கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காமுகன்... டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் !

0

பாலியல் தொல்லை குறித்து சிறுமி போலீசில் புகார் கொடுத்ததுமே, அடுத்த 8 மணி நேரத்துக்குள் குற்றவாளியை ரவுண்டுகட்டி பிடித்து விட்டார்கள் நம்முடைய சென்னை போலீசார்... அப்படி என்ன நடந்தது தலைநகரில்?

கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காமுகன்... டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் !
சென்னையை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 42 வயதிருக்கும். சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை தந்திருந்தார். அந்த புகாரில் உள்ளதாவது:

என்னுடைய 13 வயது மகள் வீட்டின் அருகே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, டியூஷன் முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், திடீரென என்னுடைய மகளை வழிமறித்து, தவறான நோக்கத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தும், உடலில் பல இடங்களில் அறுவறுக்கத்தக்க வகையில் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது ஏன்? எதற்கு?

இதில் வலி தாங்க முடியாமல் எனது மகள் வீட்டிற்கு வந்து என்னிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார். எனவே எனது மகளிடம் தவறான நோக்கத்தில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில், போலீசாரும் அதிரடியில் இறங்கினார்கள்.. சம்பவம் நடந்த தெருவிற்கு சென்றார்கள். அங்கே பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தார்கள்.

அப்போது இளைஞர் ஒருவர் பைக்கில் வருவதும், டியூஷன் சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிறுமியிடம் அசிங்கமாக நடந்து கொண்டதும் அந்த கேமராவில் பதிவாகி யிருந்தது.

ஆனால், நைட் நேரம் என்பதால், அந்த இளைஞரின் பைக் நம்பர் சரியாக தெரியவில்லை. இருந்தாலும், வேறு வேறு பகுதியில் பொருத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட கேமராக்களில், அந்த பைக் நம்பர் பதிவாகி யிருக்கிறதா? என்று போலீசார் ஆராய்ந்தனர். 

இறுதியில் பைக் நம்பரை கண்டுபிடித்து விட்டனர். சம்பந்தப்பட்ட இளைஞரையும் கண்டுபிடித்து விட்டனர். இளைஞர் பெயர் யோகேஸ்வரன். டிபி சத்திரம் பூஜ்ஜி தெருவை சேர்ந்தவர். 24 வயதாகிறது. 

இதையடுத்து, போலீசார், உடனடியாக இளைஞர் வீட்டுக்கு கிளம்பி சென்றார்கள். வீட்டுக்கு வெளியே அந்த பைக் நின்று கொண்டிருந்தது. இறுதியில், இளைஞரை அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். 

அப்போது, யோகேஸ்வரன் தந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இந்த யோகேஸ்வரனுக்கு 2 வருடங்களுக்கு முன்பு, கல்யாணம் ஆகிவிட்டதாம். 

நசரத்பேட்டையில் 100 நாட்கள் என்ற தொடர் நடத்தும் பிரபல டிவி நிகழ்ச்சியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். ஆனால் இவரது நடவடிக்கை சரியில்லாததால், அந்த வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.. 
உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வால்நட் !

அதற்கு பிறகு வேற வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால், பிரபல பைக் டாக்சி நிறுவனத்தில், கடந்த 3 மாதங்களாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆன்லைன் பதிவு மூலம் பைக் டாக்சியை ஓட்டி வருகிறார்.

பெரும்பாலும் நைட் நேரத்தில் தான், பைக் டாக்சியை ஓட்டி வந்துள்ளார். அந்த நேரத்தில், நிறைய இளம்பெண்கள், பணி முடித்து விட்டு, பைக் டாக்சியை புக் செய்து, இவருடன் வந்துள்ளார்கள்.

அந்த பெண்கள் பைக்கில் ஏறினாலே, தேவையில்லாத இடங்களில் பிரேக் போடுவாராம். பைக்கில் உட்கார்ந்து வரும் பெண்ணை, தன்னுடன் மோதும் படியும் செய்து கொண்டே இருப்பாராம்.

பெண்கள் இதனால் அதிர்ச்சி யடைந்தாலும், சிலர் இதை பற்றி பேசாமலேயே அமைதி காத்துள்ளனர். சிலர் யோகேஸ்வரனை கண்டித்திருக்கிறார்கள்.

எதிர்ப்பு காட்டுபவர்களிடம் மட்டும் யோகேஸ்வரன் ஸாரி சொல்வாராம். சில பெண்கள் இதை கண்டுக்க வில்லை யென்றால், உடனே அவர்களது நம்பருக்கு, நைட் நேரத்தில் மெசேஜ் அனுப்பி நட்பாகி, இறுதியில் நெருக்கமாகி விடுவாராம். 

இது தான், யோகேஸ்வரனுக்கு, தைரியத்தை தந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும், போலீசில் புகார் தராமல் இருந்ததால், கூடுதல் தைரியத்தை தந்திருக்கிறது.

எனவே, நள்ளிரவு நேரத்தில் தனியாக சாலையில் செல்லும் இளம்பெண்கள் பின்னாடியே சென்று, வழிமறித்து, கட்டிபிடித்து முத்தம் கொடுத்து விடுவாராம். 

உடலில் பல இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வாராம். கத்தி கூச்சலிட முயன்றால், இதெல்லாம் வெளியே சொன்னால், உங்களுக்கு தான் அசிங்கம் என்று மிரட்டி விட்டு தப்பி விடுவாராம்.

கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம் !

இப்படி இந்த 3 மாதங்களில் மட்டும், மிட்நைட் நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்..

இதில் சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை.. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம் தான் இவருக்கு ஆப்பு வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி வலி தாங்க முடியாமல், பெற்றோரிடம் சொல்லவும் தான், விஷயம் போலீஸ் வரை சென்றுள்ளது..

3 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சேட்டையை நடத்தியது உறுதியானதை யடுத்து, யோகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. 

வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகளிர் போலீசாரும் இது குறித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். 22 வயதிலேயே கல்யாணம் முடித்திருக்கும் இந்த யோகேஸ்வரனின் மனைவியை நினைத்தால் தான் பரிதாபமாக உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings