உலகில் தீர்க்கப்படாத பல மர்மங்கள் தெரியுமா?





உலகில் தீர்க்கப்படாத பல மர்மங்கள் தெரியுமா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

நாம் வாழும் இந்த பூமியானது பல மர்மங்களையும் ஆச்சரியங்களையும் சுவாரஷ்யங்களையும் உள்ளடக்கியது. அவ்வாறு இன்னும் உலகில் தீர்க்கப்படாத பல மர்மங்கள் உள்ளன.

உலகில் தீர்க்கப்படாத பல மர்மங்கள் தெரியுமா?

இன்றைய நவீன தொழிற்நுட்பத்தில் புதைக்கப்பட்ட உடலையே தோண்டி எடுத்து அதில் ஆய்வு செய்ய முடியம். 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்கள் கூ மிக சிறிய விஷயங்களிலிருந்து கண்டுபிடிக்க முடியும். 

வெயில் காலத்தில் மாம்பழம் ஏன் சாப்பிடணும் தெரியுமா?

ஆனால் இன்றைய காலகட்டத்திலும் பல தீராத மர்மங்கள் இந்த உலகில் இன்றும் உள்ளன. இந்த மரணங்கள் எல்லாம் நம்மை பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி விடும். 

பலர் இந்த மர்மங்களை எல்லாம் கண்டுபிடிக்க முயன்றும். அப்படியான மற்றவர்கள் கேட்டால் உரைய வைக்கும் வகையிலான மர்மங்களை பற்றி தான் இங்கே காணப்போகிறோம்.

கிளியோபாட்ராவின் கல்லறை (TOMB OF CLEOPATRA)

உலகில் தீர்க்கப்படாத பல மர்மங்கள் தெரியுமா?

எகிப்தை ஆட்சி செய்த வரும் உலகின் பேரழகிகளில் ஒருவருமான கிளியோபாட்ரா மிகவும் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்த அரசியாக பார்க்கப்படுகிறார். 

அதிகாரம் கைமீறி போய் விடாமல் இருக்க தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணையில் அமர்ந்தவள் கிளியோபாட்ரா. 

அதுவும் சொந்த சகோதரனையே கணவனாகக் கொண்டு அரியணையில் ருசி பார்த்தவள். கிளியோபாட்ரா தனது 39வது வயதில் இறந்தார். இவரது மரணத்தின் காரணமாக பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. 

வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை போக்குவது எப்படி?

பொதுவாக இவர் ஆஸ்க் என்றழைக்கப்படும் கொடிய பாம்பை தீண்ட வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. 

இது தவிர கொடிய விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் நம்பப்படுகின்றது. ஆனால் இவரின் கல்லறை இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை. 

அடக்கம் செய்யப்பட்ட இடம் இறுதியாக அலெக்ஸாண்ட்ரியா விலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தபோசிரிஸ் மேக்னா பகுதியில் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது 

என்று எகிப்திய தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹிஹாவாஸ், பலேர்மோ கூட்டத்தின் போது ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.  

ஓக் தீவு பொக்கிஷம் (OAK ISLAND TREASURE)

உலகில் தீர்க்கப்படாத பல மர்மங்கள் தெரியுமா?

கடந்த சில நூற்றாண்டுகளாக கனடா நாட்டின் நோவா ஸ்கோட்டியா என் நாட்டின் அருகே ஓக் என்ற மர்மமான தீவு ஒன்று உள்ளது. 

இந்த தீவிற்குள் யாருக்கு தெரியாமல் விலை மதிக்க முடியாத பொருள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும், மிகப்பெரிய கடற் கொள்ளையனாக இருந்த கேப்டன் வில்லியம்ஸ் 

அவனது படையுடன் சேர்ந்து ஐரோப்பிய கடற்படைகளிடம் இருந்து கொள்ளையடித்த பொருட்களை இங்கு மறைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடிப்படியாகக் கொண்டே பலரும் பல மில்லியன்களை செலவு செய்து அங்கு தேடல் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் இன்று வரை அங்கு யாரும் புதையலை கண்டுபிடிக்கவில்லை. 

செப்பினால் ஆன சுருள் புதையல் (COPPER SCROLL TREASURE)

உலகில் தீர்க்கப்படாத பல மர்மங்கள் தெரியுமா?

இஸ்ரேலிற்கு அருகில் உள்ள சாக் கடலிற்கு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கும்ரான் எனும் பகுதியில் 

1952 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சியில் குகைகளிலிருந்து செப்பினால் ஆன சுருள்கள் கண்டெடுக்கப்பட்டன. 

40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

அதில் புதையலை பற்றிய குறிப்புகள் இருந்தன. முற்காலத்தில் இந்த பிரதேசத்தில் ரோமானியர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் ஏற்பட்டதால் 

அவர்களிடம் இருந்து தமது விலை மதிப்பான பொருட்களை பாதுகாக்க, அவற்றை புதைத்து வைத்திருந்தமைக்கான 64 குறிப்புக்கள் இதில் அடங்கியுள்ளன. 

அது உண்மையாகி இருந்தாலும் எப்போது அந்த புதையல் மீட்கப்படும் என்பது சந்தேகமே.

உடன்படிக்கைப் பேழை (THE ARK OF COVENANT)

உலகில் தீர்க்கப்படாத பல மர்மங்கள் தெரியுமா?

பல நூற்றாண்டுகளாக தேடப்படும் ஒரு பொக்கிஷமாக இது பார்க்கப்படுகிறது. ஜெருசலேம் இந்த நகரில் மூன்று முக்கிய மதங்கள் தோன்றியுள்ளது. 

கிறிஸ்தவம், இஸ்லாம், ஜூடைசம், கிமு 587களில் ஜெருசலேமை பேபிலான் என்ற இன மக்கள் தாக்கினர். இதில் ஒட்டு மொத்த ஜெருசலேமே அழிந்த போனது.  

கிறிஸ்தவர்களின் பழைய நூலான EXODUS எனும் நூலில் குறிப்பிட்டுள்ளபடி, எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு வந்த 

யூதர்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பத்து கட்டளைகளை அடங்கிய கற்பலகைகளை பாதுகாக்கும் ஒன்றே இந்த ARK OF COVENANT. 

இது தங்கத்தால் செய்யப்பட்டு யூதர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த போதிலும் ஒரு கட்டத்தில் பாலஸ்தீனர்கள் கொள்ளையிட்டனர். 

பெண்கள் மார்பக அழகைப் பராமரிக்க சில குறிப்புகள் !

எனினும், பின்னர் மீட்கப்பட்டது. சொலமன் மன்னனின் காலம் வரை ஜெருசலேமிலுள்ள ஒரு கோயிலில் இது பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. 

பின்னர் பாபிலோனிய படையெடுப்பில் மீண்டும் சூறையாடப் பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. 

ஆனால் பல நூற்றாண்டுகளாக தேடப்பட்டு வந்த ARK OF COVENANT இன்றுவரை கண்டெடுக்கப் படவில்லை. 

மேலும் இதனை மையமாக கொண்டு இந்தியானா ஜோன்ஸ் போன்ற திரைப்படங்களும் வெளியாகின.

பாபிலோனின் தொங்கும் தோட்டங்கள் (HANGING GARDENS OF BABYLON)

உலகில் தீர்க்கப்படாத பல மர்மங்கள் தெரியுமா?

நாம் சிறு வயதில் தொங்கும் தோட்டம் குறித்து எல்லாம் படித்திருப்போம். அது பேபிலான் இன மக்கள் இருந்த இடத்தில் இருந்ததாக பல வரலாற்று சான்றுகள் உள்ளன. 

ஆனால் பேபிலான் இன மக்கள் இருந்தது. தற்போத ஈராக் இருக்கும் பகுதியாகும். 

கி.மு 600 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததென கூறப்படும் இந்த தொங்கும் தோட்டம், ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. 

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவுகள் !

வரலாற்று குறிப்புகளின்படி இந்த தொங்கும் தோட்டத்தில் சாதாரண செடி, கொடிகள் மட்டுமன்றி, நீண்டு வளரும் வானுயர மரங்களும் காணப்படுவதாக கூறப்படுகின்றது. 

ஆனால் இவற்றை நம்பும் வகையில் எந்த ஒரு கண்டுபிடிப்புகளையும் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தவில்லை.

​ஜான் எஃப் கென்னடி

உலகில் தீர்க்கப்படாத பல மர்மங்கள் தெரியுமா?

அமெரிக்காவின் 35வது அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடியின் மரணம் உலகின் மிகப்பெரிய மர்மமாக உள்ளது. 

1963ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி லீ ஹார்வி ஆஸ்வால்டு என்பவர் ஜான் எஃப் கென்னடியை சுட்டு கொன்றார். 

அவர் கைது செய்யப்பட்ட இரண்டாவது நாளே மர்மமான நபர் ஒருவர் ஆஸ்வால்டை சுட்டு கொன்று விட்டார். இப்பொழுது ஜான் எஃப் கென்னடி ஏன் சுட்டு கொல்லப்பட்டார். 

திருமணம் முடிக்கப் போகும், கருத்தரிக்க காத்திருக்கும் பெண்களுக்கு !

ஆஸ்வால்டை சுட்டுக்கொன்றது யார்? அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது தீராத மர்மமாக இருக்கிறது. 

ஜான் எஃப் கென்னடி அதிபராக இருந்த போது தான் அமெரிக்கா நிலவிற்கு முதன் முதலாக மனிதனை அனுப்பியது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)