இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை !

0
உயிரினங் களைக் கவர்ந்திழுப்பதும் மற்றும் அச்சப்படச் செய்வதுமான இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை களைப் பற்றிப் பார்க்கலாம்.
இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை !

இடி மின்னல் உண்டாகும் போது பலவற்றைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். சிலவற்றைக் கட்டாயம் செய்யக் கூடாது.

இடி மற்றும் மின்னல் உண்டாகும் நேரம் மற்றும் இடத்தை முன் கூட்டிக் கணிப்பது என்பது சிரமமான ஒன்று.

இடி மின்னல் ஏற்படும் போது நாம் சாதாரணமாகச் செய்யும் செயல்கள் நமக்கும், 

நம்மைச் சுற்றி இருப்பவர் களுக்கும் பெரிய பாதிப்பையும், சில நேரங்களில் உயிரிழப்பையும் உண்டாக்க லாம்.
எனவே இயற்கை பேரிடரான இடி மற்றும் மின்னல் உண்டாவதை புரிந்து கொண்டு எச்சரிக்கை யாக செயல்படுவது மிகவும் அவசியம்.

இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை

வெளி யிடங்களில் இருக்கும் போது

நாம் வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால் உயரமான மரம், மின் மற்றும் அலைபேசி கோபுரத்திற்கு கீழே ஒதுங்கக் கூடாது.


ஏனெனில் உயரமான மரங்களை யும், மின் மற்றும் அலைபேசி கோபுரங் களையும் இடி மற்றும் மின்னல் தாக்கும் அபாயம் அதிகம்.

வெளி யிடங்களில் இருக்க நேர்ந்தால் உடனடியாக கட்டிடங் களுக்குள் செல்ல வேண்டும்.

கட்டிடங்கள் இல்லாத இடங்கள் எனில் குகை, அகழி, பள்ளமான பகுதிகள் ஆகியவை ஒதுங்க ஏற்ற பகுதிகளாகும்.

நாம் மலைப்பகுதிகளில் இருக்க நேர்ந்தால் மலையின் பள்ளமான பகுதிக்கு உடனடி யாகச் செல்ல வேண்டும்.

வெட்ட வெளியில் தனித்த மரங்கள் இருக்கும் இடம் எனில் கைகளால் கால்களை இறுக அணைத்து 

கால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் குனிந்த நிலையில் (குத்த வைத்து) தரையில் அமர்ந்து கொள்வது பாதுகாப்பானது.
இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை !


வெளி யிடங்களில் இருக்கும் போது நாம் சிறிதளவு மின்சாரத்தை உணர்ந்தாலோ, 

உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்த்தாலோ, உடல் கூச்சம் ஏற்பட்டாலோ அவை மின்னல் தாக்குவதற் கான அறிகுறிக ளாகும்.

எனவே அச்சமயம் நாம் உடனடியாக மேற்கூறிய முறையில் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.

நீர்நிலைகளில் குளித்துக் கொண்டோ, மீன் பிடித்துக் கொண்டோ, படகு சவாரி உள்ளிட்ட பொழுது போக்குகளில்
இடி, மின்னல் வரும் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் !
ஈடுபட்டாலோ உடனடியாக அவற்றைத் தவிர்த்து விட்டு நீர் நிலைகளை விட்டு வெளியேற வேண்டும்.

கால்நடை களை இடிதாங்கி பொருத்திய பாதுகாப்பான இடத்தில் இருக்கச் செய்வதன் மூலம் கால்நடை களைப் பாதுகாக்கலாம்.

தொலைபேசி இணைப்புகள், மின்சார இணைப்பு களை பூமிக்குக் கீழே புதைப்பதால் இடி மற்றும் மின்னல் தாக்குத லிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்ய நேர்ந்தால் இடி மற்றும் மின்னல் உண்டாகும் போது 


நான்கு சக்கர வாகனத்தின் ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்து விடவும். 

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளேயே அமர்ந்திருக்க வேண்டும்.

வெட்ட வெளியை விட  நான்கு சக்கர வாகனம் பாதுகாப்பானது.

வீட்டிற்குள் இருக்கும் போது

வீட்டிற்குள் இருக்கும் போது மின்சாரம் கடத்தும் பொருட்களான ரேடியேட்டர்கள், 

மின்அடுப்பு, உலோகக் குழாய்கள், தண்ணீர்த் தொட்டிகள், தொலைபேசிகள் ஆகிய வற்றிலிருந்து தள்ளி இருக்க வேண்டும்.

வீட்டின் ஜன்னல், கதவுகளை இறுக மூடி இருப்பது சிறந்தது.

இடிச்சத்தம் கேட்கும்போது தவிர்க்க முடியாத காரணங் களைத் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டிற்குள் இருக்கும் போது


மின்னல் வெளிச்சத் திற்கும், இடிச்சத்தத் திற்கும் இடைப்பட்ட காலநொடி களை 

மூன்றால் வகுத்தால் வரும் எண்ணே மின்னலு க்கும், நமக்கும் இடையே உள்ள இடைவெளி கிமீ-ல் ஆகும்.
இடி மின்னல் ஏற்படக்கூடிய ஆபத்தான பொருட்கள் மற்றும் இடங்கள் !
எடுத்துக்காட்டாக மின்னலுக்கும், இடிக்கும் இடையே உள்ள காலஅளவு 30 நொடிகள் எனில் 

மின்னலு க்கும் நமக்கும் இடையே உள்ள இடைவெளி 30/3 = 10 கிமீ ஆகும்.

இடி மின்னலின் போது செய்யக் கூடாதவை

இடி மற்றும் மின்னல் உண்டாகும்போது மின்சாரத்தால் இயங்கும் ஹேர் டிரையர்கள், 

மின்சார பல்துலக்கிகள், மின்சார ரேசர்கள் உள்ளிட்ட வைகளை பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் மின்னலின் போது, மின்னலில் இருந்து வரும் மின்சாரம் அவற்றைப் பயன்படுத்து வோரை எளிதில் தாக்கும்.

கைபேசி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி ஆகிய வற்றின் பயன் பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.

இடி மற்றும் மின்னல் உண்டாகும் போது குளிப்பது, கைகழுவது, துவைப்பது உள்ளிட்ட தண்ணீரைக் கொண்டு செய்யும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
இடி மின்னலின் போது செய்யக் கூடாதவை


வெட்ட வெளியில் உலோகப் பொருட்களை மின்னல் உண்டாகும் போது பயன் படுத்தாமல் இருப்பது நல்லது.

இடி மின்னலின் போது இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் உள்ளிட்ட வைகளில் பயணம், கால்நடை யாகச் செல்வது ஆகிய வற்றை மேற்கொள்ளக் கூடாது.

இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை பற்றித் தெரிந்து கொண்டீர்கள். நன்றி
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings