கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணே பெண்ணை தாக்கிய சம்பவம் !

0

பெண் ஒருவர் பேருந்து நிலையத்தில் தோசை கரண்டியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணே பெண்ணை தாக்கிய சம்பவம் !
ஸ்ரீகுமார் என்ற நபர், கன்னியாகுமரி மாவட்டம் ராமன் பரம்பு பகுதியில் வாழ்ந்து வருகிறார். 

தக்கலையில் உள்ள காமராஜர் பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்தி வரும் இவர், பத்மநாபபுரம் நகர பாஜக முன்னாள் தலைவராக இருந்துள்ளார். 

இந்நிலையில், இவரது கடையில் இரண்டு பெண்கள் வேலை செய்து வந்துள்ளனர். திடீரென ஒரு நாள் அவர் கடையில் உள்ள இரண்டு பெண்களில் ஒருவருக்கு வேலை இல்லை என்று கூறியுள்ளார்.

குண்டாகாதீங்க... அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது !
இதனால், ஏற்கனவே வேலை பார்த்ததற்கான சம்பளம் கேட்டு இன்று கடைக்கு வந்த அப்பெண், பணத்தை கேட்டு முறையிட்டார்.

அப்போது கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேறொரு பெண்ணுக்கும், இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. 

அதன் உச்ச கட்டத்தில் ஒரு பெண் மற்றொரு பெண்ணை அகப்பையால் திடீரென தாக்கினார். உடனே பேருந்து நிலையத்தில் நின்றவர்கள் தாக்கப்பட்ட பெண்ணை தாக்குதலில் இருந்து மீட்டு அனுப்பி வைத்தனர்.

பெண்கள் டென்ஷன் இல்லாமல் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

எனினும் அவர் பையோடு வந்தபின் மீண்டும் அவரை தாக்க முயற்சி செய்துள்ளார். 

ஆனாலும் பொதுமக்கள் தடுத்ததால் அவரால் மீண்டும் தாக்க இயலவில்லை. ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று கொண்டிருந்த பேருந்து நிலையத்தில். 

ஒரு பெண்ணை மற்றொரு பெண் அகப்பையால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)