கலாம் நினைவு நாளில் இலவச சர்வீஸ் செய்த ஆட்டோ டிரைவர் !

0
சென்னை தேனாம் பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலை அரசன் (29). மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளில் ஒவ்வொரு ஆண்டும் பொது மக்களை இலவசமாக அழைத்து செல்வது வழக்கம்.
கலாம் நினைவு நாளில் இலவச சர்வீஸ் செய்த ஆட்டோ டிரைவர்




இந்த வருடமும் அப்துல் கலாம் நினைவு நாளில் இன்று காலை முதல் மாலை வரை இலவச சேவையை மேற்கொண்டார். 30-க்கும் மேற்பட்ட பயணிகளை அவர் தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்து சென்றார். 

இதில் அவருக்கு மன நிம்மதி ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார். நான் வாடகைக்கு தான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். நாள் ஒன்றுக்கு ரூ.200 ஆட்டோவுக்கு வாடகை கொடுக்க வேண்டும். 
எனது ஆட்டோ உரிமையாளர் அதனை ஒவ்வொரு ஆண்டும் வேண்டாம் என்று கூறி விடுவார். இன்று இலவசமாக பொது மக்களை ஏற்றி செல்வதற் காக ரூ.500-க்கு பெட்ரோலும், ரூ.200-க்கு ஆயிலும் ஆட்டோவில் போட்டு நிரப்பி வைத்து இருந்தேன். 

ஒரு நல்ல மனிதருக்காக இதை செய்வதில் மன நிறைவு அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings