சர்க்க‍ரை வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்பு வராமல் இருக்க !

சுறுசுறுப்புக்கு பெயர் எடுத்த‍ எறும்புகள் பல நேரங்களில் நமது வயிற் றெறிச்ச‍லையும் வாங்கி கட்டிக் கொள்கிறது. அவற்றில் மிகமுக்கிய குறிப்பிட வேண்டிய இடம் எது வென்றால், சர்க்க‍ரை டப்பா தான்.
என்ன‍தான் சர்க்கரை டப்பாவில் போட்டு அழுத்த‍மான மூடியைக் கொண்டு மூடி வைத்தாலும், எறும்புகள் அதில் மொய்த்து விடுகின்றன.

இதனால் காபி,டீ போடும் போது அதில் சர்க்க‍ரையை கலக்கும் போது இந்த எறும்புகள் காபி, டீ-யில் கலந்து விடுகிறது. 

இதனால் கணவர் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடம் தேவையற்ற‍ பேச்சுக்கள் வாங்க வேண்டியுள்ள‍து.

இனி இந்த கவலை உங்களுக்கு இல்லை. ஆம்! சர்க்கரையை போட்டு வைத்திருக்கும் டப்பாக்களில் 5, 6 கிராம்புகளை போட்டு வைத்து பாருங்கள். கிராம்பின் வாடைக்கு எறும்புகள் வரவே வராது.
நீங்களும் மற்ற‍வர்களுக்கு சர்க்க‍ரை கலந்த காபி, டீ கொடுத்தீங்கன்னா அவர்கள் உங்களை திட்ட‍வே மாட்டாங்க‌. அட‌ எறும்புகள் இருந்தால் தானே திட்டுவார்கள். அதா எறும்புகளே இல்லையே அப்புறம் எப்ப‍டி?
Tags:
Privacy and cookie settings