சிறுநீர் கழிக்கக்கூட நேரம் கொடுக்காத பள்ளிகள் !

நம் எல்லோருக்குமே வாரிசு நலன் முக்கிய மானதாக இருக்கிறது. எல்லோருடைய உயர்ந்தபட்ச ஆசை, கனவு, நோக்கம், லட்சியம் எல்லாவற்றிலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் உட்கார்ந் திருக்கிறது. 
சிறுநீர் கழிக்கக்கூட நேரம் கொடுக்காத பள்ளிகள்
இதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராகவும் இருக்கிறோம். குழந்தை களின் எதிர்காலத்து க்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிந்திக் கிறோம். 

எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப் படுகிறோம். ஆனால், அடிப்படை யான அம்சங்களில் கோட்டை விடுகிறோம்.
சென்னை யிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவ மனைக்குச் சமீபத்தில் சென்றிரு ந்தேன். அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்ற போது, 

நான் பார்த்த காட்சி அதிர வைத்தது. அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்த வர்களில் கணிசமா னவர்கள் குழந்தைகள். 

பள்ளி செல்லும் வயதுடைய வர்கள். பின்னர், மருத்து வருடன் பேசிக்கொண் டிருந்தேன்.

நிலை குலைய வைத்த சூழல்

நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலி ழப்புக் கான காரணங் களைப் பட்டிய லிட்டவர், குழந்தைகள் பாதிக்கப்படு வதற்கான கார ணங்களில் 

ஒன்றாக நம்முடைய பள்ளி களில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப் பிட்டார். “குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளை யெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், 
அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியே றுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்கி றார்கள்?” என்று கேட்ட போது கூட 

இந்தப் பிரச்சி னையின் முழு உக்கிரத்தை நான் உணர வில்லை. பின் இதுபற்றி சிறுபிள் ளைகள் பலரிடமும் பேசினேன். 

பள்ளிச் சூழலை அவர்கள் சொன்ன விதம், ஒரு அரசுப் பள்ளி ஆசிரிய ரான என்னையே நிலை குலையச் செய்தது. 

பல பிள்ளைகள் பள்ளிக் கூடத்தில் சிறுநீர், மலத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ளப் பழகியிரு க்கிறார்கள். ஆசிரியர் களுக்குப் பயந்து, வெட்கப்பட்டு, நடுங்கி!

ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நல்லது. ஒரு வாரம்கூட உண்ணா விரதம் இருக்கலாம். உடல் அதை ஏற்றுக் கொள்கிறது. 

ஆனால், ஒரு மணி நேரம் சிறுநீர் / மலம் கழிப்பதைத் தள்ளிப் போடுவது கூட நல்ல தல்ல. 

அன்றாடம் இதை மணிக் கணக்கில் செய்யும் போது உடல் சித்ரவதைக் குள்ளாகிறது. உடல் உறுப்புகள் பாதிப்புக் குள்ளா கின்றன.

குழந்தைகள் எதிர் கொள்ளும் பிரச்சினை
எனக்குத் தெரிந்து, காலையில் ஏழு மணிக்கெ ல்லாம் வீட்டி லிருந்து கிளம்பும் மழலைகள் இருக்கி றார்கள். 

அவர்கள் கே.ஜி. வகுப்புகள் படிக்கிற பள்ளிக் கூடங்களுக்கு ஐந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங் களில் செல்ல வேண்டும். 

அந்தப் பள்ளி வாகனங்கள், வழியில் உள்ள ஏனைய கிராமங் களுக்கும் சென்று குழந்தைக ளைக் கூட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்லும். 

பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பதற்ற த்துடன் வீட்டிலி ருந்து ஓடி வந்து வாகனங் களில் ஏறும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுட னேயே சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க என்று கழிப்ப றைக்கு ஓட முடியுமா? 

ஆசிரியர்கள் அனுமதி ப்பார்களா? இது அன்றாடம் குழந்தை கள் எதிர்கொள் ளும் பிரச்சினை.

ஆனால், அன்றாடம் இப்படிக் கழிப்பறை க்கு ஒரு குழந்தை அனுமதி கேட்டால், அதை நொறுக் கியே விடுவார்கள் ஆசிரியர்கள். 

வளர்ந்த பிள்ளைகளே கூட கழிப்பறை க்குச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தயங்கும் சூழலே பள்ளியில் இருக்கிறது. 
அப்படிக் கேட்பதைக் கேலிக் குரியதாக, ஏளனத்துக் குரியதாகவே நாம் கட்ட மைத்து வைத்திரு க்கிறோம். 

உயர் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுக்கே இந்த நிலை என்றால், கே.ஜி. படிக்கிற சிறு குழந்தை களின் நிலை என்ன?

பயமின்றிச் சொல்ல முடியுமா?
ஆசிரியர் என்ற சொல்லும், ஆசிரியர் என்ற பிம்பமும் சாதாரண மானதா அல்லது எளிதில் அணுகக் கூடிய சினேகம் மிக்கதா? ஒரு நாளில் வகுப்பறை யில் ஆசிரியர்கள் அதிகமாகப்

பயன்படுத்தக் கூடிய வார்த்தை ‘பேசாத!’ என்பது தான். அதற்கடுத்த சொல் ‘வாய மூடு!’ என்பது. ‘எனக்குச் சிறுநீர், மலம் வருகிறது’ என்று எத்தனை பிள்ளை களால் பயமின்றிச் சொல்ல முடியும்? 

