மேலக்காவேரியில் ஆட்டோ ஓட்டுநர் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை !

0

கும்பகோணம் பகுதி மேலக்காவேரியில் இளம்பெண் ஒருவர் தன்னை ஆட்டோ ஓட்டுநர் போட்டோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

மேலக்காவேரியில் ஆட்டோ ஓட்டுநர் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை !
முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்னாள் நிர்வாகிகள்
மேலும் அதே ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட ஐந்து பேர் பெண்களை போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி இன்டர்நெட் மூலம்,

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பள்ளிவாசல் முன்னாள் நிர்வாகிகள் மூலம் போலீஸிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறைவான கலோரி உடைய அஸ்பாரகஸ் சூப் செய்வது எப்படி?

கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்தவர் சனா (28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . சரீனா தன் இரண்டு பிள்ளைகள் மற்றும் மாமியாருடன் மேலக்காவேரியில் வசித்து வருகிறார். 

இவருடைய கணவர் சவுதி அரேபியா நாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் வெளியே சென்றால் ஒரே ஆட்டோவில் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் என்பவர் தன்னை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக சரீனா கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸிடம் புகார் செய்துள்ளார்.

அந்த புகார் மனுவில், `என் குழந்தைகளை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். 

மேலக்காவேரியில் ஆட்டோ ஓட்டுநர் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை !
அப்போது என்னிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, என்னை ஏமாற்றி என்னுடன் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோக்களை எடுத்து கொண்டார். 

பின்னர் அதை வைத்து அசாருதீன் என்னை மிரட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்தார்.

நார்ச்சத்து அதிகம் உள்ள கார்ன் காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி?

இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி என் வீட்டு வாசலுக்கு வந்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், என்னைப் பாலியல் உறவுக்கு அழைத்து கட்டாயப்படுத்தினார். 

மேலும் மூன்றாவது நபர் மூலமாக எனது மாமியாரிடம் தெரியப்படுத்தி எனது வீட்டில் பிரச்னை செய்திருக்கிறார். 

இதையடுத்து எனது மாமியார் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டார். அசாருதீன் மேலும் 20 பெண்களிடம் பழகி மிரட்டி பணம் பறித்துள்ளார். 

அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இதே போல் அசாருதீன் உள்ளிட்ட ஐந்து பேர், பெண்களை மிரட்டி இன்டர்நெட் மூலம் பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர். 

வலங்கைமானில் நகைகளை பறித்து மிரட்டிய போலீசார்... உரிமையாளர் போராட்டம் ! 

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கும்பகோணம் போலீஸ் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலக்காவேரியில் பாலியல் தொல்லை !

இது குறித்து புகார் அளித்தவர்கள் தரப்பில் பேசினோம். `இளைஞர்கள் ஐந்து பேர், பெண்கள் சிலரிடம் பழகி போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு, 

பின்னர் அதை வைத்து மிரட்டி இன்ட்ர்நெட் மூலம் அந்தப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகத் தெரிகிறது. 

இதைச் செய்த அந்த இளைஞர்களுக் குள்ளேயே பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து விஷயம் வெளியே தெரிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் ஆலோசனை நடத்தி அசாருதீன், அப்துல் ரஹ்மான், அகமது ஜப்ரான், 

சதக்கத்துல் ஆசிப் பாட்ஷா, பவாஸ் அகமது ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், போலீஸிடம் புகார் அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தனியா சேர்த்து தயாரித்த நீரை தினமும் ஏன் பருக வேண்டும் தெரியுமா?

ஆனால் ஜமாத்தில் உள்ள நிர்வாகிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தனர். 

மேலக்காவேரியில் ஆட்டோ ஓட்டுநர் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை !

ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து, மேலக்காவேரி பகுதியிலுள்ள சில பெண்களைப் பணத்துக்காக இணையதளம் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இந்தச் செயலில் ஈடுபட்ட அவர்கள் மீது வழக்கு பதிந்து, உடனடியாக விசாரித்து, கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். 

இதைத் தீர விசாரிக்கும் பட்சத்தில் பொள்ளாச்சியைப் போன்று இங்கேயும் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவம் நடந்திருப்பது தெரிய வரும்” என்றனர். 

இது தொடர்பாக கும்பகோணம் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் உத்தரவில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு அசாருதீனைத் தேடி வருகின்றனர்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)