானது. இதனை யடுத்து அவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)