ஆதார் கார்டு ஏன் அவசியம் தெரியுமா?

இன்றைய தேதியில் நீங்கள் இந்தியாவில் வாழ எது அவசியமோ இல்லையோ ஆதார் அவசியம். ரேஷனில் அரிசி வாங்குவது முதல் வருமான வரி கட்டுவது வரை, பள்ளி அட்மிஷன் முதல் 
ஆதார் கார்டு ஏன் அவசியம் தெரியுமா?
மருத்துவ மனை அட்மிஷன் வரை, ரயில் டிக்கெட்டி லிருந்து விமான டிக்கெட் வரை… ஆதார் அவசிய மாக்கப் படுகிறது.

ஆதார் இல்லாத மனிதன் அரை மனிதன் என்று எதிர் காலத்தில் பள்ளிகளில் பாடமெல்லாம் நடத்துகிற வாய்ப்பு இருக்கிறது. 

அந்த அளவுக்கு இந்த 12 இலக்க ஒற்றை அடையாள எண், இந்தியர் களின் வாழ்வில் அனைத்து அம்சங் களிலும் ஊடுருவி நிற்கிறது.

தனிமனிதனின் கனவு!

இந்தியா குறித்த கனவு நம் எல்லோருக் குமே இருக்கிறது. சிலர் அதை நூலாகவும் எழுதியிருக் கிறார்கள். 

ஆனால், எல்லோரு க்கும் தாங்கள் காணும் கனவை செயல் படுத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைப் பதில்லை. நந்தன் நிலக்கனிக்கு அது கிடைத்ததால் உருவானதுதான் இந்த `ஆதார்'.

இந்தியாவின் மிக வெற்றி கரமான ஐ.டி நிறுவனம், இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர், நந்தன் நிலக்கனி. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். மும்பை ஐ.ஐ.டி-யில் எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங் படித்தவர். 

2008-ம் ஆண்டில் இவர் எழுதிய நூல், ‘Imagining India: The Idea of a Renewed Nation’. இதில் அவர், ‘விசேஷ அடையாளம்’ என்ற கருத்தாக் கத்தை முன் வைத்திருந்தார்.

‘ஒவ்வொரு வருக்கும் ஒரு எண் கொடுத்து, அந்த எண்ணை அடை யாளமாக வைத்து லட்சக்கணக் கான இந்தியர் களுக்கு வங்கிக் கணக்கு களைத் துவக்கலாம். 

இதன் மூலம் அரசின் சேவைகளைச் செழுமையாக்கி, ஊழலைக் குறைத்து இந்தியப் பொருளா தாரத்தை முன்னெடுத்துச் செல்லலாம்’ என்பது அவரது சிம்பிள் ஐடியா.

2009-ம் ஆண்டு இந்த நூல் வெளியான சில வாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து நிலக் கனிக்கு அழைப்பு வந்தது.

`அரசின் மானியங்களும் நலத்திட்ட உதவிகளும் நேரடியாக மக்களைச் சென்றடை வதற்கு, ஓர் அடையாள எண் உருவாக் கலாம். 

இதைச் செய்ய இருக்கும் Unique Identity Authority of India – அமைப்புக்கு நீங்கள் தலைமையேற்க வேண்டும்’ என்பது பிரதமரின் நேரடி வேண்டுகோள். 

அதை மறுக்காமல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறி ஆணைய த்தின் பொறுப்பை உடனே ஏற்றுக் கொண்டார். ஆதார் பிறந்தது!

நீதியின் முட்டுக்கட்டை!

எதிர்க் கட்சியாக இருந்த போது ஆதார் திட்டத்தைக் கடுமை யாக எதிர்த்த பி.ஜே.பி, ஆட்சிக்கு வந்தபிறகு, காங்கிரஸை விட வேகமாக, அதிகமாக, பரவலாக, 

ஆழமாக, தீவிரமாக இதை அமல்படுத்தி வருகிறது. இந்த விஷய த்தில் நீதிமன்ற ங்களின் தீர்ப்புகளைக் கூட மத்திய அரசு கண்டு கொள்வ தில்லை.

2013-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் ஓர் இடைக் காலத் தீர்ப்பை வழங்கியது.

* ஆதார் எண் இல்லாத காரணத்தால் ஒரு குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை மறுக்கக் கூடாது.

