துக்காச்சியில் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு !

0

கும்பகோணம் அருகே ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வரும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 'துக்காச்சி சௌந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்' அமந்துள்ளது. 

துக்காச்சியில் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு !
இந்த தலத்தை, 'தென் காளஹஸ்தி' என்று குறிப்பிடும் 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிய கல்வெட்டு ஒன்று வட்ட வரலாற்று ஆய்வு சங்க ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி சௌந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில், தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

உடல் எடையை குறைக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்?

இந்நிலையில், கும்பகோணம் வரலாற்று ஆய்வு சங்க குழுவினர், செயலாளர் கோபிநாத் தலைமையில், அத்தலத்தில் இன்று (மே 27) களப்பணி மேற்கொள்ளப் பட்டது.

களப்பணியில், இரண்டாம் ராஜகோபுரத்தின் வாயிற்படியில் ஒரு கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்த வரலாற்று ஆய்வு சங்க குழுவினர் அதில் இவ்வூரின் தொன்மையை பறை சாற்றும் வாசகம் இடம் பெற்றுள்ளதையும், 

கல்வெட்டில் குலோத்துங்க சோழநல்லூர், தென் திருக்காளத்தி மகாதேவர் விஜயராஜேந்திர சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப் பட்டதற்கான முக்கிய சொற்றொடர்கள் இடம் பெற்றிருப்பதையும் கண்டறிந்தனர்.

மேலும் இதுகுறித்து, வட்ட வரலாற்று ஆய்வு சங்கத்தின் செயலாளர் கோபிநாத் கூறுகையில், "இந்த ஊர் முதலாம் குலோத்துங்க சோழன் (Kulottunga I) கால கட்டத்தில் 'குலோத்துங்க சோழ நல்லூர்' என்று அழைக்கப் பட்டது. 

அவர்களுடைய 30ஆம் ஆட்சி ஆண்டில் விஜயராஜேந்திர சதுர்வேதி மங்கலத்து சபையோர் தென் திருக்காளத்தி மகாதேவருக்கு, நிலம் தானம் கொடுக்கப் பட்டதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

மேலும், இந்த கல்வெட்டு தான் இந்த கோயிலை தென் காளஹஸ்தி என்று அழைக்க சான்றாக உள்ளது. 

உலகமே திரும்பி பார்த்த இடி ஆமீன் என்ற சர்வாதிகாரி !
ஆந்திராவில் இருப்பது வட காளஹஸ்தி மற்றும் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் இந்த துக்காச்சி கோயில் தான் தென் காளஹஸ்தி என அறிய முடிகிறது என்றும் கூறினார். 

இது முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் துக்காச்சியின் ஒரு பகுதியும், அருகிலுள்ள கூகூர் கிராமத்தின் ஒரு பகுதியும் இணைந்து குலோத்துங்க சோழ நல்லூர் என்ற பெயரில் இருந்துள்ளது.

இந்த பகுதியில் தான் தென்திருக்காளத்தி மகாதேவர் கோயில் இருந்துள்ளது என்பதற்கும் இந்த கல்வெட்டே சான்றாகும். 

இத்தகைய பெருமை வாய்ந்த கல்வெட்டானது பாதுகாப்பு கருதி ஊர்மக்களின் துணையுடன் கோவிலின் மகா மண்டபத்தில் தற்போது வைக்கப் பட்டுளளது. 

திருக்குடமுழுக்கின் போது அனைவரும் கண்டு அறியும் வண்ணம் திருச்சுற்று மாளிகைப்பகுதியில் வைக்க வேண்டும் என திருப்பணிக்குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இத்தனை சிறப்பு பொருந்திய இந்த கல்வெட்டை இக்கோயிலிலேயே வைத்து பாதுகாத்து, தற்கால மற்றும் வருங்கால சந்ததியினர் 

அறிந்து கொள்ளும் வகையில், அதனை கோயில் வளாகத்திலேயே நிருவி பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. 

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் !

கல்வெட்டினை படியெடுக்கும் போது சங்கத்தின் கள ஆய்வுக்குழு உறுப்பினர்களான திலீபன், சுந்தர்ராஜ், விஷால், சுரேஷ்குமார் மற்றும் துக்காச்சி கிராமவாசிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)