போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

0

கஞ்சா விற்பனை செய்வது, உபயோகிப்பது சட்டப்படி குற்றம். கஞ்சா வைத்திருந்தால் உடனடி கைது தான்.

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

தற்போது கஞ்சாவை மருந்து பொருளாக சட்டப்படி விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார். 

பல்வேறு வடிவங்களில் பயபடுத்தப்படும் கஞ்சா பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. 

எந்தவொரு விஷயத்திலும் நன்மையும், தீமையும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இருக்கும் என்பது உண்மை.

தண்ணீர் பால் தான் நல்லது? உண்மையா?

அதே போல, பெயரைக் கேட்டாலே, போதைப் பொருள் என்று நினைக்கும் பலருக்கும் கஞ்சாவின் மருத்துவப் பயன்கள் தெரிவதில்லை. 

அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தி எப்படி காயத்தையும் ஏற்படுத்தும்.

அதே போல, மருந்தாக பயன்படுத்த நினைக்கும் கஞ்சா மிகவும் சக்தி வாய்ந்த போதைப் பொருளாகவும் பயன்படுத்துவதால், இதன் பெயரே பலருக்கு பீதியைக் கொடுக்கிறது.

இந்தியாவில் கி.மு. 800 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்கிறது. 

இன்றைக்கு அதிக அளவில் போதை வஸ்துவாக மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இது தடை செய்யப்பட்டுள்ளது. 

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

இதன் விதை மற்றும் தண்டு நார்களுக்காகவும், கள்ளத்தனமாக கஞ்சாவிற்காகவும் தற்போது மலைப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

உண்மையில், கஞ்சா செடியின் அனைத்து பாகங்களும் பயன்பாட்டுக்குரியவை. 

அதிலும் குறிப்பாக இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வலி நிவாரணியாகவும், மயக்க மருந்தாகவும், கஞ்சா பயன்படுத்தப்பட்டுள்ளது.

கஞ்சாவில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருந்தாலும், இதை முறைகேடாகப் பயன்படுத்துவது மற்றும் 

போதைப் பொருளாகப் பயன்படுத்துவதைத் கட்டுப்படுத்துவதற்காக இது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சாவில் உள்ள ஒரு பிரத்யேக ரசாயனம், மூளையை பாதிக்கக்கூடியது. இது வலி நிவாரணியாக செயல்படுகிறது. 

முறைப்படி பயன்படுத்தினால், கஞ்சா பல மருத்துவ நன்மைகளைக் கொடுக்கும்.

சேலஞ்சிற்கு மறுத்த நபரின் வங்கி கணக்கை வெளியிட்டு மிரட்டிய மோமோ !

மூன்று வகை மருந்துகள்

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

பாங், கஞ்சா, சரஸ் போன்ற மூன்று வகையான மருந்துகள் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

உலர்த்தப்பட்ட இலைகள் பாங் எனப்படும். இது கரும்பச்சை வண்ணத்தில் காணப்படும். 

பெண் தாவரங்களின் மலர்கள் அல்லது கனிகள் கொண்ட பிசின் அகற்றப்படாத நுனிப்பகுதிகள் கஞ்சா எனப்படும். இது குறிப்பிட்ட வாசனை கொண்டது.

தினமும் சிறிதளவு ஒரு கோப்பை மது ஆரோக்கியமா?

அறுவை சிகிச்சை மருந்து

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

பண்டைய எகிப்தில் கண் வீக்கம் போக்கவும், கருப்பையினை குளிர வைக்கவும், கஞ்சா பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. 

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் இலைகளின் வடிசாறு அல்லது இலைகளை வலி போக்கும் மருந்தாக அறுவை சிகிச்சையின் பொழுது பயன்படுத்தினர்.

(குறிப்பு: கஞ்சா செடியின் மருத்துவ பயன்பாடுகளை பற்றி சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்)

நாள்பட்ட வலி நிவாரணம்

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

கஞ்சாவில் நூற்றுக்கணக்கான ரசாயன கலவைகள் உள்ளன, இது போன்ற வேறு எந்த பொருளிலும் இந்த அளவு ரசாயனங்கள் இருக்காது. 

இந்த பிரத்யேக ரசாயன அமைப்பு காரணமாக நாள்பட்ட வலிக்கு காஞ்சா நிவாரணம் அளிக்கிறது.

முதல் நாளே 40,000 வாடிக்கையாளர்கள் `ஐக்கியா’-வில்?

நுரையீரல் திறன் அதிகரிக்க

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

சிகரெட் புகைப்பதைப் போலல்லாமல், கஞ்சா வடிவில் கஞ்சாவைப் புகைக்கும் போது உங்கள் நுரையீரல் பாதிக்கப்படாது. 

உண்மையில், கஞ்சா நுரையீரலுக்கு தீங்கு விளைவிப்பதை விட அதன் திறனை அதிகரிக்க உதவுகிறது என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

பசியை தூண்டும்

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

பாங் மற்றும் கஞ்சா பசியை தூண்டுகிறது. நரம்பு செயல்களையும் தூண்டுகிறது. இது மலமிளக்கியாகவும் தரப்படுகின்றன. 

இலைகளை கசக்கி அதிலிருந்து பெறப்பட்ட பிசின் போன்ற பொருளே சரஸ் எனப்படும். இது கரும்பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இனி வருகிறது செயற்கைச் சிறுநீரகம் !

நீரிழிவை கட்டுப்படுத்த

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

உடலில் இன்சுலினைக் கட்டுப்படுத்த உதவும் கஞ்சாவின் பண்பினால், உடல் பருமனை குறைக்கவும் (Weight Loss), நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

(குறிப்பு: கஞ்சா செடியின் மருத்துவ பயன்பாடுகளை பற்றி சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்)

எலும்புகளை குணப்படுத்த

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

கஞ்சாவில் உள்ள எண்டோகன்னாபினாய்டு கலவைகள் மனச்சோர்வு மற்றும் மன இறுக்கத்தை குறைக்க உதவுகின்றன. 

உடைந்த எலும்புகளை குணப்படுத்த உதவும் கன்னாபிடியோல் என்ற ரசாயனம் கஞ்சாவில் இருக்கிறது.

படிக்காத மேதையின் சம்பளம் 21 கோடி

கண் பார்வை

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

கண் பார்வையில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் கிளௌகோமா பிரச்சனைக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கிறது. 

ஹெபடைடிஸ் சி உடன் தொடர்புடைய பக்க விளைவுகளை குறைக்கிறது மற்றும் சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்கிறது.

ஹெபடைடிஸ் சி

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

பொதுவாக, ஹெபடைடிஸ் நோய்க்கான சிகிச்சையானது குமட்டல், சோர்வு, மனச்சோர்வு மற்றும் தசைவலி போன்ற பல பக்க விளைவுகளைக் ஏற்படுத்தும். 

ஹெபடைடிஸ் சி பாதிக்கப் பட்டவர்களுக்கான சிகிச்சை பல மாதங்கள் வரை நீடிக்கும்.

சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகளில் மருத்துவ பயன்பாடுகளுக்காக (Medicinal Usage) கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. 

குடல் அழற்சி நோய்கள் மற்றும் பார்கின்சன் நோய்க்கு தரப்படும் மருந்துகளில் மருந்தாக கஞ்சா சேர்க்கப்படுகிறது.

லலிதா கொள்ளை சம்பவத்தில் திருப்பம்... போலீசார் அதிர்ச்சி !

மலச்சிக்கலை போக்குகிறது

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

இலைகளின் சாறு பூச்சிகளை அழிக்கின்றது. விதைகள் சிறந்த மலமிளக்கி. குறிப்பாக முதியவர்களின் மலச்சிக்கலை போக்க வல்லது. 

இத்தாவரம் கிளாக்கொமா, உயர் ரத்த அழுத்தம், போக்க பயன்படுகிறது. தாவரத்தின் கசாயம் இரத்த வயிற்றுப் போக்கினைத் தடுக்கிறது.

புற்றுநோய்க்கு மருந்தாகும் கஞ்சா

போதைக்கு பயன்படும் கஞ்சா... நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது தெரியுமா?

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் நோய்க்கு மருந்தாக கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே வரிசையில் இந்தியாவிலும் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 

McAfee யால் தெலைந்த போனை கண்டுபிடித்த பொலீஸார் - கட்டாயம் வாசியுங்கள் !

குறிப்பாக புற்றுநோய் குணப்படுத்துவதில் கஞ்சா முக்கிய பங்கு வகிக்கிறது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் மேனகா காந்தி.

(குறிப்பு: கஞ்சா செடியின் மருத்துவ பயன்பாடுகளை பற்றி சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்)

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)