ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி !

0

பூவே உனக்காக சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.

ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி !

தமிழ் சேனல்களில் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பது சீரியல்கள் தான். 

ரியாலிட்டி ஷோக்கள் ஒரு பக்கம் சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தினாலும், மீதி நேரங்களில் சேனல்களுக்கு துணை நிற்பவை சீரியல்களே.

உத்திட்ட திரிகோணாசனம் செய்வது எப்படி?

பிரபல முன்னணி தமிழ் சேனலாக உலக தமிழர்களிடையே புகழ் பெற்றிருக்கும் சன் டிவி-யில் நாள் முழுவதும் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சன் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல் பூவே உனக்காக.அருண், ராதிகா ப்ரீத்தி, ஜோவிதா லிவிங்ஸ்டன் சாயாசிங் 

ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போதுவரை 300 எபிசோடுகளை கடந்துள்ளது.

பூவே உனக்காக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், சீரியலில் அடிக்கடி கேரக்டர் மாற்றம் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. 

அந்த வகையில், முதலில் ஜோவிதா லிவிங்ஸ்டன், தொடரில் இருந்து விலகினார். 

அமிலப் பின்னோட்ட நோய் எப்படி ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?

அவரை தொடர்ந்து சில மாதங்களில், சீரியலின் நாயகன் அருண் சீரியலில் இருந்து விலகியதாக அறிவித்தார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் முகமது அசீம் கதிர் வேடத்தில் நடித்து வருகிறார். 

அடுத்து கதிரின் அம்மாவாக நடித்து வந்த சுதா ராமானுஜம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கிருபா கிருஷ்ணமூர்த்தி நடித்து வருகிறார். 

இந்நிலையில், தற்போது சீரியலின் நாயகி பூவரசியாக நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி சீரியலில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்துமிக்க காலிஃப்ளவர் கீர் செய்வது எப்படி?

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், கனத்த இதயத்துடன் நான் பூவே உனக்காக 

சீரியலில் இருந்து விலகுகிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். 

இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய சன்டிவிக்கு நான் என்னென்றும் நன்றியுள்ளவளாக இருப்பபேன். எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி.

ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி !

தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளித்து வரும் எனது ரசிகர்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் 

நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர்களே, நீங்கள் இல்லாமல் நான் இதை செய்திருக்க முடியாது. 

என் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் என்னுடன் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், உங்கள் அனைவரையும் விரும்புகிறேன். 

போன்லெஸ் மட்டன் மசாலா செய்வது எப்படி?

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

சீரியலில் அடிக்கடி கேரக்டர் மாற்றம் ஏற்படுவதால், தற்போது இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், 

பூவரசி கேரக்டரில் அடுத்து யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)