என்னுடன் உறவு வைத்து கொண்டால் ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறேன் !

0

21ம் நூற்றாண்டில் இந்தியா எதிர் கொண்டிருக்கும் மிக மோசமான சூழல் இது, என நிச்சயமாக கூற இயலும். 

என்னுடன் உறவு வைத்து கொண்டால் ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறேன் !
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் மக்களை பாடாய் படுத்துகிறது, மற்றொரு பக்கம் மக்களே மக்களை பாடாய் படுத்துகின்றனர். 

அவசரம் அத்தியாவசியம் என தெரிந்ததும், ஆம்புலன்ஸ் வாடகையை உயர்த்திக் கேட்பது, கொரோனா பரவாமல் இருக்க மக்கள் பயன்படுத்தும் உபகாரணங்களான மாஸ்க், 

கையுறை போன்றவற்றின் விலையை உயர்த்தி விற்பது என பல்வேறு மோசக் காரியங்கள் நடந்து வருகிறது.

இதன் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதை தனது ட்வீட் மூலம் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார், படிக்கும் போதே, மனிதம் மாய்ந்து விட்டதா என்று தான் எண்ண தோன்றுகிறது.

நுரையீரல் மற்றும் சுவாசப் பாதைகளை கொரோனா வைரஸ் தாக்குவதால் முச்சுத் திணறல் மற்றும் சுவாச இழப்பு ஏற்பட்டு உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 

நம்முடைய உடல் உறுப்புக்களுக்கு பலம் தரும் சீரகம் !

ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறையும் போது, கொரோனா வைரஸ் பாதித்த நபருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படும். 

சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை என்றால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர் உயிரிழக்க நேரிடும். 

இந்த ஆபத்தை தடுக்க வேண்டும் என்றால் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும். 

மூச்சு விடுவதில் சிரமம், பதட்டம், சோர்வு, மனக்குழப்பம், தலைவலி ஆகியவை ஏற்பட்டால், உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

துரதிர்ஷ்டவசமான உடலமைப்பு கொண்ட கழுதைப்புலி !

அவசரத்திற்காக ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் சூழலில் ஒரு பெண் இருந்துள்ளார், அந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, நான் ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறேன், 

அதற்கு கைமாறாக நீ என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்வாயா என, பக்கத்து வீட்டில் இருந்தவர் கேட்டுள்ளார். 

அந்த பெண் தனது அப்பாவிற்காக உதவி கேட்க முயன்ற போது, இந்த அசிங்கமான சம்பவம் நடந்துள்ளது.

ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், "என் தோழரின் சகோதரியிடம், ஆடம்பர காலனியில் வசிக்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரர், என்னுடன் படுக்க வா, நான் உனக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறேன் என கூறியுள்ளார். 

அலங்காரத்தை விரும்பும் ஆண்களுக்கான ரகசியங்கள் !

(அந்த சகோதரி தனது அப்பாவின் உடல்நிலை காரணத்திற்காக ஆக்சிஜன் சிலிண்டர் உதவி நாடி வந்தவர்.)

இந்த ட்விட்டர் பதிவு ஆன்லைனில் பெரும் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. நிறைய பேர் இது குறித்து விவாதிக்க துவங்கியுள்ளனர். 

மேலும், சிலர், குறிப்பாக அந்த நபரின் பெயர் மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்தி அவமானப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். 

சிலர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வலியுறுத்தினார்கள். ஆனால், அந்த சகோதரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்த காமுகனின் ஆசைக்கு நோ சொல்லி நகர்ந்து விட்டார். 

உறவு வைத்து கொண்டால் ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறேன் !

இது போன்ற பெருந்தொற்று காலத்தில், மக்கள் உயிருக்காக போராடும் நேரத்தில் கூட இச்சை உணர்வுடன் மக்கள் இருப்பது, நாட்டின் பெயரையும், பெருமையையும் சீர்குலைய செய்கிறது என்பது, பெரும் வருத்தமாக உள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 

ஜாக்கிரதையாக போ தாயி... அன்பா பாசமா இருந்துட்டு போவோம்... ஞானகுருக்கள் !

இதனால், மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை வாங்கி வீடுகளிலேயே உபயோகப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால், பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரானிக் டிவைசான ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரை அதிக அளவு மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)