கும்பகோணம் அம்மா உணவகத்தில் உணவு வழங்க ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ !

0

கும்பகோணம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். 

கும்பகோணம் அம்மா உணவகத்தில் உணவு வழங்க ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ !
அப்போது, மருத்துவா்களிடம் எவ்வளவு நோயாளிகள் தற்போது சிகிச்சை பெறுகின்றனா், மருத்துவப் பணியிடங்கள் போதுமானதாக உள்ளதா, மருந்துகள் கையிருப்பு உள்ளதா என கேட்டறிந்தாா். 

மேலும், பொது மக்களுக்குத் தரமான சிகிச்சையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

அதை தொடர்ந்து கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, தமிழக அரசால் லாக்டெளன் அறிவிக்கப்பட்டு, அது செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. 

இந்த நேரத்தில் கும்பகோணம் நகராட்சி சார்பில், தஞ்சாவூர் சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. 
பர்கர் பற்றிய எச்சரிக்கை தகவல் !

இங்கு காலையில் டிபன், மதியம் தயிர், சாம்பார், எலுமிச்சை, புளி உள்ளிட்ட சாதங்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ரன. 

வருமானத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் மற்றும் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள், அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் லாக்டெளன் முடியும் வரை,

தினமும் அம்மா உணவகத்தில் தன் சொந்தச் செலவில் உணவு வழங்க கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் காலை, மதியம் என இரண்டு வேளை உணவுக்கான செலவை வழங்கி வருகிறார். 

இதயத்தை ஆரோக்கியமா வச்சுக்கணுமா?
இந்தநிலையில், அம்மா உணவகத்தில் காலை, மதியம் என இரண்டு வேளை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இரவும் உணவும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். 

இதற்காக நகராட்சி நிர்வாகத்திடம் பேசி தினமும் இரவு டிபன், மதியம் காய்கறிக் கூட்டுடன் சேர்த்து சாதம் வழங்குவதற்குத் தேவைப்படும் பணத்தைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி யிருக்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)