டிரைவரை அடித்துக் கொன்ற திருநங்கை... உல்லாசமாக இருக்க !

0

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (34). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். 

டிரைவரை அடித்துக் கொன்ற திருநங்கை... உல்லாசமாக இருக்க !
அயோத்தியாப் பட்டணம் ராம் நகரைச் சேர்ந்தவர் திருநங்கை நவ்யா (36). இவர் கடந்த 10 ஆண்டுகளாக, அய்யா கவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.

இவருக்கும், சதீஸ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சதீஸ்குமார் அடிக்கடி நவ்யாவின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

செயற்கை முறை கருக்கட்டல் எப்படி செய்யப்படுகிறது?

நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சதீஸ்குமார் தனது நண்பரான வாழப்பாடி பாட்டப்பன் கோயில் பகுதியைச் சேர்ந்த கல்விக்கரசன் (34) என்பவருடன் குடிபோதையில் நவ்யாவை தேடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அவரை அழைத்து பேசி விட்டு சதீஸ்குமாரும் கல்விக்கரசனும் அங்கிருந்து சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஸ்குமார் கதவை மீண்டும் தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். 

இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவ்யா கட்டையை எடுத்து சதீஸ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் நவ்யா வீட்டிற்கு வந்து பார்த்த போது சதீஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே 108க்கு தகவல் தெரிவித்தனர். 

சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனிக்கு கொண்டு சொல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறு வயதில் பூப்படைவது காரணமும் உணவுகளும் !

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் சதீஸ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings