இனி தண்ணீரைக் கடித்து சாப்பிடலாம் !

0
தண்ணீரைக் குடிப்பதற்கு பதில் கடித்து சாப்பிடும் காலம் வந்து விட்டது. என்ன நம்ப முடிய வில்லையா? உண்மை தான்.


பொதுவாக உலகில் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. 

பிளாஸ்டிக்கை தவிர்க்க எல்லா நாடுகளும் பல முயற்சி களை எடுத்து வருகின்றன. 

காரணம் பிளாஸ்டி க்கில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை யான அதன் மட்கும் காலம். 

பிளாஸ்டிக் கின் அளவு மற்றும் தன்மையை பொறுத்து அவை மட்க 50 முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகும் என்கி றார்கள் ஆய்வா ளர்கள்.

இதனால் நாம் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள் அப்படியே மண்ணில் 

தங்கி மழை நீரை மண்ணுக்குள் உட்புக விடாமல் செய்கின்றன. 

அது மட்டும் இன்றி தொடர்ச்சி யான பிளாஸ்டிக் பயன் பாடுகளால் நமது உடல் நலமும் பாதிக்கப் படுகிறது. 

பாதிப்புகள் உடனே தெரிவ தில்லை என்றாலும் மெல்ல மெல்ல அதன் அறிகுறிகள் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. 

எனவே பிளாஸ்டிக்கிற்கு மாற்று என்பது அவசிய மாகிறது.

தண்ணீர் பாட்டில்கள்

தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கும் இந்தக் காலத்தில் தண்ணீர் பாட்டில் களின் 

எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. 


இதையும் படிங்க..
மக்கள் கூடும் அனைத்து இடங்களி லும் தண்ணீர் பாட்டில்கள் உபயோகிக் கப்படுகின் றன. 

அதிலும் திருமணம், பொது விழாக்கள் என்று வந்து விட்டால் பாட்டில் களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

இதனைத் தடுக்க லண்டனை மையமாகக் கொண்ட ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் (Skipping Rocks Lab) என்னும் 

நிறுவனம் சாப்பிடக் கூடிய தண்ணீர் பந்துகளை அறிமுகம் செய்துள்ளது. 

மேலும் இந்தத் தண்ணீர் பந்திற்கு Ooho என்று பெயர் வைத்துள்ளது. இவை பார்ப்பதற்கு குட்டி பந்துகள் போல உள்ளன. 

இந்த கண்டுபிடிப்பு வந்து ஒரு வருடம் ஆன நிலையில், பிளாஸ்டிக் பயன் பாட்டிற்கு எதிராக 

பல நாடுகளும் பரப்புரை களை மேற்கொண்டு வரும் இவ்வேளை யில், இந்த தண்ணீர் பந்துகள் மீண்டும் முக்கியத் துவம் பெறுகின்றன.

தயாரிக்கும் விதம்

இந்தத் தண்ணீர் பந்துகள், தாவரங்கள் மற்றும் கடற் பாசிகள் கொண்டு மட்டுமே தயாரிக் கப்படுகின் றன. 

உறைந்த நிலையில் உள்ள நீர் கட்டிகளை, கால்சியம் குளோரைடு மற்றும் 

சோடியம் ஆல்கினேட் கரைசல் களில் அமிழ்த்து வதால் அதன் வெளிப் புறத்தில் சவ்வானது உருவாகிறது.

அறிந்து தெளிக !!

சோடியம் ஆல்கினேட் (NaAgl) பழுப்புப் பாசியில் இருந்து தயாரிக்கப் படுகிறது. 

பழுப்புப் பாசி ஏற்கனவே பல உணவு சார்ந்த பொருட்களில் பயன் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தத் தண்ணீர் பந்துகளின் தோலை பழங்களின் தோலை உரிப்பது போல் உரித்து விட்டுக் கடித்து சாப்பிடலாம். 

பின்பு தோலை குப்பையில் போட்டு விடலாம். அவை 4 முதல் 6 வாரங்களில் மட்கி விடும். 

இல்லை யெனில் தோலை உரிக்காமல் அப்படியே கடித்தும் சாப்பிடலாம். இந்தத் தோல் மிகவும் மென்மை யானது.

இந்தப் பந்துகளில் இருக்கும் தண்ணீரின் அளவானது 50 முதல் 100 மிலி வரை உள்ளது. 

இவற்றைத் தயாரித்த 7 முதல் 10 நாட்களு க்குள் உபயோகிக் கலாம்.

சிறப்பம்சங்கள்

இந்தத் தண்ணீர் பந்துகள் முற்றிலும் இயற்கை யானவை மற்றும் மட்கக் கூடியவை. இவை தண்ணீர் போன்று சுவை யற்றவை. 


எனினும், தேவைக்கு ஏற்ப நிறம் மற்றும் பிளேவர் களைச் சேர்த்தும் வழங்க முடியும் என்கிறது இதனைத் தயாரித்த நிறுவனம் .

இதன் மற்று மொரு சிறப்பம்சம், இதற்கு ஆகும் செலவு பிளாஸ் டிக்கை விடக் குறைவு என்பதாகும். 

இதனால் இவற்றிற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது.

இதுவரை இந்தத் தண்ணீர் பந்துகள் லண்டன், சான் பிரான்சிஸ்கோ, போஸ்டன் 

போன்ற நகரங்களில் நடந்த தனியார் நிகழ்ச்சிகள், மாநாடுகள் மற்றும் விழாக்க ளில் விநியோகி க்கப்பட் டுள்ளன. 

மேலும் தேவைப் படுவோர் அந்த நிறுவன த்தை அணுகலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)