* ஆதார் கட்டாயம் என எந்தெந்த அதிகார மையங் களுக்கு சுற்றறிக்கை அனுப் பினீர்களோ, அவர்களுக் கெல்லாம் தகவல் தெரிவித்து, அந்த அறிவிப்பை மாற்றி அமைக்க வேண்டும்.

* ஆதார் எண் பெறுவது சட்டப்படி கட்டாய மில்லை என்று மத்திய அரசு ஊடகங்கள் வாயிலாக பரந்த அளவில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, இதை யெல்லாம் செய்யக் கூடாது என உத்தர விட்டது உச்ச நீதிமன்றம். 

ஆதார் எண் பெறுவது மக்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமே தவிர, 

அதைக் கட்டாய மாக்கக் கூடாது’ என்றும் அறிவுரை சொன்னது உச்ச நீதிமன்றம். ஆனால், இது எதுவுமே காதில் விழாதது போல் நடிக்கிறது மத்திய அரசு.

தகவல்கள் யாருக்கு?

இந்திய அரசிய லமைப்புச் சட்டப்படி, தேவைப் படுபவர் களுக்கு தன் சேவை களை அளிப்பது அரசின் கடமை. ``குடும்ப வருமானம், பாலினம், வயது, உடல் குறை பாடுகள் போன்ற 

விவரங்களின் அடிப்படையில் தான் சேவைகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, மக்களின் விரல் ரேகை, கரு விழிப்படலம் போன்ற 

பயோ மெட்ரிக் (உயிரியளவு) விவரங் களின் அடிப்படையில் தருவது சட்ட விரோதமானது’’ 

என்று உச்ச நீதிமன்ற த்தில் ஆதார் திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுத் தவர்கள் வாதிடுகி ன்றனர்.

இப்படிப் பட்ட உயிரியளவுத் தகவல் களை படமெடுக்கும் வேலையை தனியார் நிறுவனங் களிடம் அரசு விட்டிருக்கிறது. 

இதன் மூலம், அவற்றைப் பாதுகாக்கும் ட்ரஸ்டி என்கிற கடமை யிலிருந்து அரசு தவறுகிறது. 

உயிரியளவு உட்பட தனி மனிதர் களைப் பற்றிய முக்கியமான தகவல் களை வாங்கு வதும் விற்பதும் இன்றைய உலகில் பெரிய தொழிலாக மாறி வருகிறது. 

நம்மைக் குறித்த தகவல்கள் உலகில் எங்கெல்லாம் செல்கின்றன, யார் யார் கைகளில் அவை இருக்கும் என்ப தெல்லாம் நம் கட்டுப் பாட்டில் இல்லை.


ஆதார் எண் பெற்ற ஏழைமக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங் களிலுள்ள பல ரேஷன் கடைகளில்

விரல்ரேகைப் பதிவு இயந்திரங்கள் (fingerprint reader) பொருள் பெறச் செல்வோரின் கைரேகை களை ஏற்றுக் கொள்ளாத தால் சுமார் 30 சதவிகித மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ரேஷன் பெறத் தகுதியான வர்களுக்குக் கூட ஆதார் இல்லா ததால் பொருள்கள் மறுக்கப் படுகின்றன். சில கிராமங்களில் மின்சாரம், இணையத் தொடர்பு கிடைக் காததால் பொருள்கள் வாங்க முடியவில்லை. 

அரசின் தவறு களுக்கு ஏழைகள் பாதிக்கப் படுவது என்ன நியாயம்? இன்று இந்தியாவில் பெரும் பாலான ஏழைகள் உயிர் வாழ்வதே, இந்த ரேஷன் கடைகளால் தான். 

ஏற்கெனவே ஏபில், பிபில் என்று அவர் களைப் பிரித்து, உணவுப் பொருள் களின் அளவையும் குறைத்து வயிற்றில் அடித்துக் கொண்டிரு க்கும் அரசுக்கு,

இப்போது ஆதார் அட்டை யையும் வசதியான இன்னொரு மறுப்புக் கருவியாக மாற்றி இருக்கி றார்கள்.

ஒரு பேட்டியில் இதைப் பற்றிய கேள்வி எழுந்த போது, ‘`ஆதார் முறையில் 5 சதவிகிதம் தவறு நடக்க வாய்ப் பிருக்கிறது’’ என்று பதற்றமே இல்லாமல் சொல்லி இருக்கிறார் நிலக்கனி. 

ஆனால், வெறும் ஐந்து சதவிகிதத் தவறு என்பது, இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் கிட்டத் தட்ட ஆறு முதல் ஏழு கோடி பேரின் வாழ்க் கையைப் புரட்டிப் போட்டு விடும் என்பது தான் உண்மை!

சமீபத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்ப் பெறப் பட்ட தகவல் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தி யிருக்கிறது. 

85 லட்சத்து க்கும் மேற்பட்ட ஆதார் அடையா ளங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன என்பதே அந்தத் தகவல். தகவல்கள் புதுப்பிக்கப் படாததே இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. 

ஆதார் அமைப்பில் ஏற்படும் தவறுகளை சரி செய்யவும், தகவல் களைப் புதுப்பிக்கவும் தேவையான அளவுக்கு ஆள்களோ, தொழில் நுட்பமோ, பிற வசதிகளோ நம் அரசிடம் இல்லை என்பதே கசப்பான உண்மை!

ராஜஸ்தானில் தபால் அலுவலகம் வாயிலாக பென்ஷன் பெறும் ஆயிரக் கணக்கான முதியோரும் பெண்களும், 

வங்கிக் கணக்கு தொடங்கி ஆதார் நம்பரைப் பெற்று அதனுடன் இணைக்கா ததால் பென்ஷன் கிடைக்காமல் தவிக்கின்றனர். 

ஆதார் அட்டை இல்லாததால் எவ்வளவு பேர் நலத் திட்டங்களி லிருந்து விடுபட்டிரு க்கிறார்கள் என்கிற தகவல்கூட அரசிடம் இல்லை.

அடையாளம் வேண்டாம்!

தலித்துகள், ஆதிவாசிகள் அடையாளம் தொடர்பான ஒரு முக்கிய பிரச்னையை எழுப்பு கிறார், துப்புரவுப் பணியா ளர்களின் உரிமைகளு க்காகப் போராடி வரும் பெஜவாடா வில்சன். 

துப்புரவுப் பணியாளர்கள், செய்யும் தொழிலை அடையாள மாக வைத்து ஏற்கெனவே, ஒதுக்கி வைக்கப் பட்டவர்கள். 

`இந்த அடையா ளத்தை அழிக்கும் தொழில் நுட்பம் தான் உடனடித் தேவை’’ என்கிறார் வில்சன். ‘`துப்புரவுப் பணியாளர் களைப் பற்றி முறையான சர்வே கூட செய்யாத அரசுகள் 

ஏன் எங்களுக்கு என்று ஒரு தொழில் நுட்ப ரீதியாக மாற்ற முடியாத அடையா ளத்தைக் கொடுக்க இவ்வளவு ஆர்வம் காட்டு கின்றன?” என்கிறார் அவர். ஆதாருக்கு எதிரான உச்சநீதி மன்ற வழக்கில் இவரும் ஒரு மனுதாரர்.

தனியாரிடம் தகவல்கள்

நம்மைப் பற்றிய ஆதார் தகவல்கள் ஏன் தனியார் நிறுவனங் களுக்குச் செல்ல வேண்டும் என்கிற அடிப்படை யான கேள்விக்கு இதுவரை உருப்படி யான பதில் இல்லை. 

புதிய கைபேசி இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி விட்டது. 

புதிதாக ஜியோ சிம் கார்டு வாங்கும் போது உங்கள் கைரேகையை உறுதி செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயந்திரமே பயன் படுத்தப் படுகிறது. 

இதனால், புதிய இணைப்புப் பெறுபவரின் அடிப்படைத் தகவல்கள் ரிலையன்ஸ் நிறுவன த்தின் கைக்குச் செல்கின்றன. 

ஒரு செல்போன் இணைப்புப் பெற தேவையான தகவல் களை மட்டும் அளிக்க வேண்டிய இடத்தில் நாம் ஏன் நம்முடைய ஒட்டுமொத்த விவரங் களையும் கொடுக்க வேண்டும்?

ஏன் இந்த அச்சம்?

ஆதார் சட்டம் குறித்த விவாதம் நாடாளு மன்ற மேலவை யில் நடந்து கொண்டிருந்த போதே ‘ட்ரஸ்ட் ஐடி’ என்கிற நிறுவனம் ஒரு விளம் பரத்தை வெளி யிட்டது.

`நீங்கள் வீட்டு வேலைக்கு அமர்த்த நினைக்கும் வேலைக் காரர், கார் ஓட்டுநர், டியூஷன் ஆசிரியர், பிளம்பர், எலெக்ட்ரிஷன் என வீட்டு வேலை செய்பவர்கள் பற்றிய விவரங் களை ஆதார் எண் 

அடிப்படை யில் வடிவமைக்கப் பட்ட மொபைல் ஆப் மூலம் உடனடியாக அறிந்து கொள்ளலாம்’ என்பதே அந்த விளம்பரம். ‘ஆதார் மையத்தின் தகவல் களஞ்சியம் ரகசியமானது, 

யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது என்கிற சட்டம் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பே இப்படி ஒரு விளம்பரம் வந்தது எப்படி’ என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 

இப்படி ‘ஆதார் தகவல் களை அடிப்படை யாகக் கொண்டு ஒரு தனிநபரின் முழுமையான பின்னணியை உங்களு க்குத் தருகிறோம்’ 

என்று மற்றொரு நிறுவனமும் விளம்பரம் செய்துள்ளது. இது தான் ஆதாரின் எதிர்காலம். இதுதான் நம்மை அச்சமூட்டு கிறது.

தகவல்களை எங்கே வைத்திருக்கிறோம்?

அடுத்த முக்கிய மான பிரச்னை, 120 கோடி இந்தியர்களைப் பற்றிய அடிப்படைத் தகவல் களை ஆதார் ஆணைய த்தின் ஒரே களஞ்சிய த்தில் வைப்பது. 

ஆதார் தகவல் களஞ்சியம் தான் உலகத் திலேயே மிகப் பெரியதாக இருக்க முடியும். அமெரிக்கா வின் உள்துறை அமைச்சகம் வைத்தி ருக்கும் களஞ்சியத்தை விட இது 10 மடங்கு பெரியதாக இருக்கும். 

ஒரு மோசமான அரசுக்கு, குடிமக்களை வேவு பார்ப் பதற்கும், எதிர்ப் பாளர்களை முடக்கு வதற்கும் இதைவிட சிறந்த ஆயுதம் இருக்க முடியாது. 

யூதர்களின் வீடுகளை இலக்கமிட்டுத் தாக்கிய ஹிட்லர் போன்றவர் களுக்கு நவீன தொழில் நுட்பம் வழங்கிய ஆயுதமாகக் கூட இதை மாற்றும் சாத்தியம் உள்ளது. 

அது தவிர, அந்நிய சக்திகள், ராணுவத் தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகள் இந்தியாவை ஒரே சொடுக்கில் முடக்கு வதற்கும் வாய்ப்பி ருப்பதாக விவர மறிந்வர்கள் அஞ்சுகின்றனர்.

வேவு பார்க்கவா அரசு?

30 கோடி மக்களைக் கொண்ட அமெரிக்கா வும், ஆறரைக் கோடி மக்களைக் கொண்ட பிரிட்டனும், 

இரண்டரைக் கோடி மக்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவும் தேசிய அளவி லான ஒற்றை எண் அடை யாளத்தை உருவாக்கும் திட்டத்தைக் கை விட்டு விட்டன.

அதிக செலவாகும், தனிநபர் உரிமைக்கு ஊறு விளை விக்கும்’ என்கிற இரண்டு காரணங் களைத் தான் இந்த நாடுகள் கூறி யுள்ளன. 

இப்படிப் பட்ட திட்டத் தால், தனிமனித வாழ்க்கை யில் அரசு ஊடுருவி அச்சுறுத்தும் நிலை ஏற்படும் '’ என்பது பிரிட்டன் அரசாங்க த்தின் கருத்து.

தொழில் நுட்பம் என்பது மக்களுக்கான கொள்கையின் வேலைக் காரனாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை கண் காணிக்கிற முதலாளி யாகக் கூடாது. 

ஆதார் அதைத் தான் செய்கிறது. அதனால்தான், அது ஆபத்தான தாகப் பார்க்கப் படுகிறது!
Tags: