அப்பன்டிசைடிஸ் என்பது கல் அடைப்பது அல்ல !

அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்த போதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை.
நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால் தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணு பவர்கள் இன்றும் பலர் இருக்கி றார்கள்.

வயிற்றின் வலதுபுற கீழ்ப் பகுதியில்

அப்பன்டிக்ஸ் என்பது எமது உணவுக் கால்வாயின் பெருங் குடலில் விரல் போல நீள வடிவான ஒரு சிறு பை போன்ற உறுப்பு ஆகும். 

இது எமது வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலது பக்கமாக அமைந் துள்ளது. உண்மையில் இந்த உறுப்பின் பயன் என்ன என்பது எவருக்கும் தெரியாது.
உடலுக்குள் நச்சுகளை நீக்க தண்ணீர் போதும் 
மனிதனின் கூர்ப்பின் போது தேவை யற்றுப் போன ஒரு பகுதி எனக் கருது வாரும் உளர். இதில் சளி போன்ற ஒரு திரவம் சுரப்பதுண்டு. அது வழிந்து பெருங் குடலில் சேர்ந்து விடும்.

அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்த போதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. 

நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால் தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணு பவர்கள் இன்றும் பலர் இருக்கி றார்கள்.

எவ்வாறு ஏற்படுகிறது?

அப்பென்டிக்ஸ் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் தான் இது ஏற்படுகிறது. ஆனால் கல்லினால் அல்ல. மலத் துகள்கள், குடற் புழுக்கள், அல்லது கட்டிகள் பொதுவாகத் தடையை ஏற்படுத்தும்.

இதனால் அதில் சுரக்கும் திரவம் வெளியேற முடியாது தடைப்பட்டு வீங்கும். அத்துடன் அதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அழற்சி யடையும்.

வீங்கிச் சிவந்த அப்பென்டிக்ஸ்
உடனடியாகச் சத்திர சிகிச்சை செய்து அதனை அகற்ற வேண்டும். இல்லையேல் வயிற்றறையில் அது வெடித்து விடும். வெடித்தால் கிருமிகள் வயிற்றறை முழவதும் பரவி ஆபத்தாக மாறி விடும்.

வயிற்ற றையில் அவ்வாறு கிருமி பரவுவதை பெரிடனைடிஸ் (Peritanaitis) என்பார்கள். எந்த வயதிலும் இந்நோய் ஏற்படலாம் என்ற போதும் 10 முதல் 30 வயதிற்கு இடைப் பட்டவர்களே அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.

அறிகுறிகள்

நிறபதும் நடப்பதுவும் வேறெதுவும் வலியைத் தணிக்காது. இதன் முக்கிய அறிகுறி வயிற்றில் ஏற்படும் வலி தான். 
இதன் வலியை எவ்வாறு ஏனைய வயிற்று வலிகளி லிருந்து வேறுபடுத்தி அறிவது? திடீரென ஏற்படும் வலியாகும். 

தூக்கதிலிருந்தால் திடீரென விழத்தெழச் செய்யும் ஆரம்பத்தில் முழு வயிறும் வலிப்பது போலிருக்கும். ஆனால் படிப் படியாக அவ்வலி வலது பக்க அடி வயிற்றில் நிலை கொள்ளும்.
முன்னெப் பொழுதும் அனுபவித்து இருக்காத தாகத் தோன்றும் இவ்வலி சிலமணி நேரத்தில் மோசமாகும். படுத்தல், தலை யணையை அணைத்தல், கால்களை மடக்கிப் படுத்தல் போன்ற எந்த நிலையிலும் குறையாது.

ஆனால் எழுந்து நடக்கும் போதும், இருமும் போதும், தும்மும் போதும், ஆழ்ந்த மூச்செடுக்கும் போதும் தாங்க முடியாதளவு கடுமையாக இருக்கும்.

வலியைத் தொடர்ந்து வேறு சில அறி குறிகளும் தோன்றலாம்

பசியின்மை

வாந்தி அல்லது வயிற்றுப் புரட்டு

மலங் கழித்தால் வலி குறையும் என்பது போன்ற உணர்வு. ஆனால் மலம் கழித்தாலும் வலி தணியாது.

கடுமை யாக ஏறிக் காயாத குறைந்தளவு காய்ச்சல்

வயிற்றுப் பொருமல், வாய்வு வெளியேறுவதில் சிரமம்.

ஒரு சிலரில் மலச்சிக்கல் அல்லது மலம் இளக்க மாகக் கழிதல்

பொதுவாக எக்ஸ்ரே ஸ்கான் போன்ற எந்தப் ஆய்வு கூடப் பரிசோத னைகளும் இன்றி நோயாளியை சோதித்துப் பாரப்பதன் மூலம் மருத்தவரால் நோயை நிச்சயிக்க முடியும்.

சிகிச்சை

அப்பென்டிசைடிஸ் என மருத்துவர் தீர்மானி த்தால் சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்று வார்கள். இப்பொழுது பாரிய வெட்டுக் காயம் இன்றி
இன்சுலின் போடும் முன் கவனிக்க வேண்டியவை  !
சிறு துளைகள் வழியான லப்ரஸ்கோபி சத்திரசி கிச்சையே பெரும்பாலும் செய்யப் படகிறது. உடனடி யாகச் செய்வதன் மூலம் உன்ளே வெடிக்கும் ஆபத்தைத் தவிர்க்கலாம்.
சிறு துளைகள் மூலம் சத்திர சிகிச்சை

சில தருணங் களில் அதைச் சுற்றிச் சீழ்க்கட்டி (Appendiciel Abscess) தோன்றலாம். நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics) கொடுத்து அதைக் கட்டுப்படுத்துவதுடன் வயிற்றறையில் குழாய் விட்டு சீழை அகற்றவும் செய்வர்.

6 முதல் 8 வாரங் களுக்குப் பின் சத்திர சிகிச்சை மூலம் அப்பென்டிக்சை அகற்றுவார்கள். 

சத்திர சிகிச்சை வசதி கிட்டாத போது அல்லது நோயாளி சத்திரசி கிச்சைக்கு உட்படக் கூடியளவிற்கு ஆரோக்கி யமாக இல்லை யெனில்

நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் மூலமும், நார்ப்பொருள் குறைந்த இலகுவாக சமிபாடடையும் ஆகாரங் களுடனும் சிகிச்சை அளிப்பதுண்டு.

சில ஆய்வுகள் சத்திர சிகிச்சை செய்யாமலே அப்பென்டிசைடிஸ் குணமாகும் என்று கூறுகின்றன. 

ஆயினும் சத்திரசி கிச்சைக்கான வசதிகள் இருக்கும் போது அவ்வாறு ரிஸ்க் எடுப்பது புத்தி சாலித்தனம் என்று சொல்ல முடியாது.
Tags: