பெண்ணும் பெண்ணும் காதலித்து ஓடிப்போன கதை !

0
17 வயது இளம் பெண்ணுடன் 19 வயது இளம்பெண் ஓடிப்போன சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பெண்ணும் பெண்ணும் ஓடிப்போன கதை




மத்திய பிரதேசத்தில் பங்கலோலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் 2 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனார். 
காவல் நிலையத்தில் காணாமல் போன பெண்ணின் பெற்றோர் புகாரளித் திருந்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காணாமல் போன பெண்ணை வலைவீசி தேடி வந்தனர்.

2 மாதங்களு க்குப் பிறகு அந்த பெண்ணை காவல் துறையினர் தேடி கண்டு பிடித்தனர். அவருடன் 19 வயது இளம் பெண் உடனிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் காணாமல் போன பெண்ணின் பெற்றோர் 19 வயது இளம் பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் வற்புறுத்தினர்.

உடனடியாக காணாமல் போன பெண் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அதாவது 2 ஆண்டுக ளாகவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். 




இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து தப்பியோட எண்ணினார்கள். அதன்படி ஏற்கனவே ஒரு முறை வீட்டை விட்டு ஓடியுள்ளனர். 5 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் அவரை மீட்டு வந்தனர்.
காணாமல் போன பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்தைக் கூட்டினர். அங்கு 19 வயது இளம்பெண் தங்கள் மகளை கடத்தி சென்றதாக புகாரளித்தனர். பஞ்சாயத்து தலைவர்கள் 19 வயது இளம் பெண்ணுக்கு அபராதம் விதித்தனர். 

மேலும் இனிமேல் இருவரும் சந்தித்துக் கொள்ளக்கூடாது என்றும் உத்தர விட்டனர். இந்த சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)