முதல் நாள் உணவை மறு நாள் சாப்பிடக் கூடாது ஏன்?

இன்றைய தலை முறையினர் ஆரோக்கியத் தின் மீது அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். இதற்கு அதிகரித்து வரும் நோய்கள் தான் முக்கிய காரணம். இதனால் ஏராளமா னோர் தாங்களே சமைத்து சாப்பிட ஆரம்பித்து விட்டனர். 
முதல் நாள் உணவு


ஆனால் இன்று பெரும்பா லான குடும்பத்தினர் செய்யும் ஓர் தவறு என்றால் அது முதல் நாள் சமைத்து எஞ்சிய உணவை மறு நாள் சூடேற்றி உண்பது தான். 

இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படு வதற்கு பதிலாக, ஏராளமான பிரச்சனைக ளைத் தான் சந்திக்க வேண்டி யிருக்கும்.

இங்கு ஏன் முதல் நாள் சமைத்து எஞ்சிய உணவை மறு நாள் சாப்பிடக் கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப் பட்டுள்ளன.

உணவை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பதப் படுத்தும் போது, சமைத்த உணவில் பாக்டீரியா க்களின் வளர்ச்சி தொடர்ந்து இருப்பதோடு, எஞ்சிய உணவுகள் நொதிக்க ஆரம்பித்து,

அதில் உள்ள அசிட்டிக் அளவு இன்னும் அதிகரிக்கும். இப்படிப் பட்ட உணவை உட்கொண் டால், அசிடிட்டி பிரச்சனை யை சந்திக்க வேண்டி வரும். 

சமைத்து எஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, உணவில் உள்ள கிருமிகள் ஃப்ரிட்ஜில் உள்ள இதரை உணவுப் பொருட்களை தாக்கி, குடும்பத்தி னரை எளிதில் நோய்வாய்ப்பட வைக்கும். பொதுவாக உணவை சமைத்த பின் உடனேயே ஃப்ரிட்ஜில் வைப்ப தில்லை.

பல மணிநேரம் கழித்து தான் உள்ளே வைப்போம். இதனால் சமைத்த உணவில் பாக்டீரி யாக்கள் அதிகமாக வளர்ச்சி யடைந்து, அதன் விளைவாக ஃபுட் பாய்சனை உண்டாக்கும்.

அதிலும் உணவை சமைத்த 2 மணி நேரத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கா விட்டால், பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடையுமாம்.


சமைக்கும் போது உயர் வெப்ப நிலையில் வைத்து சமைக்கும் போது உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள் அழிந்து விடும்.

அதிலும் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் மீண்டும் சூடேற்றும் போது, உணவில் உள்ள சத்துக்கள் முழுமை யாக நீங்கி, அதனை சாப்பிடுவதே வீணாகி விடும். 

எனவே முடிந்த வரை சமைத்த உணவை அப்போதே காலி செய்ய முயலுங்கள். உணவை சமைத்து அதனை உட்கொண்ட பின் தான் ஃப்ரிட்ஜில் வைப்போம்.

குறிப்பாக வெப்பமாக இருக்கும் போது அதனை ஃப்ரிட்ஜில் வைக்க மாட்டோம். நன்கு குளிர்ந்த பின் தான் வைப்போம். 

இப்படி செய்வதால் பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணு யிரிகள் உணவை முழுமையாக பாழாக்கி விடும். பின் என்ன பல்வேறு வயிற்று பிரச்சனை களை சந்திக்க வேண்டியது தான்.
Tags: