வியட்நாமில் பார்வையில்லாத மகளை கர்ப்பமாக்கிய தந்தை !





வியட்நாமில் பார்வையில்லாத மகளை கர்ப்பமாக்கிய தந்தை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
வியட்நாமில் பார்வை யில்லாத 14 வயது மகளை கர்ப்பமாக்கி குழந்தை பெற செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
வியட்நாமில் பார்வையில்லாத மகளை கர்ப்பமாக்கிய தந்தை
வியட்நாமின் டேம் நொங் மாகாணத்தை சேர்ந்த கணவன், மனைவிக்கு 4 பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை இருந்தனர்.

இதில் மூத்த மகளான 14 வயது சிறுமிக்கு கண்பார்வை கிடையாது, மற்ற நான்கு பேருக்கும் கண் பார்வையில் பிரச்சனை உள்ளது. 

இந்நிலையில் குழந்தைகளின் தாய்க்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதை யடுத்து தந்தை கட்டுப்பாட்டில் குழந்தைகள் வளர்ந்து வந்தனர். 

இந்த சூழலில் மூத்த மகளை அவர் தந்தை பலமுறை துஷ்பிரயோகம் செய்ததால் அவர் கர்ப்பமானார். இதனால் சிறுமியால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. 
பின்னர் பள்ளிக்கூட ஆசிரியர்கள் சிறுமி வீட்டுக்கு வந்து விசாரித்த நிலையிலேயே அனைத்து உண்மைகளும் தெரிய வந்தது. இந்த சூழலில் சிறுமி சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 

இது தொடர்பாக பொலிசில் கொடுக்கப் பட்ட புகாரின் அடிப்படையில் பொலிசார் சிறுமியின் தந்தையை கைது செய்தனர். 

அவரிடம் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை யில் மகளுக்கு பிறந்த குழந்தைக்கு அவர் தான் தந்தை என்பது உறுதியானது. 

பொலிசார் கூறுகையில், சிறுமியின் தாய் மார்பக புற்றுநோயால் பாதிக்கப் பட்ட பின்னர் அவர் வீட்டருகில் இருந்தவர்கள் அவருக்கு பண உதவி செய்தனர். 
ஆனால் அதில் சிறிதளவு பணம் மட்டுமே அவர் சிகிச்சைக்கு செலவிடப் பட்டது, மீதி பணத்தை அவர் கணவர் மது அருந்து வதற்கும் சூதாடு வதற்கும் பயன்படுத்தி யுள்ளார். 

மனைவி மரணத்துக்கு பின்னர் மகளிடம் தவறாக நடந்து கொள்ள தொடங்கியதன் விளைவாகவே அவர் கர்ப்பமானார் என கூறியுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)