கும்பகோணத்தை சேர்ந்த கில்லாடி பெண்... புது டெக்னிக்கில் மிரட்டும் சத்யபாமா !





கும்பகோணத்தை சேர்ந்த கில்லாடி பெண்... புது டெக்னிக்கில் மிரட்டும் சத்யபாமா !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

பெரும் பணக்காரர்கள், பதவியில் இருப்பவர்களை குறி வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஜெகஜ்ஜால வேலையில் இறங்கிறார்கள் சில பெண்கள். 

கும்பகோணத்தை சேர்ந்த கில்லாடி பெண்... புது டெக்னிக்கில் மிரட்டும் சத்யபாமா !
அந்த சம்பவங்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு படு சுவாரஸ்யம். அப்படி ஒரு கில்லாடி பெண் தான் இந்த சத்யபாமா. 

42 வயதான இவர் பணம் இருப்பவர்களை குறி வைத்து அவர்களுடன் தான் இருப்பது போன்ற புகைப்படங்களை சித்தரித்து, 

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீர்கள் !

அவர்கள் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கட்டுக்கதை கட்டி, அவர்களை ப்ளாக் மெயில் செய்து கட்டுக்கட்டாக பணத்தை கறந்துள்ளார்.  

கும்பகோணத்தை சேர்ந்த டாக்டர் கோபால கிருஷ்ணனின் மகள் சத்தியபாமா. இவரது தாயார் சந்திராவும் மருத்துவர் தான். 

சத்யபாமா, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேலாளராகப் பணியாற்றினார்.

மருந்து கம்பெணி உயரதிகாரியான 60 வயதான அதிகாரியையும் அவரது உறவினர்களையும் அழைத்து மிரட்டல் விடுத்து வருகிறார். 

அந்த அதிகாரியுடன்  தான் இருக்கும் புகைப்படங்களை மார்பிங் செய்து அதனை சமூக வளைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் 

போன்றவற்றில் பதிவிட்டு தன்னை அந்த அதிகாரி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறி வந்தார். 

கும்பகோணத்தை சேர்ந்த கில்லாடி பெண்... புது டெக்னிக்கில் மிரட்டும் சத்யபாமா !

சத்யபாமா பிளாக்மெயில் மற்றும் மிரட்டி பணம் பறிப்பதில் ஒரு பழக்கமான குற்றவாளி. 

அப்படி சிக்கும் ஆண்களை திருமணம் செய்து கொண்டதாக  சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பகிர்ந்து விடுவார். 

இதனால், அதிர்ச்சியாகும் பாதிக்கப்பட்ட ஆண்களிடம் இருந்து பணம் மற்றும் சலுகைகளை மிரட்டிக் கேட்பார். 

அந்த அதிகாரியை போல பல ஆண்கள் சத்ய பாமாவிடம் ஏமாந்த ஆண்களின் லிஸ்ட் ஏராளம். 

தன்னை இன்ஸூரன்ஸ் மேலாளராக கூறிக் கொள்ளும் அவர், சமூக வலைதளங்களில் வச்தியான ஆண்களை தேடிப்பிடித்து நட்பாக்கிக் கொள்வார். 

பின்னர் அவர்களை நேரில் சந்தித்து ஒரு பாலிசி போடுங்கள் என நெருக்கமாவார். 

அப்படியே நெருக்கமான நட்பு வலையத்துக்குள் கொண்டு வந்து அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படங்களை எடுத்துக் கொள்வார். 

அந்த புகைப்படங்களை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக மிரட்டுவார். எதற்கு வம்பு என ஒதுங்க நினைக்கும் ஆண்களிடம் பணத்தை பறிப்பார். 

இப்படித்தான் அந்த அதிகாரியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து அவர் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

அவரும் தானும் பெற்றுக் கொண்ட 9 மாதக் குழந்தையின் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

அடிக்கடி தவறான தகவல்களைப் பதிவிடுவதும், அடிக்கடி மிரட்டல் விடுப்பதுமாக அந்த அதிகாரிக்கு பெரும் மன வேதனையையும், 

கும்பகோணத்தை சேர்ந்த கில்லாடி பெண்... புது டெக்னிக்கில் மிரட்டும் சத்யபாமா !

