பிரபல இந்து மத சாமியாரும் கைலாசா நாட்டைத் தோற்றுவித்ததாகக் கூறிக் கொள்பவருமான நித்தியானந்தா மரணம் அடைந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் இந்த தகவலை ஆன்மிக சொற்பொழிவு வீடியோவில் கூறியதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தொடர்ந்து கர்நாடக மாநிலம், பிடதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை அமைத்தார். இதற்கிடையே பிரபல நடிகை ஒருவருடன் அவர் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
பெண் சீடர்களைத் தவறாக வழிநடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பெங்களூருவில் அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர் தலைமறைவு ஆனார். எனினும் தனது சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் சமூக வலைதளங்கள் மூலம் அப்டேட் அளித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. எனினும் அதில் உண்மையில்லை என்று நித்தியானந்தாவே வீடியோவில் தோன்றிப் பேசினார்.
கோதுமைப்புல் பொடில இவ்வளவு நன்மை இருக்கா?
இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டதாக நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், ஆன்மிக சொற்பொழிவு வீடியோவில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், முன்பு போன்றே நித்தியானந்தா வெளியுலகுக்குத் தோன்றி இத்தகவல் உண்மையில்லை என அறிவிக்க வேண்டும் என்று அவரின் சீடர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



Thanks for Your Comments