அதை பற்றி தெளிவாக விளக்குவீர்களா? சிவகுமார் !

சிவகுமார் ஒரு பன்முகத் திறமை கொண்ட மனிதராக இருக்கிறார். நல்ல நடிகர், நல்ல ஓவியர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் தெரிகிறார்.
title=
இவர் சமீபத்தில் ஏதோ ஒரு கல்லூரி யில் பேசிய பேச்சின் வீடியோவை ஜெயா தொலைக் காட்சியில் பார்க்க நேர்ந்தது.

அதில் அவர் பேசிய பல விஷயங்கள் மனதை நெகிழ வைத்தது. அதில் ஒன்று- கவிக்குயில் படத்துக் காக அவர் ஷூட்டிங் சென்ற போது

மனிதக் கழிவு களினூடே அவர் படுத்துக் கொண்டு நடிக்க நேர்ந்ததற்கு அவர் சொன்ன காரணம்.

புயல் காற்று அடிப்பது போன்ற காட்சியாம் அது. படுத்துக் கொண்டி ருக்கும் சிவகுமாருக் கடியில் தண்ணீர் ஓடுகிறது.

அதில் மனிதக் கழிவுகளும் கலந்திருந்த துர்நாற்றம் வீசுகிறது. ஆனாலும் அவர் சில மணி நேரங்கள் அப்படியே படுத்த நிலையில் அந்த துர்நாற்ற த்தைப் பொறுத்துக் கொண்டு நடித்துக் கொடுக்கிறார்.

அதற்கு அவர் ஒரு காரணம் சொன்னார். அது சகலரையும் மிகவும் கவர்ந்த திருக்கும்.அதாவது மனித மலத்தை மனிதர் களையே அள்ளச் சொல்லும் பழக்கம் நமக்கிருக் கிருந்தது. 

அந்தக் கொடுமைக்கு தெரிந்தோ தெரியாமலோ நாமும் பொறுப்பு தான். அதற்கு தண்டனை யாக அதை நான் ஏற்றுக் கொண்டேன் என்று அவர் சொன்னார்.

இதே வார்த்தை களில் அல்ல. இந்த அர்த்தத்தில். அவர் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பதை அது நமக்கு காட்டுகிறது அல்ல்வா?

இப்படி பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக் களைத் தெளிவா கவும் துணி வாகவும் சொல்லி வரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக் களைத் தெளிவாகவும் நல்ல புரிதலுடனும் சொல்கிறார்.

அது பற்றிய கேள்வியும் பதிலும்;

கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல்வ தில்லையே..நீங்களாவது விளக்கு வீர்களா?

ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமை யாக அறிந் தவர்க்கு பூமியிலேயே பேரின்பம்.

காமக் கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப்பிய பாரதத்தில் பெரும் பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை என்பது தான் சோகம்.

title=
குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்து விட்டதாலோ, முதலிரவைத் தாண்டி விட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் தேர்ச்சி பெற்று விட்டோ மென்று கருதமுடியாது.

ஆணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு; பெண்ணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு. ஆண் செயல் படுபவன்; பெண் அதை பெற்றுக் கொள்பவள்.

எத்தனை நதி பெருக்கடுத் தாலும் கடல் மட்டம் உயராது. எத்தனை விறகுக் கட்டை களைப் போட்டாலும் வேள்வி நெருப்பு அணையாது.

அவ்வளவு வீரிய மானது பெண்க ளுடைய செக்ஸ் உணர்வு.சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்று ஆகாயத் திலும் அடுக்கு மாடிகளிலும் பறந்தும் ஒருவன் ஜாலம் செய்யலாம்.
ஆனால் ஒரு பெண்ணை அவ்வளவு எளிதில் செக்ஸில் அடிபணிய வைக்க முடியாது. மனதாலும் உடலாலும் ஒத்துழைப்ப தில்லை என்று ஒரு பெண் முடிவெடுத்து விட்டால், 

சடலத்தோடு உறவுகொண்ட விரக்தியே மிஞ்சும்.ராமாயண த்தில் கௌதம முனிவன் மனைவி அகலிகை யிடம் தேவேந்திரன் மாறு வேடத்தில் வந்து கூடுவான்.

தன் கணவன் என்று நினைத்து இணங்கிய அகலிகைக்கு அடுத்த சில நொடிகளில் இதுவேறு ஆடவன் என்று புரிந்து விடுகிறது.

இருந்தாலும் போகட்டும் என்று அனுமதித்து விட்டாள் என்று ஒரு சம்பவம் உண்டு. இதை அறிந்த கௌதம முனிவன் அகலிகையைக் கல்லாகச் சமைத்து விட்டான் என்று கதை போகும்.

டாக்டர் மாத்ருபூதம் செக்ஸ் பற்றிய விவாதத்தில் அகலிகை யின் உணர்வை உறுதிப் படுத்துகிறார். எவ்வளவு தான் ஒரு பெண் மனதளவிலும் உடல் வழியாகவும் முரண்டு பிடித்தாலும்,

ஒரு காமுகனின் பலாத் காரத்தை- ஒரு கட்டத்தில் உடம்பு ஏற்றுக் கொள்கிறது. மனதை உணர்ச்சி தற்காலிக மாக வென்று விடுகிறது.

சில கணம் உடல் அந்த உறவில் திளைத்து மூழ்கியபின் மீண்டும் மனம் உணர்ச்சியை வெல்லும் போது நடந்து விட்ட தவறுக்கு அவள் கதறி அழுவாள். இதுவே உண்மை என்கிறார்.

மனித உடம்பை இரண்டாகப் பிரித்து மேல்பகுதி சுத்த மானது, கீழ்ப்பகுதி அசுத்த மானது. வலது கை சுத்தம்; இடது கை அசுத்தம் என்று பிள்ளை களிடம் சொல்லித் தராதீர்கள் என்கிறான் ஓஷோ. உடல் முழுமை யானது.

வாயில் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டு மென்றால் ஆசனவாய் சுத்தமாக இருக்க வேண்டும்.

ஆசன வாயில் அடைப்பு ஏற்பட்டால் துர்நாற்றம் மேலே கிளம்பி சிறுகுடல், இரைப்பை, உணவுக் குழாய் வழி வாயிலே புகுந்து வெளியேறும்.

ஆசனவாய் சிறு நீர்த்தாரை இரண்டையும் தூய்மை யாக வைத்துக் கொள்ள குழந்தை களுக்குச் சொல்லிக் கொடுங்கள். சிறுவனோ சிறுமியோ சிறுநீர்க் கழித்த பின் அதிலே தேங்கும் உப்பின் காரண மாக,

பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் போது விரலால் சொறியவே செய்யும். அங்கு கை வைப்பது பாவம், தவறு என்று சொல்லி குழந்தை களை அதட்டா தீர்கள், மிரட்டா தீர்கள்.

சிறுநீர் மற்றும் மலம் கழித்த பின் அந்தப் பகுதிகளைச் சுத்த மாகக் கழுவப் பழக்கி விடுங்கள்.

அதை விடுத்து, வீண் மிரட்டல் விடுப்ப தால் தன் உடம்பில் உள்ள அந்த உறுப்பு, வேண்டாத ஒன்று - தீண்டத் தகாதது என்று அந்தச் சிறுவன்

அல்லது சிறுமி மனதிலே எண்ணம் படிய, அவர்கள் வளர்ந்து திருமணம் செய்து முதலிரவில் சந்திக்கும் போது ஏதோ கெட்ட காரியம் செய்கிறோம் - பாவ காரியம் செய்கிறோம் என்று பயந்தே கூடுகிறார்கள்.

அதனால் பிறக்கும் குழந்தை குழப்பத்துடன் மிரட்சியுடன் பிறக்கிறது. ஒரு வயதுக்குப் பிள்ளைகள் வளர்ந்த வுடன் செக்ஸ் பற்றிய விஷய த்தையும்,

பிறப்பு உறுப்புக் களின் பயன் பாட்டையும் குழந்தை களுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்கிறான் ஓஷோ.

‘மனிதனுக்கு இயற்கை யில் இரண்டு பசி உண்டு. ஒன்று மேல் வயிற்றுப்பசி. இன்னொன்று கீழ் வயிற்றுப்பசி. 

இரண்டு பசிக்கும் முறை யாகத் தீனி போடா விட்டால் அடங்காது’ என்கிறார் கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜ நாராயணன்.

அறியாத வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, ஐந்தாறு நாட்கள் அவளுடன் கூடிக் குளாவி ருசி பழக்கி விட்டு துபாய்க்கு நீ வேலைப் பார்க்கப் போய் விட்டால் அவள் கதி என்ன ஆகும்?

ருசி கண்ட பூனை எத்தனை நாட்கள் பொறுமை யாக இருக்கும்?

இதில் அவள் தவறு எங்கே இருக்கிறது?

ராம கிருஷ்ண பரமஹம்சர் வணக்கத்திற் குரிய துறவி. அவர் நாற்பது வயது தாண்டியே திருமணம் செய்து கொண்டார்.