தவறி வகுப்பறை யிலேயே சிறுநீர் கழித்து விடுகிற குழந்தைகள் எப்படியான கேலிக்கும் அவமதிப் புக்கும் ஆளாகி றார்கள் என்பதை ஏனைய குழந்தைகள் பார்த்துக் கொண்டே தானே வளருகி றார்கள்!

யோசித்துப் பார்த்தால், நம்முடைய ஒட்டு மொத்தக் கல்வி அமைப் புக்குமே இது குறித்து இன்னும் பிரக்ஞை வர வில்லை என்ற முடிவை நோக்கித் தான் நகர வேண்டியி ருக்கிறது. 

நம்மூரில் எத்தனை பள்ளிகளில் போது மான அளவுக்குக் கழிப்பறை கள் இருக்கி ன்றன? 

இரண்டா யிரம் பேர் படிக்கிற பள்ளிக் கூடத்தில் இடை வேளையின் போது ஐந்து, பத்து நிமிடங்களு க்குள் அத்தனை பிள்ளை களும் கழிப்பறை யைப் பயன் படுத்தி விட முடியுமா?
அந்த அளவுக்கு வசதி கொண்ட பள்ளி என்று தமிழ்நாட்டில் எத்தனை பள்ளி களைக் காட்ட முடியும்? கூட்டத் தில், வரிசையில் நின்று சிறுநீர் கழிக்க, மலம் கழிக்கக் கூச்சப் படுகிற குழந்தைகள் உண்டு. 

கூட்டமாக இருக்கிறது, வரிசையில் நிற்க வேண்டும் என்பதற் காகவே சிறுநீர் கழிக்காமல் திரும்பி வந்து விடுகிற பிள்ளைகள் உண்டு. 

சிறுநீர் கழிப்ப தற்காக, மலம் கழிப்பதற் காகக் காத்திருந்த நேரத்தில் மணி அடித்து விட்டது, நேரமாகி விட்டது ‘மிஸ் திட்டு வார்கள்’ என்று கழிவை வெளியேற் றாமல், 

அடக்கிக் கொண்டு அப்படியே ஓடி வந்து விடுகிற பிள்ளைக ளும் உண்டு. 

குழந்தைகள் பள்ளி செல்லும் காலத்தில் மதிப்பெண்க ளுக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தை நாம் வேறு எதற்கும் கொடுப்ப தில்லை.

அரை லிட்டர் போதாது

பள்ளிக்குச் செல்கிற குழந்தை களில் அநேகம் பேர் அரை லிட்டர் தண்ணீரு க்கு மேல் எடுத்துச் செல்வ தில்லை. 

ஒரு பகல் முழுவதும் ஒரு குழந்தைக்கு அரை லிட்டர் தண்ணீர் போதாது. ஆனாலும், ஏன் கொஞ்சம் தண்ணீரையே எடுத்துச் செல்கிறார்கள்? காரணம் இது தான். 
காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டுச் செல்கிற பல குழந்தைகள், பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவுட னேயே கழிப்பறைக்கு ஓடுவதைப் பார்க்கலாம். 

இது ஒரு சமூகம் நிகழ்த்தும் வன் முறையின் குறியீடுகளில் ஒன்று. ஒரு புறம், கழிவுகளை உரிய நேரத்தில் வெளியேற்றாததால், 

இன்னொரு புறம் தேவையான நேரத்தில் தண்ணீர் குடிக்கா ததால் உடல் பாதிப்புக் குள்ளாகிறது. 

இதனால், பல நோய்களுக்குக் குழந்தைகள் ஆளாகின் றனர். இப்படித் தான் சிறுநீரகப் பாதிப்புக்கும் உள்ளாகி றார்கள் என்பதை மருத்துவர் என்னிடம் விளக் கினார். 

“மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். 

சிறுநீரை அடக்கி அடக்கி வைப்பதால், சிறுநீர் வெளியேற வேண்டிய பாதையில் கழிவுகள் அடைப்பு களாக மாறி, நெஃப்ரான் களைச் செயலிழக்க வைத்து, சிறுநீரக த்தைச் சுருங்க வைக்கின்றன.
சிறுநீரகம் செயல்படா ததால் செயற்கை முறையில் டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டிய நிலை. சிறுநீரகம் செயலிழந் தால், மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை, 

டயாலிசிஸ் சிகிச்சை இரண்டு தான் தற்போதி ருக்கும் வழிகள். இவை இரண்டுமே முழு ஆயுள் உத்தரவாதம் இல்லாதவை.

எதற்காக ஓடுகிறோம் என்பதையே உணராமல் ஓடிக்கொண்டி ருக்கும் தலைமுறை நம்முடையது” என்றார் மருத்துவர்.
Tags:
Privacy and cookie settings