மகன் உடலுறவு கொள்வதை காமரா பொருத்தி பார்த்த தந்தை !

பிரித்தானியாவில் மகன் தனது காதலியுடன் உடலுறவு கொள்வதை ரகசியமாய் பார்த்த தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மகன் உடலுறவு கொள்வதை காமரா பொருத்தி பார்த்த தந்தை !
பிரித்தானியாவில் உள்ள பாரிங்டன்(Faringdon) நகரில் தந்தை(53) ஒருவர் தன் மகன்(21) மற்றும் மகளுடன்(12) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகனும், மகனின் காதலியும் அடிக்கடி வீட்டில் தனியாக சந்தித்துள்ளனர்.

அப்போது தனது மகன் அந்த இளம்பெண்ணுடன் உறவு கொள்வதை ஆசை தீர கண்டுகளிக்க வேண்டும் என்ற நினைத்த தந்தை, தனது மகனின் அறையில் அவனுக்கு தெரியாமல் ஒரு ரகசிய கமெராவை பொருத்தினார்.

ஆனால் தந்தையின் கொடூர எண்ணத்தை அறியாத மகன், தனது காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

தான் பொருத்திய ரகசிய கமெராவிலிருந்து தொலைக்காட்சிக்கு இணைப்பை ஏற்படுத்திருந்த அந்த காம கொடூர தந்தை, அந்த காட்சிகளை ஆனந்தமாக கண்டுகளித்துள்ளார்.

சில நேரங்களில், அந்த வீடியோவை சமையல் அறையிலிருந்த தொலைக்காட்சியிலும் ஓட விட்டு, ரசித்துக் கொண்டே சமையல் பணிகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவரது மகள் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் தவறதலாக ரிமோட்டை இயக்க, அதில் தனது அண்ணனின் உல்லாச வீடியோவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதன்பின் தந்தையின் மோசமான செயல்களை உடனடியாக அவளது தாயார் மற்றும் சகோதரனிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தந்தை தனக்கும் பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்து வந்தார், என மகள் கூறியதை கேட்ட தாயார் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் அளித்ததும், அவர்கள் அறையில் பொருத்தியிருந்த கமெராவை நீக்கியதுடன், தந்தையையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, குடும்பத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் வகையில் 

பெற்ற மகனின் உடலுறவு காட்சிகளை ரகசியமாக பார்த்த குற்றத்திற்காக தந்தைக்கு 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings