கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

0

கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாக் ஃபங்கஸ் (Balck Fungus - கருப்பு பூஞ்சை) எனப்படும் மியுகோர்மைகோகிஸ் (Mucormycosis) தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

கருப்பு பூஞ்சை என்றால் என்ன?
கணிசமாக இந்த தொற்றுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சில உயிரிழப்புகளும் பதிவாகி வருகிறது. 

மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகார்மைக்கோசிஸ் எனப்படும் ஒரு உயிர் கொல்லி பூஞ்சை நோய் பரவி வருவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

அதே போல கேரளாவில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற 3 பேர் உள்பட 7 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுக்குள் இல்லாத நீரிழிவு நோய், நீண்ட காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் பாதிப்பு ஏற்படுகிறது. 

இந்த நோய் மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்கள் அதிகரித்து கொண்டே வருகிறார்கள். 

இதையடுத்து மத்திய அரசும் இது குறித்து ஆதாரப் பூர்வமாக அறிவுரைகளை வழங்கியுள்ளது. இந்த நோய் தொடர்ந்து மருந்துகளை எடுப்போரை அதிகம் பாதிப்பதாக அரசு கூறுகிறது.

அரிதான நோய் கருப்பு பூஞ்சை நோய் என்பது அரிதான நோயாகும். ஆனால் மிகவும் மோசமான பூஞ்சை தொற்று. சுற்றுச்சூழலில் இயற்கையாகவே இருக்கும் மியூகார்மைசிட்ஸால் ஏற்படுகிறது. 

எந்த நோயாளியாவது ஏற்கெனவே உடல் நிலை பாதிப்பு இருந்தாலோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதாலோ ஏற்படுகிறது.

மியுகோர்மைகோகிஸ் (கருப்பு பூஞ்சை) என்றால் என்ன?

மியுகோர்மைகோகிஸ் (கருப்பு பூஞ்சை) என்றால் என்ன?

இந்த கருப்பு பூஞ்சை தொற்றானது ஒன்றும் புதியதல்ல. கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் தொற்று உருவான போதும் கூட இந்த கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. 

தற்போது கொரோனா தொற்றின் போதும் இது ஏற்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை கிருமிகள் சுற்றுப்புறச்சூழலில் எப்போதும் இருப்பவை தான். 

மனிதர்களின் சளி, கற்று, மண், தாவரங்கள், உணவு, அழுகிய பழங்களில் காணப்படும் பூஞ்சைகளில் இருந்து கருப்பு பூஞ்சை உருவாகிறது. ஆனால், இதன் தீவிரத்தன்மை குறைவு தான்.

யாரை தாக்கும்?

கருப்பு பூஞ்சை யாரை தாக்கும்?

மியுகோர்மைகோகிஸ் நோய்கிருமிகள் சுற்றுச்சூழல் கிருமிகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தவர்களையும், 

உடல்நலக் கோளாறுகளுக்காக மருந்துகளை உட்கொண்டு அதனால் கிருமிகளை எதிர் கொள்ளும் சக்தி குறைந்தவர்களையும் தாக்குகிறது. 

இணை நோய்கள் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், 

ஸ்டீராய்ட் மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களை இது அதிகமாக தாக்குகிறது. சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எவ்வளவு ஆபத்தானது? அறிகுறிகள் என்ன?

எவ்வளவு ஆபத்தானது? அறிகுறிகள் என்ன?

முகம், மூளை, மூக்கு, கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாக் ஃபங்கஸ் நோயால், சில நேரங்களில் பார்வையை இழக்க நேரிடும். 

நுரையீரலுக்கும் இது பரவும். சில நேரங்களி்ல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். 

கண்களைச் சுற்றி வலி, சிவப்பு நிறத்தில் தடிப்பு, காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், ரத்தக்கசிவுடன் வாந்தி, சளியின் நிறமாற்றம் உள்ளிட்டவைகள் இந்த நோயின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.

உரம் 

உரம்

அதாவது மண் தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையாலும் இது ஏற்படுகிறது. 

மண், காற்றில் கூட இந்த பூஞ்சை இருக்கிறது. இந்த பூஞ்சைகள் நாம் சுவாசிக்கும் போது உள்ளே சென்று சைனஸ் அல்லது நுரையீரலை பாதிக்கிறது.

சிகிச்சை முறை

கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை முறை
இந்த கருப்பு பூஞ்சையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். 

இதற்கான மருந்து, மாத்திரைகள் உள்ளன. பாதிப்பு அதிகமாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு 5 முதல் 10 நாட்கள் ஸ்டீராய்ட் மருந்து கொடுத்தாலே போதுமானது.

நோயை குணப்படுத்தலாம் இதற்கு பூஞ்சை தொற்றை ஒழிக்கும் ஆன்டி பயாடிக்குகள் மூலமாக நோயை குணப்படுத்தலாம். மேலும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மருந்துகளை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். 

கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பின்னரும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதனையிட வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். 

ஸ்டீராய்டு மருந்துகளை அளவாகப் பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் இது போன்ற 2ஆம்நிலை தொற்று வரக்கூடும். 

ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையின்றியோ, அதிகமாகவோ பயன்படுத்தக் கூடாது. 

ஸ்டீராய்டுகளை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். 

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)