வெளிநாட்டு வீடியோ கால் பழக்கம்... கதறி உயிரை விட்ட திருச்சி மீனா !

0

திருச்சி மாவட்டம் குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (45), இவருக்கு மீனா என்ற மனைவியும், 2 மகன் ஒரு மகள் உள்ளனர். 

வெளிநாட்டு வீடியோ கால் பழக்கம்... கதறி உயிரை விட்ட திருச்சி மீனா !

இந்நிலையில், பாலசுப்ரமணியம் நன்கு சம்பாதிப்பதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். 

அங்கு வேலை பார்த்து மனைவிக்கு மீனாவுக்கு பணம் அனுப்பி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கணவருடன் பேசுவதற்காக வாங்கிய செல்போனில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் மீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

ஹெர்னியா பாதிப்பினைத் தவிர்க்க !

மேலும் அருகில் இருந்தவர்கள் உறவினர்கள் மீனா அவருடைய கணவருடன் பேசுவதற்காக தான் அவருடன் பழகி உள்ளார் என்று இருந்தனர். 

ஒரு கட்டத்தில் சுரேஷுக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் ஆசை ஏற்பட எனக்கும் பணம் கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வை என 

மீனாவை கட்டாயப்படுத்தவே வேறு வழியின்றி கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணத்தில் 

2 லட்சம் ரூபாய் வரை செலவழித்து சுரேசை மீனா வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

வெளிநாட்டு வீடியோ கால் பழக்கம்... கதறி உயிரை விட்ட திருச்சி மீனா !

வெளிநாட்டிற்கு சென்ற சுரேஷுடன் ஆரம்பத்தில் பேசிய மீனா அவருடனான தொடர்பை துண்டிக்கும் வகையில் நடந்து கொண்டார். 

இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சுரேஷ் உனக்கு வேறு யாருடனோ தொடர்பு உள்ளது? 

அதனால் என்னை வெறுத்து பேசுகிறாயா? என கூறவே ஆத்திரமடைந்த மீனா, எத்தனையோ உதவிகளை செய்த என்னை நன்றி மறந்து அநியாயமாக பேசுகிறாயே, 

ஹெர்னியா ஏற்பட அடிப்படை காரணம் !

என்று கூறி ஒரு கட்டத்தில் தான் கொடுத்த 2 லட்ச ரூபாய் பணத்தை வசூலிக்க முடிவெடுத்து 

சுரேஷின் பெற்றோர் வீட்டிற்கு சென்று சுரேஷ் வெளிநாடு செல்ல தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். 

ஆனால் சுரேஷ் குடும்பத்தினரோ மீனாவை நடுரோட்டில் வைத்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டனர்.

இதனால் அவமானம் தாங்காத மீனா தனது வீட்டுக்கு சென்று கடந்த மாதம் 20ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வெளிநாட்டு வீடியோ கால் பழக்கம்... கதறி உயிரை விட்ட திருச்சி மீனா !

மீனா தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டில் இருந்த கணவனுக்கு தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் அவர் உடனடியாக வர முடியாத நிலையில் மீனாவின் உறவினர்கள் கூடிப்பேசி மீனாவின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரித்து விட்டனர்.

ஆனால் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரால் எழுந்த பிரச்சனை காரணமாகவே மீனா தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் உறவினர் மத்தியில் பரவியது. 

சிசேரியன் போது கொடுக்கப்படும் மயக்க மருந்து விளைவுகள் என்ன?

இதனையடுத்து மீனாவின் உறவினர்கள் கடந்த மாதம் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய பாலசுப்ரமணியன் தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலையை பார்த்து கதறி அழுதுள்ளார். 

உங்களுக்காகத் தானே ஏதோ ஒரு நாட்டில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் என்று 

கண்ணீர் மல்க கலங்கி வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார். 

வெளிநாட்டு வீடியோ கால் பழக்கம்... கதறி உயிரை விட்ட திருச்சி மீனா !

ஒரு கட்டத்தில் மனதை தேற்றிக் கொண்டு தனது மனைவி மீனா பயன்படுத்திய செல்போனை பார்த்த போது அதில் பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தன.

தினமும் இரவு நேரத்தில் வெளிநாட்டில் இருந்த சுரேஷ் மீனாவை மிரட்டி நிர்வாணமாக நின்று வீடியோ கால் பேச கட்டாயப் படுத்தியதை அறிந்து கொண்டார்.

அப்படி மிரட்டிய வீடியோவில் இருவரும் நிர்வாண நிலையில் இந்த வீடியோக்கள் மீனா செல்போனில் இருந்தது அவரை அதிர்ச்சி அடைய செய்தது. 

பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்தன்மை! அதிர்ச்சி தரும் நிஜம் !

மேலும், மீனா தற்கொலை செய்வதற்கு முன்பு சுரேஷ் வீட்டிற்கு பணம் வாங்க சென்ற போது நடந்த விவகாரத்தால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். 

என் சாவிற்கு சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் பொறுப்பு என பேசிய வீடியோ அதில் இருந்தது.

இந்த வீடியோக்களை பார்த்த பாலசுப்ரமணியம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் புகாராக எழுதி லால்குடி DSP யிடம் 

புகார் அளித்ததன் பேரில் கடந்த 22ஆம் தேதி வெளிநாட்டில் இருக்கும் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியது, 

வெளிநாட்டு வீடியோ கால் பழக்கம்... கதறி உயிரை விட்ட திருச்சி மீனா !

செல்போன் மூலம் ஆபாசமாக பேசியத, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் வெளிநாட்டிற்கு சென்று உழைப்பது வருங்காலம் குடும்பம் நன்றாக இருப்பதற்கு தான் என்பதையும், 

அழகுக்கு அழகு சேர்க்கும் எளிய அழகு குறிப்புகள் ! 

குடும்பத்தை விட்டு ஏதோ ஒரு நாட்டில் கஷ்டப்படும் ஒவ்வொரு கணவனுக்கும் மனைவியும், 

பிள்ளைகளும் தான் கடைசி அரவணைப்பு என்பதையும் உணர்ந்தால் தனியாக இருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படாது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)