சாரதா தேவிக்கும் அவருக்கும் இருபத்தி யிரண்டு வயது வித்தியாசம். தன் மனைவியை அம்பாள் வடிவமாக, சக்தியின் பிம்பமாக பரமஹம்சர் பார்த்தார்.

அவரது பக்தியை சாரதா அம்மையாரும் அப்படியே ஏற்றுக் கொண்டார். அவர்கள் தெய்வீகத் தம்பதிகள்.

கஜூராஹோ கோவில்
இன்று ஒரு ஆண் செக்ஸ் உணர்வு குறையத் துவங்கும் நாற்பது வயதில் தன்னைவிட 22 வயது குறைவான ஒரு பெண்ணை மணந்து,

செக்ஸ் பற்றி எதுவும் அவளிடம் பேசாமல், நீ சக்தி வடிவம் என்று பீடத்தில் அமர்த்தி விபூதி அடித்தால் அவள் நிலை என்ன ஆகும் ? யோசியுங்கள்!

பூப்படைந்து ஆறு ஆண்டு களில் செக்ஸ் உணர்ச்சிப் பொங்கிப் பிரவாக மெடுக்கும் வயதில் அவளை நீ ‘அம்பாள் வடிவம் நெருங்காதே’ என்றால் அவள் கதி என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்.

திருமண மாகி சில ஆண்டுகள் கழிந்ததும் செக்ஸ் உணர்வை ஒரு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.

இரவு பகல் எந்நேரமும் அதே சிந்தனை யோடு, இருபது ஆண்டுகள் கழித்தும் ஒரு ஆணோ பெண்ணோ அலையக் கூடாது.

‘அதே சமயம் இனவிருத்திக் காக மட்டுமே மனைவியைக் கூட வேண்டும். மற்ற நேரம் அவளை நெருங்கக் கூடாது’ என்கிற காந்திஜி தத்துவ த்தைக் கடைப் பிடித்து,

பக்கத்தில் படுத்தி ருக்கும் மனைவியைப் பாராமுகமாய் ரிஷ்யசிருங்கர் போல, முற்றிலும் உறவு தவிர்த்து வாழ்வதும் அவசிய மில்லை.

முழுமை யான செக்ஸ் இன்பம் என்பது உடலாலும் மனதாலும் ஒருமித்து திருப்தி அடைவது. உடலிலே குறைபாடு உள்ள வர்கள், ஆண்மை இழந்த வர்கள் கூட,

ஒரு பெண்ணுக்கு மனதளவில் செக்ஸ் இன்பம் அனுபவித்த திருப்தியைக் கொடுக்க முடியும். விடுமுறை நாட்களில் உங்கள் மனைவியை ஊட்டிக்கு பஸ்ஸில் அழைத்துப் போங்கள். 

மேட்டுப் பாளையத் திலிருந்து மேலே கல்லாறு பகுதியை பஸ் கடக்கும் போது குளிரில் பற்கள் தடதடக்கும். உங்கள் ஸ்வெட்டரை உங்கள் மனைவி க்குப் போட்டு விடுங்கள்.

அதிகாலை ஆள் மறைக்கும் மேக மண்டலத்தில், மயிர்க்கூச் செரியும் குளிரில், தொட்ட பெட்டா சிகரம் சென்று ஒருவரை ஒருவர் கட்டி அணைத்த படி சூடான வேர்க் கடலைக் கொரியுங்கள்.

நடந்தே ஊட்டி ஏரிப்பகுதிக்கு வந்து ‘பெடல் போட்டில்’ ஐஸ்கிரீம் சாப்பிட்ட வாறு ஒரு மணி நேரம் சவாரி செய்யுங்கள்.

அடுத்த பக்கத்தில் வரிசை யாக மட்டக்கு திரைகள் நிற்கும். ஒரு குதிரை யில் மனைவியை ஏற்றி விட்டு லேக் ஏரியாவை ஒரு சுற்றுச் சுற்றுங்கள்.

பகல் விருந்து க்குப் பின் மேட்னி காட்சி. இரவு கதகதக்கும் ஹோட்டல் அறையில், நடுங்கிக் கொண்டு உள்ளே வரும் மனைவியை இறுகக் கட்டி அணைத்து படுத்துக் கொள்ளுங்கள்.

எழுபத்தைந்து விகித சந்தோஷ த்தை அவள் அனுபவித் திருப்பாள். உடல்ரீதியான செக்ஸ் இங்கே இரண்டாம் பட்சம் தான்.

ஆணைப் பொறுத்த வரை செக்ஸ் விஷயத்தில் என்றுமே அவசரக்காரன் தான். அடுப்பை மூட்டா மலேயே, தோசைக் கல்லை அடுப்பின் மீது வைத்து தோசை மாவை ஊற்றி விடுகிற புத்திசாலி இவன்.
சில சமயம் தோசைக்கல், 50 தோசை களை வேக வைக்கும் அளவு சூடாக இருக்கும்போது இவன் அரைக் கரண்டி மாவை மட்டும் ஊற்றுவான்.

பெண்களை நெருங்கா மலேயே இருந்து விடுவது உத்தமம். அவர்களை ஆட்டத் திற்குத் தயாராக்கி விட்டு, நீ சீக்கிரமே ஆட்டத்தை முடித்து ஓடுவது பின்னால் விபரீத விளைவு களை ஏற்படுத்திவிடும்.

இயற்கை யிலேயே அதிக செக்ஸ் பசி உள்ள ஆணுக்கு செக்ஸ் உணர்வு குறைவாக உள்ள மனைவி அமைவதும் உண்டு.

அதிக செக்ஸ் பசி உள்ள மனைவி க்கு கையா லாகாத கணவன் அமைவதும் உண்டு. அப்போது தான் ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ கதை நிகழும்.

50 ஆண்டுகள் மண மொத்த தம்பதியாய் வாழ்ந்த ஒரு ஜோடி, ஊசி முனைகள் ஒன்றை யொன்று தொட்டுக் கொள்ளும் நிலையில்,

உச்சம் தொட்ட இன்பத்தை - ஐந்து அல்லது ஆறு முறை அனுபவித் திருந்தால் பெரிய விஷயம் என்கிறது ஒரு நூல்.

ஒன்று இவன் முந்தி உச்சம் தொட்டு அடங்கி விடுவான் அல்லது அவள் உச்சம் தொடும் போது இவன் ஓய்ந்தி ருப்பான்!
உடல் பலத்தைப் பயன் படுத்தி செக்ஸில் வெற்றி பெறுவதை விட, சாதுர் யத்தைக் கடைப் பிடித்து, பெண்ணை உச்சம் கொண்டு சென்று மகிழ் விப்பது எளிது.

பூரண செக்ஸ் இன்பம் என்பது இருவரும் ஒரே சமயத்தில் உச்ச நிலையை அடைவதே. அது தெய்வ நிலை.

உலகை மறந்த அற்புதக் கணம்!

அந்தக் கணங்களில் தான் ஈருடல் ஓருயிர் நிலையை இருவரும் எய்துகிறார்கள்.

செக்ஸ்
இந்திய மண்ணில், பொதுவாக எந்தக் கணவனும் தன் மனைவி யிடம் இன்று நீ சந்தோஷ மாய் இருந்தாயா என்று கேட்ப தில்லை.

பெண்ணின் திருப்தி- அவள் உடல் அசைவு களில், மயக்க நிலை முனகல் களில் வெளிப்படும். அதுபற்றி நாம் கவலைப் படுவதே இல்லை.

டாய்லெட்டில் சிறுநீர் கழிக்கும் நேரமே இவன் செக்ஸுக்கு ஒதுக்குவது கொடுமை.

இந்த லட்சண த்தில் விலை மாதரிடம் விளையாடி எய்ட்ஸ் வாங்கி வந்து வீட்டிலி ருக்கும் மனைவி க்கும்

அவள் வயிற்றில் சுமக்கும் அப்பாவிக் குழந்தை க்கும் அந்த எய்ட்ஸை தானம் செய்யும் புண்ணிய வான்களும் உண்டு.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் செக்ஸ் கூடாது என்று தான் பெண்கள் திங்கள், வெள்ளி தினங்களில் எண்ணெய்க் குளியல் போட வேண்டும். ஆண் சனிக் கிழமை குளிக்க வேண்டும் என்று வகுத்து வைத்தனர்.

தலையில் குளிர்ந்த எண்ணெய் வைத்து, அரக்கித் தேய்த்து உடம் பெல்லாம் பூசிவிடும் போது உச்சந்தலை உஷ்ணம் உடம்பின் கீழ்ப் பகுதிக்கு வந்து விடுகிறது.

அன்று மனைவியைக் கூடும் போது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு சீக்கிரமே ஆட்டத்தை முடித்து விடுவான். உடல் சக்தியும் அதிகம் வீணாவ தால் மறு நாள் உடல் அசதி கூடுதலாக இருக்கும்.

