குண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா?

சமீப காலமாக அனைவரிடமும் மனதில் தோன்றும் கேள்வி இது தான். நான் பருமனாக இருப்பதால் தான் எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லையா என்று. 

இது சாத்தியமான கேள்வி தான் ஆனால் இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ளும் முன்பு குழந்தை கருவுறுதலை தெரிந்து கொள்ளுங்கள்.

மாதவிலக்கு முடிந்த நான்கு நாட்களில் கருமுட்டை வந்து விடும். இந்த கருமுட்டை வளர ஆரம்பிக்கும் போது, ஆண் விந்தணுக்குள் கருமுட்டையை தாக்கும் போது. கருமுட்டை கருத்தரிக்கின்றது. 

இந்த முட்டை அப்படியே கருப்பையில் தங்கினால் கருப்பை, குழந்தையை உருவாக்கிவிடும். இப்படித்தான் குழந்தை தரிக்கின்றது.

சினைமுட்டை உருவாகி தங்குவதில் அல்லது ஆணால் வலுவான விந்தணுக்களை உருவாக்குவதில் ஏதாவது பிரச்சினை ஆனால் கருத்தரிக்கவே தரிக்காது.

இதற்கு நிறைய காரணங்கள் உண்டு நாம் உடற்பருமன் பற்றி மட்டுமே இங்கு பேசுகின்றோம். 

இந்த உடற்பருமன் பெண்களுக்கு வந்தால் வயிற்றில் நிறைய கொழுப்புகள் சேர்ந்து தசைவளர்ந்தால், கருப்பையை நெருக்க ஆரம்பிக்கும். அடிவயிற்றில் உள்ள கருப்பையை அழுத்தி அழுத்தி கருவை தங்கவிடாமல் செய்து விடும்.

இரத்தப் போக்கையும் அதிகப்படுத்தி விடும். ஒரு வகையில் குண்டாக இருந்தால் மாதவிலக்கு சமயங்களில் பெண்கள் கவலைப்பட தேவையில்லை,

வலி மற்றும் வேதனைகள் குறைவாக இருக்கும். ஆனால் கர்ப்ப காலத்திற்கு ஏற்றதல்ல.

எப்படியாவது தப்பித்தவறி கரு வளர்ந்து விட்டாலும், கரு வளர்ச்சியின் போது உடற்பருமன் குழந்தை வளர போதுமான இடத்தை தருவதில்லை. இதனால் குழந்தை நெருக்கப்படுகின்றது.

ஆண்கள் குண்டாக இருப்பதால் அவர்களால் அதிக சக்திவாய்ந்த விந்தணுக்களை உருவாக்கம் செய்து தர முடியாது.

இந்த விந்தணுக்கள் வலுவிழந்ததாக இருக்கும். இந்த குண்டானவர்களின் ஹார்மோன்கள் பெண்களின் ஹார்மோன்களை தவிர்க்கும். இதனாலும் கருவுறாமல் இருக்கலாம்.

ஆகமொத்தம் அதிக பருமன் கருவுறுதலை தாமதமாக்கும், அல்லது தடுக்கும். இதனால் உடலை இளைக்கச்செய்து விடுங்கள்.
Tags: