உலகில் ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்த சானியா மிர்சா விவாகரத்து?

0

விளையாட்டு உலகில் ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்த சானியா மிர்சாவும், ஷோயப் மாலிக்கும் விவாகரத்து செய்யப் போவதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

உலகில் ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்த சானியா மிர்சா விவாகரத்து?

விவாகரத்து என்பது சம்பந்தப்பட்ட இரு தனி நபர்களின் அந்தரங்க விஷயம். ஏன் பிரிகிறார்கள் என்பதும் அவர்கள் இருவர் மட்டுமே தீர்மானிக்கும் செயல். 

இது குறித்து கருத்து சொல்ல எவருக்கும் உரிமையில்லை. ஏன் விவாதிக்கக் கூட.இவை எல்லாம் தெரிந்தாலும் சானியா மிர்சா - ஷோயப் மாலிக் என இரு தரப்பு ரசிகர்களையும் இந்தச் செய்தி கடுமையாக பாதித்துள்ளது. 

காரணம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பகை நிலவுவதாக ஒரு சூழலை அரசியல்வாதிகள் கட்டமைத்து வருகையில்...

மகன்களை என்ஜினியர், கலெக்டர், டாக்டராக்கிய துப்புரவு பெண் தொழிலாளி - வெளிவராத ரகசியம் !

எந்த வொரு விளையாட்டுப் போட்டியிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போது அந்தப் போட்டியை யுத்தத்துக்கு சமமாக மக்கள் கருதும் அளவுக்கு 

ஒரு waveஐ அரசியல்வாதிகள் உருவாக்கும் சூழலில் -இருநாட்டு விளையாட்டு வீரர்கள் காதலித்ததும் மணந்து கொண்டதும் சிறப்பு வாய்ந்த அம்சமல்லவா?  

டென்னிஸ் உலகில் வெற்றிக் கொடியை பறக்க விட்ட சானியாவை இந்தியாவின் ஒட்டு மொத்த விளையாட்டு ரசிகர்களும் கனவு நாயகியாக கொண்டாடினார்கள்.

இந்த காலகட்டத்தில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரரான ஷோயப் மாலிக்கை காதலித்தார் சானியா மிர்சா.

2010ம் ஆண்டில் ஷோயப் மாலிக்குக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்திருந்தது. இந்த கவலையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார் ஷோயப் மாலிக்.

உலகில் ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்த சானியா மிர்சா விவாகரத்து?

இதே காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் சானியா மிர்சாவும் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார். 

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததால் சானியாவும் அப்போது மன உளைசலில் இருந்தார்.

துபாயில் உலகின் மிக ஆழமான கின்னஸ் சாதனை படைத்த நீச்சல் குளம் !

ஹோபர்ட் நகரில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் இருவரும் சந்தித்துக் கொள்ள, பரஸ்பரம் மனக் காயங்களுக்கு மருந்திட்டுக்கொண்டது இந்த ஜோடி. போதாதா..? இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக் கொண்டது.

அடுத்த சில மாதங்களுக்கு காதல் பறவைகளாகத் திரிந்த இவர்கள் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

மாலிக்கின் உறவினர்கள் 15 பேரும், சானியாவின் உறவினர்கள் 35 பேரும் கலந்து கொண்ட திருமணத்தில் 61 லட்ச ரூபாய் மெஹர் கொடுத்து சானியாவை மணந்தார் ஷோயப் மாலிக்.

திருமணத்துக்குப் பின் இந்தியாவில் இருப்பார்களா பாகிஸ்தானில் இருப்பார்களா என்று ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்க, இரண்டு நாட்டையும் விட்டு துபாயில் செட்டிலானார்கள்.

கடந்த ஆண்டுக்கு முன்புவரை எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. உலகில் ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்த சானியா மிர்சா விவாகரத்து?

2017ல் காயங்கள் காரணமாக டென்னிஸ் உலகில் இருந்து சானியா மிர்சா விலகி இருக்க, கிரிக்கெட்டில் இருந்து சற்று விலகியிருந்த ஷோயப் மாலிக்குடன் இணைந்து துபாயில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். 

2018ம் ஆண்டில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில், யார் கண் பட்டதோ, இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது. 

அந்த விரிசலை இருவரும் மறைமுகமாக தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் மகனுடன், தான் மட்டும் தனியாக இருக்கும் படத்தை வெளியிட்ட சானியா மிர்சா, கடினமான நேரத்தைக் கடக்கும் தருணங்கள் என்று அதற்கு அடிக்குறிப்பு இட்டிருந்தார்.

லோ சுகர் உள்ளவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?

மற்றொரு பதிவில், உடைந்த இதயங்கள் எங்குச் செல்கின்றன. அல்லாவைக் காண' என்று உருது மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். 

இருவருக்கும் இடையே விரைவில் விவாகரத்து ஏற்படும் என்று தெரிகிறது. இது குறித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே போல் சில நாட்களுக்கு முன் தங்கள் மண வாழ்க்கையில் சிக்கல் என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷோயப் மாலிக்கும் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த அவர், நாம் ஒன்றாக இருக்க முடியாத சூழல் ஏற்படலாம். தினந்தோறும் சந்திக்க முடியாத நிலைகூட ஏற்படலாம்.

ஆனால், உன் புன்னகை தவழும் முகத்தை அப்பா எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் இருவரும் இப்போது பிரிந்து வாழ்வதாகவும், 

உலகில் ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்த சானியா மிர்சா விவாகரத்து?

விவாகரத்து செய்து கொண்டதான அறிவிப்பை அவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்றும் ஷோயப் மாலிக்கின் உறவினரான உமேர் சந்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சானியா மிர்ஸா பாகிஸ்தானில் டென்னிஸ் அகாடமி தொடங்குவதாக இருந்தது. இது குறித்து சோயப் மாலிக்கிடம் கேட்டதற்கு அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் தெரிவித்திருக்கிறார். 

இப்போது இருவரும் தங்களது மகனுக்கு இணை பெற்றோராக மட்டுமே இருந்து வருகின்றனர். 

ஆனால் அத்தனையும் பொய் என நிரூபிக்கும் வகையில் இன்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று சானியா மிர்சா தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

ஆண்கள், பெண்கள் அழகாகத் தெரியும் வயது எது?

நடிகை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட ஃபாரா கானுடன் சேர்ந்து சானியா தனது 36 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். 

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதற்கு ஈடாக சானியா மிர்சாவுக்கு சோயிப் மாலிக் வாழ்த்து தெரிவித்துள்ள செய்தியும் வைரலாகி வருகிறது.

சோயிப்  மாலிக் சானியா மிர்சாவின் தோள் மீது கைகளைப் போட்டுக் கொண்டு அவரை பாசத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்துகள் சானியா…. 

உலகில் ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்த சானியா மிர்சா விவாகரத்து?

உடல் நலனும் மகிழ்ச்சியும் முழுமையாக கிடைக்க வாழத்துகள் என வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சானியாவும் சோயிப் மாலிக்-கும் பிரிந்து விட்டார்கள் என்கிற செய்தி காட்டுத்தீயாய் பரவி வந்த நிலையில், பாகிஸ்தானின் முதல் OTT தளமான உருதுபிளிக்ஸ் இன்ஸடாகிராமில் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார்கள். 

அதில் சானியாவும் சோயிப்  மாலிக்-கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விரைவில் ஒன்றாக தோன்றுவார்கள் என்கிற செய்தி தான் அது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)