உடல் இன்ப வேட்கை
குடித்து விட்டு உறவு வைத்தால், கொடிகட்டிப் பறக்கலாம் என்று பலர் நினைக் கின்றனர். 

மது, ‘உடல் இன்ப வேட்கையை அதிகப் படுத்தி விட்டு, செயல் பாட்டைக் குறைத்து விடும்’ என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று படித்தவர்கள் கூட பெண்களை போகப் பொருளாகவே பார்க்கின்றனர். காலையில் எழுந்து குளித்து, அடுப்பு பற்றவைத்து சிற்றுண்டி தயாரித்து, பிள்ளை களைக் குளிப்பாட்டி,

ஊட்டி விட்டு யூனிஃபார்ம் போட்டு பள்ளிக்கு அனுப்பிய கையோடு, கணவனை கவனித்து பின் அரக்கப் பரக்க அலுவலகம் போய் ஆணா திக்கம் மிக்க மேனேஜரிடம் அநியாய மாகத் திட்டு வாங்கி,

மாலை வரை ஃபைல்களில் மூழ்கி, ஆறு மணிக்கு பஸ் பிடித்து அடித்துப் பிடித்து வீடு வந்து, கணவனுக்கு காபி போட்டுக் கொடுத்து,

பிள்ளை களுக்கு பிஸ்கட் கொடுத்து, இரவு உணவு தயாரித்து எல்லோருக்கும் பரிமாறிவிட்டு உணர்ச்சியற்ற பிணமாய்ப் படுக்கை யில் சாய்பவள்-

உனக்கு, ஊர்வசி ரம்பை போல் காட்சி யளிக்க வேண்டும் - தாசி போல் இன்பம் தர வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?

ஓய்ந்து களைத்து உறக்க த்துக்கு ஏங்கும் உடம்பு ஒரு போதும் செக்ஸுக்குத் தயாராய் இராது.

இன்றைய வாழ்க்கை அமைப்பில் கணவன் மனைவி சேர்ந்தாற் போல் இரண்டு மணி நேரம் வீட்டில் இருக்க வாய்ப் பில்லை.

இருவரும் வேலைப் பார்க்கி றார்கள். பெரும்பகுதி அலுவலக த்திலும் பஸ் பயணத் திலுமே கழிந்து விடுகின்றன.

மிச்ச மிருக்கிற சொற்ப நேரத்தில் பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, ரேஷன், பெட்ரோல் என்று பற்றாக் குறை பட்ஜெட் பற்றிப் பேசி டென்ஷ னாகவே இருக் கிறோம்.

கணவன் மனைவி வாரத்தில் கடைசி ஒரு நாளாவது வீட்டை விட்டு எங்காவது வெளியில் சென்று வர வேண்டும். வசதி இல்லாதவர் களுக்கு சென்னை யில் கடற்கரை இருக்கிறது.

பாம்புப் பண்ணை, மிருகக் காட்சி சாலை இருக் கின்றன. வெளியூர் தம்பதிக்கு இருக்கவே இருக்கிறது சினிமா.

அதை விட்டால் அருகில் ஏதாவது ஒரு கோயில். இப்படி அன்றாடப் பிரச்சினை களை மறக்க ஒரு நாளை யாவது ஒதுக் குங்கள்.

உடல் ரீதியான உறவில் ஏற்படும் குறைபாடு
கணவன் மனைவி யரிடையே விரிசல் ஏற்பட புறக்காரண ங்களை விட, உடல் ரீதியான உறவில் ஏற்படும் குறைபாடு மற்றும் விரக்தியே அடிப்படைக் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒருவரை யொருவர் புரிந்து கொண்டு அனுசரித்து வாழ வேண்டும்

போகப் பொருளாக- துய்த்தபின் தூக்கி எறியும் வஸ்துவாக, பெண்களை நினைப் பதை நாம் மறந்து, அவளும் நம்மைப் போல் ஒரு ஜீவன். நமக்கு இருக்கும் விருப்பு, பொறுப்பு, ஆசாபாசம் அவளு க்கும் உண்டு.

அவளில் லாமல் குடும்பத்தை ஒரு ஆண் உருவாக்கி விட முடியாது. பரம்பரைத் தழைக்க முடியாது. நம்மைப் பெற்று வளர்ப்பவள் பெண். நம் வெற்றி க்குத் துணை நிற்பவள் பெண்.

நம் வயோதிகக் காலத்தில் பாசத்தைப் பொழிபவள் பெண்….என்பதை உணர்ந்து நடந்தால் பூமியில் சொர்க்கத்தை அனுபவிக் கலாம்.
Tags:
Privacy and cookie settings