மருத்துவர் குடிபோதையில் பிரசவம் பார்த்ததால் பெண் மரணம் !

0
குஜராத் மாநிலம் போட்டாடு பகுதியில் மருத்துவர் குடிபோதை யில் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.


ராஜ்கோட், போட்டாடு பகுதியை சேர்ந்த காமினி சாஷியா (22) பிரசவ வலியின் காரணமாக 

நேற்று இரவு 11.30 மணியளவில் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.

அப்போது மருத்துவர் பரேஷ் லக்கானி பணியில் இருந்துள்ளார். ஆனால் அவர் குடிபோதை யில் இருந்துள்ளார். 

இதை யடுத்து காமினி சாஷியாவுக்கு பிரசவ வலி அதிக மானதால் பரேஷ் லக்கானியே பிரசவம் பார்த்துள்ளார். 

இதில் தாய் காமினி சாஷியாவும் வயிற்றில் இருந்த குழந்தையும் மரண மடைந்தனர்.

இதைத் தொடர்ந்து மருத்துவர் குடிபோதை யில் இருந்தது குறித்து பெண்ணின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக் காக பாவ்நகர் சிவில் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் தடை சட்டத்தின் கீழ் பரேஷ் லக்கானி கைது செய்யப் பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “தற்போது தடைச் சட்டத்தின் கீழ் லக்கானி கைது செய்யப் பட்டுள்ளார். 

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்.” எனத் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)