நண்பனின் பிறப்புறுப்பை அறுத்த இளைஞர்... காதல் விவகார !

0

மும்பை அருகிலுள்ள பிவாண்டியைச் சேர்ந்தவர் அஸ்லாம் அன்சாரி. இவர் நண்பர் சமீம் அன்சாரி (21). சமீன் அன்சாரி சமீபத்தில் ஹோட்டல் ஒன்றை திறந்தார். 

நண்பனின் பிறப்புறுப்பை அறுத்த இளைஞர்... காதல் விவகார !

இந்த ஹோட்டலில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு. இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். 

இந்த நிலையில், இருவரும் ஹோட்டலில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது காதலிகள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. சமீமுக்கு 5 காதலிகள் இருக்கின்றனர். 

மனிதர்களை காப்பாற்றும் பன்றிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் !

பார்ட்டியில், எந்தக் காதலியிடமும் சீரியஸாக இல்லை என்று சமீம்-மீது அஸ்லாம் அன்சாரி குற்றம் சாட்டினார். ஐந்து காதலிகளில் ஒருவரிடமிருந்து விலகி இருக்கும்படி அன்சாரி கேட்டுக் கொண்டார். 

ஆனால் அதனை சமீம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 

அஸ்லாம் அன்சாரி தன் நண்பன் சமீம் அன்சாரியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு அவரின் பிறப்புறுப்பை அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டார். 

காலையில் சமீம் ஊழியர் வந்த போது தான் கொலை பற்றி தெரியவந்தது. இது குறித்து அவர் உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். 

போலீஸார் விரைந்து வந்து சமீம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு கொலையாளி அஸ்லாம் அன்சாரியை கைது செய்தனர். 

தேங்காயில் பூ விழுந்தால் சாப்பிடலாமா?

அஸ்லாம் அன்சாரி போலீஸில், சமீம் அன்சாரிக்கு 5 காதலிகள் இருந்தனர். அவர்களில் யாரிடமும் சமீம் விஸ்வாசமாக இல்லை. அவர்களில் ஒருவரைத் தான் காதலிப்பதாக கூறினான். 

அதனால், அந்தப் பெண்ணிடம் விஸ்வாசமாக இரு, அல்லது அவரிடமிருந்து விலகி விடு என்று கேட்டுக் கொண்டேன். 

ஆனால் சமீம் விலகவில்லை. இதனால் ஹோட்டலில் பார்ட்டி நடந்தபோது ஏற்பட்ட வாக்குமூலத்தில் சமீமை கொலை செய்தேன் என்று தெரிவித்தார். 

போலீஸார் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !