கிட்னி செயலிழந்ததால் தாயும் மகனும் விஷத்தை குடித்து தற்கொலை !

0

பர்கூர் அருகே கிட்னி செயலிழந்த மன வேதனையில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

கிட்னி செயலிழந்ததால் தாயும் மகனும் விஷத்தை குடித்து தற்கொலை !
மகன் மயங்கி கிடந்ததை பார்த்து மீதமிருந்த விஷத்தை குடித்து தாயும் தற்கொலை செய்து கொண்டார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த காரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (50). இவர், ஐதராபாத்தில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். 

அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ஆபத்து !

இவரது மனைவி கஸ்தூரி (45). இவர்களுக்கு பிரேம்குமார் (25), புனித் (21) என்ற 2 மகன்கள். இதில், மூத்த மகன் பிரேம்குமார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 

இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில், பிரேம்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிட்னி செயலிழந்தது. 

இதற்காக அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். 

மேலும், அவருக்கு மாற்று கிட்னி பொருத்தினால் தான் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
புகை பழக்கத்தை தடுக்கும் வாழைப்பழம் !

இதனையடுத்து, மகனுக்காக கஸ்தூரி கிட்னி தர முன்வந்தார். தொடர்ந்து, பிரேம்குமாருக்கு கிட்னி பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

இந்நிலையில், மீண்டும் பிரேம்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது, அவருக்கு மஞ்சள் காமாலை இருந்தது தெரிய வந்தது.

இதன் காரணமாக அவருக்கு கிட்னி தற்போது பொருத்த முடியாது என மருத்துவர்கள் கூறி விட்டனர். 

இதனால், பிரேம்குமார் மன வேதனையில் இருந்துள்ளார். நேற்று இரவு பிரேம்குமார் மன வேதனையில் விஷமருந்தி மயங்கி கிடந்தார். 

இதைப் பார்த்த அவரது தாய் கஸ்தூரியும் அவர் குடித்து விட்டு வைத்திருந்த மீதி விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். 

தூக்கமில்லாமல் அவஸ்தை படுகிறீர்களா?
அவர்கள் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

தாய், மகன் விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)