அவரது நற்பெயரை கெடுத்து, அவரது குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

தற்போது, ​​அந்த அதிகாரி மிகவும் ஆபத்தான நிலையிஅந்த அதிகாரியை ஹைதராபாத் மருத்துவமனைக்கே சென்று 

அவரது குடும்பத்தினரை மிரட்டி தனக்கும் சொத்து வேண்டும் என மிரட்டி இருக்கிறார் சத்ய பாமா. 

இதனால் அதிர்ச்சியான அந்த அதிகாரி குடும்பத்தினர் சத்யபாமா மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

2018ல் பாண்டிச்சேரியில் அந்த அதிகாரியை சந்தித்து இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்கச் சொல்லி இருக்கிறார். 

அங்கு அந்த அதிகாரி தனது மகனுக்காக சென்னையில் பாலிசி எடுக்கப்பட்டது. அடுத்தடுத்து அந்த அதிகாரியை சந்தித்து நட்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார். 

ஹோட்டல்கள் அல்லது உணவகங்கள் அல்லது அவரது வீடிற்கு சென்று சந்தித்துள்ளார். 

அப்போது உணவருந்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இவர் தனது கணவர் என கூறிக் கொள்வார். 

அவ்வபோது வீட்டு வாடகை, மருத்துவ செலவுகள், குழந்தை பள்ளி கட்டணம் போன்று ஆரம்பித்து பணம் கறக்க ஆரம்பிப்பார். 

பிறகு மெல்ல அந்த புகைப்படங்களை பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தாரிடம் காட்டப் போவதாக  கூறி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் இந்த சமத்து சத்ய பாமா. 

கும்பகோணத்தை சேர்ந்த கில்லாடி பெண்... புது டெக்னிக்கில் மிரட்டும் சத்யபாமா !

மயிலாடுதுறையைச் சேர்ந்த தங்கராஜுடன் 2001ம் ஆண்டு சத்ய பாமாவுக்கு திருமணம் நடைந்துள்ளது. 

பல ஆண்களுடன் சட்ட விரோதமாக உறவாடும் பழக்கத்தால் 2006 ல்திருமணம் விவாகரத்தில் முடிந்தது. 

அவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளான் . அடுத்து கும்பகோணம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். 

இந்த வழக்கை புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சோமநாதன் விசாரித்துள்ளார். தலைமை மேலாளரின் மனைவி மற்றும் அவரது தந்தை புகார் அளித்தனர். 

ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், பகுதி மேலாளர் மனோஜ்குமார் லோகநாதன் என்பவர் சிக்கியுள்ளார். 

இந்த லோகநாதன் திருச்சிராப்பள்ளியை சேர்ந்தவர். சத்யபாமா, மனோஜ்குமாருடன் உறவில் ஈடுபட்டு, அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் மீது திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. 

அடுத்து சத்யபாமா 27-08-2009 அன்று மஞ்சோகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 31-03-2021இல் விவாகரத்து பெற்றார். 

அடுத்து பில்டிங் காண்ட்ரக்டரான திருச்சி, வேலுசாமியை இசைஞானி ரசிகர் மன்றம் மூலம்  சத்யபாமா சந்தித்துள்ளார். 

குழந்தைகளின் மூளையை கொல்லும் தொலைக்காட்சி !

அவரை சிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் அணுகுகிறார். வேலுசாமிக்கு திருமணம் முடிந்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

வேலுசாமியை சிக்கவைக்க பல்வேறு திட்டங்களை போட்டுள்ளார் சத்யபாமா.  திடீரென்று சத்யபாமாவின் நடத்தை வன்முறையாக மாறுகிறது. 

வேலுச்சாமியின் வீட்டுக்குச் சென்று மிரட்டுவது, 3 மாதங்களாக போனில் மிரட்டுவது, போலி பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

வேலுச்சாமி அலுவலக ஊழியர்களை தொடர்பு கொண்டு மிரட்டுவது, அவருடை நண்பர்களை அழைத்து, 

வேலுசாமியை காதலிப்பதாகவும், உறவில் இருப்பதாகவும் பொய் சொல்லி இருக்கிறார். 

கணவனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் அவரை விட்டு விலகுமாறு வேலுச்சாமி மனைவியை மிரட்டியுள்ளார்.  

பள்ளி விடுமுறையில் குழந்தைகளை சமாளிக்க !

இது குறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

அடுத்து 2018ல் இந்திரா கணேசன் குழுமம் சார்பில் பள்ளிகள், பொறியியல், மருத்துவ அறிவியல் உட்பட 

பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வரும் ஜி.ராஜசேகரன், சத்ய பாமாவின் வலையில் சிக்குகிறார். 

ராஜசேகரனை பணத்திற்காக மிரட்ட ஆரம்பிக்கிறார். ராஜசேகரின் மனைவி என்ற பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி போட்டோக்களை பகிர்கிறார். 

ராஜசேகரன், தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சத்ய பாமாவின் அடுத்த டார்கெட், அந்த அதிகாரி. 

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது எதனால்?

சென்னையில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர்.அந்த அதிகாரியின் 2வது மனைவி என்று கூறி வலம் வந்தார். 

கும்பகோணத்தை சேர்ந்த கில்லாடி பெண்... புது டெக்னிக்கில் மிரட்டும் சத்யபாமா !
அந்த அதிகாரி இல்லை என்று முறுத்த போது அவரது முதலாளியை அழைத்து பேசியுள்ளார் சத்யபாமா. இதைக் கேட்டு அவரது முதலாளி அதிர்ச்சியடைந்தார்.  

ஆனால் அந்த அதிகாரி சிகிச்சையில் இருக்கிறார். இதனை தெரிந்து கொண்ட சத்யபாமா, ஹைதராபாத் செல்கிறார். 

ஏன் கோடைக் காலத்தில் லெகிங்ஸ், ஜீன்ஸ் தவிர்க்க வேண்டும்?

அங்கு சிகிச்சை பெறும் அந்த அதிகாரியை மருத்துவமனைக்கே சென்று மிரட்டுகிறார். 

சமூக வலைதளங்களில் மார்பிங் செய்யப்பட்ட பல்வேறு படங்களை வெளியிட்டு அவரது குடும்பத்தினரை மிரட்டத் தொடங்கினார். 

அந்த அதிகாரி தனக்கு பதிலளிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?  

என் சாவுக்கு காரணம் நீங்கள் தான் என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார்.

சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அந்த அதிகாரியின் வீடுகள், அவரது உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று மிரட்டுகிறார். 

கேமராவில் மட்டும் ஆவிகள் சிக்குவது ஏன்?

இதனால் பயந்து போன அந்த அதிகாரி வீட்டினர் சத்யபாமா மீது புகார் அளித்துள்ளனர். 

இதனால், சென்னையில் வசித்து வந்த சத்யபாமா தற்போது புதுச்சேரிக்கு சென்று தங்கி இருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சத்யபாமாவிடமே விசாரித்தோம். நீங்க சொல்ற எல்லா ஆம்ளைங்களுமே எனக்கு தெரிந்தவர்கள் தான். 

கும்பகோணத்தை சேர்ந்த கில்லாடி பெண்... புது டெக்னிக்கில் மிரட்டும் சத்யபாமா !

அவர்கள் எல்லோரும் என்னைப் பயன்படுத்தி தூக்கி எரிந்து விட்டனர். கடைசியில் நான் தான் யாரும் இல்லாமல் நிற்கிறேன். 

எல்லாமே என் தவறுதான். இப்போது நான் என்ன செய்வது? இரண்டாவது திருமணம் செய்து கொண்டது சட்டப்படி தவறு தான். 

தங்கம் பற்றி உங்களுக்கு முழுமையாக தெரிய !

இப்போது என்னால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியாது. எனக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. 

அந்தக் குழந்தையை வளர்க்க வேண்டியது என் பொறுப்பு. அவளுக்காக வாழ வேண்டும். என்னை இத்தோடு விட்டு விடுங்கள். 

நான் இனி யாருடைய வாழ்க்கையிலும் தலையிட மாட்டேன் என்கிறார்.  

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)