புடவையே எமனாக மாறியது? துடித்த பெற்றோர்.. என்ன நடந்தது?

0

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் வேலாயுதம் - மகாலட்சுமி தம்பதி. இவர்களின் இளைய மகன் செல்வா (12), தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

புடவையே எமனாக மாறியது? துடித்த பெற்றோர்.. என்ன நடந்தது?
அவர்களது வீட்டில் குழந்தைகள் உறங்க கட்டப்படும் தொட்டில் போன்ற ஊஞ்சலை புடவையில் கட்டி தொங்க வைத்துள்ளனர். பிள்ளைகள் விளையாடு வதற்காக இந்த ஊஞ்சலை அவர்கள் கட்டியுள்ளனர்.

இந்நிலை சம்பவத்தன்று வீட்டில் தந்தை வேலாயுதம் கண்ணில் பிரச்சனை இருந்ததால் மருந்து விட்டுக் கொண்டு படுத்துக் கொண்டிருந்துள்ளார். தாய் தனது மூத்த மகனை வெளியில் அனுப்பிட வெளியில் சென்றுள்ளார். 

அப்போது இளைய மகன் வீட்டில் கட்டி வைக்கப் பட்டிருந்த புடவை ஊஞ்சலில் சிறுவன் செல்வா விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக செல்வா கழுத்தில் புடவை சிக்கி கொண்டுள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் செல்வா சுயநினைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் !

பின்னர் சிறுவனின் உறவினர் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்று விசாரித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனை கேட்டு சிறுவனின் பெற்றோர் கதறி துடித்தனர். தகவலறிந்து வந்த கண்ணகி நகர் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஊஞசல் விளையாட சென்ற சிறுவன் ஊஞ்சலே எமனாக மாறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings