தேனிலவு பயணத்தின் பொது விபத்து - மரணித்த இளம் பெண் !





தேனிலவு பயணத்தின் பொது விபத்து - மரணித்த இளம் பெண் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா தளங்களில் ஒன்று ஏலகிரி மலை. இந்த ஏலகிரி மலையில் பகலில் கூட ஓரளவு குளிர்ச்சி யாகவே இருக்கும். அதே போல் மாலை 04.00 மணியானால் கோடை காலத்திலேயே, பனிக்காலம் போல் குளிரும். 
தேனிலவு பயணத்தின் பொது விபத்து




இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவார்கள். மலையை சுற்றிப் பார்க்க அதிக இடங்கள் இல்லை யென்றாலும், அதன் குளுமையை ரசிக்கவே சுற்றுலா பயணிகள் வருவதால் நூற்றுக் கணக்கான விடுதிகள் இங்கு உள்ளன.
இதனால் புதுமண தம்பதிகளின் வருகையும், இங்கு தற்போது அதிகரித் துள்ளது. 

இந்நிலையில் திருமணமாகி 3 நாட்களே ஆன வாணியம்பாடி நகரம் பெருமாள் பேட்டையை சேர்ந்த மணிகண்டன், தனது மனைவி திவ்யாவுடன் இருசக்கர வாகனத்தில் செப்டம்பர் 5ந்தேதி அன்று காலை வேலூர் மாவட்டம், ஏலகிரிக்கு வந்துள்ளார்.

ஏலகிரி மலையை சுற்றி பார்த்து விட்டு மாலை 05.00 மணியளவில் மலையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் கீழே இறங்கி யுள்ளார். 

மலையின் கொண்டை ஊசி வளைவான 9 வது வளைவு அருகே வரும் போது, தடுப்பு சுவர் மீது மோதி வாகனத்தோடு இருவரும் கீழே விழுந்தனர். இதில் கணவன் - மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.




திவ்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு படுகாய மடைந்தார். அந்த வழியாக வந்த மக்கள் உடனடியாக தங்களது வாகனங் களை நிறுத்தி விட்டு அவர்களுக்கு முதலுதவி செய்துள்ளனர். 
அப்படி யிருந்தும் திவ்யா சம்பவ இடத்திலேயே பலியானார். மணிகண்டனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக மணிகண்டனை வேறு மருத்துவ மனைக்கு மாற்றி யுள்ளனர். 

திவ்யாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர் களிடம் ஒப்படைக்கப் பட்டது. இது குறித்து சோலையார் பேட்டை காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)