இட்லி, தோசை மாவு கடையில் வாங்குவது நல்லதா? கெட்டதா? விழிப்புணர்வு !

என்ன தலைப்பை பார்த்து பயந்து விட்டீர்களா, ஆம் பரோட்டா மைதாவினால் செய்த பன்டம் அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என பெரிதளவில் ஷேர் செய்யபட்ட ஒரு ஆர்டிக்கள்.
இட்லி, தோசை மாவு கடையில் வாங்குவது நல்லதா? கெட்டதா? விழிப்புணர்வு !
பரோட்டா நமது பாரம்பரய உண்வு அல்ல மற்றும் அதை இளைஞர்கள் தான் உண்ணுவார்கள். ஆனால் இப்பொழுது ஒரு வயது முதல் 80 வயது வரை உண்பது இட்லி எனப்படும் ஒரு தமிழனின் உணவு.

இது போக பேஷன்ட்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் மற்றும்  எந்த ஒரு பேஷன்டுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு இட்லி எனப்படும் வேக வைத்த ரைஸ் பேன் கேக். 

இந்த விஷயங்கள் 100% சதவிகிதம் உண்மை. இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை.
இதயே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்ப என்ன தான் பிரச்சினை என்கிறீர்களா, அதற்கும் தேவையான மாவு பற்றி தான் இந்த ஆய்வு கட்டுரை.

ஆம், ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி, கிரைன்டர்ஸ் என வந்தது. அதுவும் வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி போனது.
இட்லி, தோசை மாவு கடையில் வாங்குவது நல்லதா? கெட்டதா? விழிப்புணர்வு !
சமீபமாக இட்லி, தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டி தொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. 

மக்களும் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர். முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமா தான். 

இப்பொழுது தெருமுனை கடையில இட்லி மாவு வாங்கி வந்து மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது முடியும் வரை போகும். 

இது பேச்சலர்ஸ் கூட இப்ப செய்கின்றனர். இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸ்ன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை.

இதன் பயங்கரத்தை இப்பொழுது கேளுங்கள் பரப்புங்கள்.
இட்லி, தோசை மாவு கடையில் வாங்குவது நல்லதா? கெட்டதா? விழிப்புணர்வு !
நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈரபத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

இந்த மாவு சில மட்டமான அரிசியும் உளுந்தும் முக்கியமாக மாவுக்கு முன் காலத்தில் புண்ணுக்கு பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போடுவதால் மாவு பூளிப்பு வாசனை கண்டிப்பாக வராது.

அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர்.

வெண்ணெயில் உள்ள சத்துக்கள்... எந்த உணவுடன் சாப்பிடுவது நல்லது?

இதே மாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூனாவது நாள் முகர்ந்து பாருங்கள் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும்.

முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க முடியும்.

ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு சிறு கருங்கள் துகள்களால் நிறைய பேருக்கு சிறு நீரகத்தில் கல் உண்டாகிறது.
இட்லி, தோசை மாவு கடையில் வாங்குவது நல்லதா? கெட்டதா? விழிப்புணர்வு !
ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தல் வெறும் 6 மாதம் தான். கொத்தி போட்டாலும் அடுத்த மூனு மாதம் தான் மேக்ஸிமம்.

உங்களுக்கு நன்கு தெரியும் சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி அலம்ப வேன்டும் மற்றும் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேனுவதில்லை.

இதனால் உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து வாந்தி பேதி ஏற்பட்டு உடம்பு முடியாமல் போகிறது.

கிரையன்டரை பயன்படுத்த தயங்க இரண்டு விஷயங்கள் :

1 . கிரையன்டரை சுத்தம் செய்ய கஷ்டம்

2 . ஒவ்வொரு முறையும் கல்லை துக்கி போட வேண்டும், பெரிய குடும்ப  மென்றால் இது சாத்தியம். 
சிறு குடும்பமென்றால் கடையில் மாவு வாங்குகிறது. ஆனால் இவர்கள் கிரையன்டரை ஒவ்வொரு மாவு முடிந்தும் கழுவுவதில்லை. அதனால் அந்த கிரயன்டரின் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது.

இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும்.

ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்ததன்மை போய் விடும்.

என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றும் காரணம் உப்பு போட வேண்டிய வேலை இல்லை.
இட்லி, தோசை மாவு கடையில் வாங்குவது நல்லதா? கெட்டதா? விழிப்புணர்வு !
அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள்.

வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்ணம், வாய் நாற்றம், அல்சருக்கு இது ஒரு நல்ல பொருள். ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

கிரையன்டரில் மாவு தள்ளி விடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேன்டும்.

ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள். அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில் தான் கலக்கும்.
கிரைன்டர் ஒட குழவியை இணைக்கும் செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள் ஒன்று சத்தம் வராமல் இருபதற்கும் மற்றும் 

மாவு கை தள்ளி விடாமல் அரையும் டெக்னிக்குக்காக. அந்த பெல்ட் தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் நமது மாவில் தான் கலக்கும்.
இட்லி, தோசை மாவு கடையில் வாங்குவது நல்லதா? கெட்டதா? விழிப்புணர்வு !
இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட்படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும்.

அப்பொழுது தான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும். இதனால் இந்த மாவில் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிறது.
இந்த ஈகோலி –24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இந்த இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள்.
Tags: